FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 18, 2011, 06:17:13 PM

Title: புதுப்பாக்கள்
Post by: Global Angel on November 18, 2011, 06:17:13 PM
புதுப்பாக்கள்  

■அடுப்பில் தூங்கும் பூனை
 உழவன் வீட்டில் மிஞ்சியதெல்லாம்
 உடைந்த சோற்றுப் பானை

 ■ வாழும் வரைதான் போராட்டம்
 தன்னைச் சுற்ற பூமி மறந்தால்
 மண்ணில் சாயும் வேரோட்டம்

 ■தொடரும் மனக் கவலை
 அறுபதாமாண்டு விடுதலை நாளிலும்
தொங்கும் இரட்டைக் குவளை

 ■ஒன்றாய் இருந்தது ஊர்
 தெருத்தெருவாய் பிரித்து விட்டது
 அம்மன் கோவில் தேர்

 ■ஆண் ஆளுமை நாடு
 பெண் பிள்ளை மட்டும் ஈனுகின்ற
 அரசுத் தொட்டில் கேடு

 ■தொடரும் ஆண்டைகள் ஆட்சி
 எத்தனை கட்சிகள் ஆண்டபோதும்
 ஏழைக்கு இல்லை மீட்சி.



rasiththa kavithai ;)
Title: Re: புதுப்பாக்கள்
Post by: ஸ்ருதி on November 19, 2011, 07:28:23 AM
தொடரும் ஆண்டைகள் ஆட்சி
 எத்தனை கட்சிகள் ஆண்டபோதும்
 ஏழைக்கு இல்லை மீட்சி.


ஆண்டைகள் endra enna di ??
Title: Re: புதுப்பாக்கள்
Post by: RemO on November 19, 2011, 01:35:52 PM
naanum rasithen angel  ;)

// ஆண்டைகள் endra enna di ??// 
same doubt
Title: Re: புதுப்பாக்கள்
Post by: Global Angel on November 19, 2011, 07:56:46 PM
aandaikal en raal... aandaadandu kaalam thaangale aala vendum enra veri piditha adchiyalagal  ;)