FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on November 17, 2011, 04:43:58 PM
-
புதிய பாதுகாப்பு வசதிகள் உருவாக்கப்படவேண்டும்
சமீப காலமாக நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை, வீட்டில் தனியே இருப்பவர்களை கொன்றுவிட்டு பணம் நகை முதலியவற்றை அள்ளிக்கொண்டு ஓடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை பார்க்கும்போது மேலைநாடுகளைப்போல பாதுகாப்பிற்காக துப்பாக்கியை உபயோகிக்க அரசு லைசென்ஸ் கொடுத்தால் உதவியாக இருக்குமென்று தோன்றுகிறது அல்லது அங்குள்ளது போல A-Z பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தினாலும் சிறப்பாக இருக்கும், ஆனால் அந்தவகையான பாதுகாப்பிற்கு பரித்துரைக்கும் பாதுகாவலர்களிலேயே சில புல்லுருவிகளும் அல்லது கொலை மற்றும் கொள்ளையர்கள் நுழையவிடாமல் இருக்கவேண்டுமென்பதும் நமது நாட்டிற்கு மிகவும் முக்கியம்.
எதிர்கட்சியினர் ஆட்ச்சியை பிடித்து விட வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக அடுத்த கட்ச்சியினரை கொலை செய்வதும், அடுத்த கட்சியின் ஆதரவாளர்களை விரோதிகளாக எண்ணி வீடுகளையும் மனிதர்களையும் அவர்களின் உடமைகளையும் பல விதங்களில் சூறையாடி வருவதும் சர்வ சாதாரணமாக நடக்கும் சம்பவங்களாகி வருகின்ற நமது நாட்டில், வேலியே பயிரை மேய்ந்த கதைகள் டெல்லி போன்ற நகரங்களில் நடந்து வருவதை பார்க்கும் போது A-Z பாதுகாப்பிலும் அத்தகைய ஏமாற்றுக்காரர்கள் நுழைந்துவிடாமல் கவனத்துடன் இருக்க வேண்டியது இருக்கும்.
தனி மனித பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்ற இந்த காலத்தில் நிச்சயமாக வங்கிகள், ஷாப்பிங் மால்ஸ், ATM, வேலை பார்க்குமிடங்கள், அதிக ஆள் நடமாட்டமில்லாத இடங்கள், வீடுகள் பள்ளிகள், நிறுவனங்கள் என்று எல்லா இடங்களிலும் பாதுகாப்பு குறைந்து வருவதை தினந்தோறும் செய்திகள் நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. இதற்க்கான பாதுகாப்பிற்கு முதிய முறைகளை மேலைநாடுகளைப் போல அறிமுகப்படுத்த வேண்டும், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, எத்தகைய மோசடிகள் கொள்ளைச் சம்பவங்கள், திருட்டுகள் நடந்து வருகிறது என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகள் வாயிலாகவும் மற்றும் பாமர மக்களிடம் சென்றடையும் வகைகளில் பிரபலப்படுத்தப் பட வேண்டும்.
அத்துடன் அவசர உதவிக்கான மையங்களை உருவாக்கி சேவை மையங்களின் தொலைபேசி அல்லது கைபேசி எண்களை பொதுமக்கள் கூடும் கடை வீதிகள் தெருக்களில் விளம்பரப் படுத்த வேண்டும். அத்தகைய எண்களுக்கு கட்டணம் வசூலிக்ககூடாது. தொடர் வண்டிகளில் உள்ள அபாயச் சங்கிலியைப் போல வீடுகளில் அபாய மணிகள் அமைக்கப்பட்டு அவை காவல் நிலையங்கள் அல்லது அவசர உதவி மையங்களை இணைக்கச் செய்ய வேண்டும். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும், ATM, வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், ஹாஸ்டல்கள் , மற்றும் தெருக்கள் மக்களால் சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டால், பிரச்சினை ஏற்ப்படும் நபர் உடனே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை பெறுவார்.
தனி மனித பாதுகாப்பு என்பதை முக்கியமான பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அவற்றை தடுக்க புதிய முறைகளை உருவாக்கி செயல் படுத்தவேண்டும்.
-
// மேலைநாடுகளைப்போல பாதுகாப்பிற்காக துப்பாக்கியை உபயோகிக்க அரசு லைசென்ஸ் கொடுத்தால் உதவியாக இருக்குமென்று தோன்றுகிறது //
itha thavara use pana chance irukey
-
thonrukirathu.... aana kodukanum kattayamnu thonalai.. neye enniya sutuduve ;D
-
ena sola vara kodukanuma ila kudatha ??