FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on November 16, 2011, 05:24:02 PM

Title: கண்ணால் காண்பது.....பொய்
Post by: Global Angel on November 16, 2011, 05:24:02 PM
கண்ணால் காண்பது.....பொய்  


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, ஆனால் இது எல்லோருக்கும் எல்லா சமயங்களிலும் பொருந்துவதே இல்லை. இதனால் பல விதமான இழப்புகளை பொதுமக்கள் சந்திக்க நேருவதும் வாடிக்கையாகி வருகிறது. சிலரது புறத்தோற்றத்திற்கும் முகபாவனைகளுக்கும் துளியேனும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு முற்றிலும் வேறான உண்மைகள் உள்ளடங்கி கிடக்கின்றது. இப்படித்தான் பல கொள்ளை திருட்டு கொலை போன்ற சம்பவங்கள் என்று எங்கு பார்த்தாலும் நடந்து வருகிறது. நடை, உடை, பாவனையை வைத்து ஒருவரை பற்றி தீர்மானிக்க இயன்ற காலம் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆளை பார்த்தாலே இவர் இப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பதை பறை சாற்றிய காலம் தற்போது இல்லை. இதனாலே ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் எங்கேயும் சகஜமாகி வருகிறது.

இதனால் யாரையும் நம்புவது முற்றிலும் இல்லாமல் அழிக்கப்பட்டு வருகிறது. 'போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்'என்று விளம்பரங்களில் மற்றும் பொருட்களின் மீதும் எழுதப்பட்டு வெளியிடுவதுண்டு ஆனால் தற்போது போலிகளில் கூட 'போலிகளைக்கண்டு ஏமாறாதீர்கள்' என்கின்ற வாசகம் அச்சிடப்பட்டு விற்ப்பனைக்கு வருகின்ற அளவிற்கு போலிகளின் வரவு அதிகரித்து உள்ளது. மனிதனை மனிதன் ஏமாற்றும் காலம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது, எப்படியாவது சுக வாழ்க்கை அடைந்துவிட்டால் போதும் என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. விஜிலன்ஸ் ஆபீசர், இன்கம் டாக்ஸ் ஆபீசர், காவல் துறையினர், மருத்துவர், மெடிகல் ரெப்ரசன்டேடிவ், டாக்ஸ் கலக்டர் என்று இவர்களின் வேஷத்திற்கு முடிவே இல்லாமல் இருக்கிறது.

இரவில் வீடுகளில் கொள்ளையடிக்கும் தொழில் அமோகமாக நடத்தப்படுகிறதை சமீபத்திய செய்திகள் நமக்கு தெரிவிக்கிறது. திருடுகின்ற வீட்டின் சமயலறையில் இருக்கும் உணவை தின்று மதுபானத்தை அங்கேயே குடித்துவிட்டு அவர்கள் வீட்டின் பீரோவை உடைத்து கொள்ளையடித்து போகும் பிச்சைகார திருடன், நகைகளை பாலீஷ் போட்டு தருவதாக கூறி ஏமாற்றி எடுத்துகொண்டு தலைமறைகின்ற திருடன், இரவு நேரத்தில் வீட்டிற்க்குள் திருட போகின்ற சமயத்தில் அவர்கள் வீட்டின் கட்டிலில் நடக்கும் உடலுறவு காட்சிகளை கண்டு ரசிக்கும் அல்ப்பன், திருடிக்கொண்டு போகும்போது அவர்கள் வீட்டு வாகனத்திலேறி தப்பிக்கும் கேடு கெட்டவன், இரண்டு அல்லது மூன்று கிராம் தங்கதோடு அல்லது மூக்குத்திக்காக வயதான கிழவியை கொன்றுவிட்டு காதை அறுத்துக்கொண்டு போகும் மூர்க்கன் என்று இவர்களைப் பற்றிய விவரங்கள் நம் சிந்தையை பேதலிக்க வைக்கின்றது.

சிறிய குழந்தைகளை கடத்திச் சென்று பேரம் பேசும் உழைக்க லாயக்கற்ற முடவன், அடுத்தவர் மனைவியை அடுத்தவர் உழைப்பை அபகரித்து உல்லாசம் தேடும் முடவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருவதை காவல்துறை தடுக்க முயற்ச்சிகள் எடுக்க வேண்டும். சமீபத்தில் கோவை அருகே நடந்த கொள்ளை சம்பவத்தில் திருடு போன ஆயிரம் சவரன் நகைகள் மற்றும் கொள்ளை கும்பலை காவல்துறை கண்டு பிடித்ததைப் போன்று, நடிகையின் பெற்றோரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற திருடர்களை உடனே காவல்துறை பிடித்ததை போன்றே ஏனைய திருடர்களையும் கொள்ளை மற்றும் கொலை ஏமாற்று போன்றவற்றில் ஈடுபட்டு மக்களை துன்பத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக்குகின்ற சமூக விரோதிகளை பிடித்து சில வருட சிறை தண்டனை மட்டும் கொடுக்காமல் கடும் தண்டனைக்குட்படுத்தினால் மட்டுமே மீண்டும் புதிய திருடு கொள்ளை கொலை ஆட்கடத்தல் போன்ற சமூக விரோதிகளின் பெருக்கம் குறைக்க இயலுவதுடன் மீண்டும் நடக்காமல் தடுக்க அதிகபட்ச தண்டனைகள் கொடுக்க வேண்டும், சிறையிலிருந்து வெளி வரும் இவர்கள் மீண்டும் அதே குற்றங்களில் ஈடுபட இயலாவண்ணம் தவிர்க்க இயலும்.

சிறப்பான முறையில் காவல்துறையினர் இயங்குவதனால் தான் எளிதில் கொள்ளையர்களை கொலைகாரர்களை பிடிக்க முடிகிறது, ஆனால் மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் பெருகாமல் தடுக்க சட்ட திருத்தங்கள் செய்வது அரசின் கடமையாகும்.


Title: Re: கண்ணால் காண்பது.....பொய்
Post by: RemO on November 16, 2011, 11:55:13 PM
kutram seiravangala pidichu thadukuratha vida nama emarama irukurathu than nalathu
Title: Re: கண்ணால் காண்பது.....பொய்
Post by: Global Angel on November 17, 2011, 12:29:23 AM
ovoru nimisamum emaatuvatharuku 9 perumeemaruvatharku 1 thanum pirakiraanam dad solvaaru  ;D
Title: Re: கண்ணால் காண்பது.....பொய்
Post by: RemO on November 17, 2011, 12:31:59 AM
ha ha mams sariya than solurar