மசாலா தட்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2009%2Faug%2F14082009%2Fav60b.jpg&hash=b1820ffe2adfb615b3f73ce1afffb28cd212d783)
தேவையானவை:
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியைத் தண்ணீரில் களைந்து, நிழலில் உலர வைத்து அரைத்த மாவு) - 2 கப், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவை வெறும் கடாயில் கை பொறுக்கும் சூட்டில் வறுத்தெடுக் கவும். இதனுடன், தேங்காய் துருவல், வெண்ணெய், பெருங்காயத் தூள், எள், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். பிறகு, தண்-ணீர் விட்டு தட்டை-களாக செய்து காய்ந்த துணி-யில் போடவும். அரை மணி நேரம் கழித்து, (ஈரப்பதம் போனதும்) எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.