FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 10:04:14 AM

Title: இன்றைய சமுதாயம்....
Post by: ஸ்ருதி on November 14, 2011, 10:04:14 AM
இன்றைய சமுதாயம்....
பணத்தை தேடி
குடும்பத்தை மறந்த
தலைவன்..
தொலைக்காட்சி தொடரில்
மூழ்கி அழுது புலம்பும்
தலைவி....
வீட்டில் இருக்க வேண்டிய
பெரியோர்கள் நலிந்து
முதியோர் இல்லத்தில்...

பொய் பேசி பணம்
வாங்கி நட்பு வட்டாரத்துக்குள்
சீரழியும் மகன்....
இளையத் தலைமுறை என்று
உடையில் கவனம்
மறந்த மகள்....

வேலை தேடி அயல் நாடு
சென்று எல்லாம் தொலைத்து
வெறும் கையில் நாடு
திரும்பும் இளைஞர்கள்...
யாரோ விரித்த வலையில்
விழுந்து தீவிரவாதி-யாய்
மாறும் கூட்டம் ஒரு புறம்....
காதல் காதல் என்று
பித்து பிடித்து அலையும்
கூட்டம் மறுபுறம்....

குடும்பத்திற்ககா
கூலியாய் மாறும்
குழந்தைகள்...
மனைவியை கர்ப்பத்தால்
மட்டுமே நிரப்பும்
குடிகாரன்......
பள்ளியை மறந்த
குழந்தை தொழிலாளிகள்.....

மக்களின் வறுமையை
சாதகமாகி சுகமாய்
வாழும் அரசியல்வாதி.........
இது தான் நம் செழுமையான
சமுதாயம்......

Title: Re: இன்றைய சமுதாயம்....
Post by: micro diary on November 16, 2011, 03:17:27 PM
வேலை தேடி அயல் நாடு
சென்று எல்லாம் தொலைத்து
வெறும் கையில் நாடு
திரும்பும் இளைஞர்கள்...
யாரோ விரித்த வலையில்
விழுந்து தீவிரவாதி-யாய்
மாறும் கூட்டம் ஒரு புறம்....
காதல் காதல் என்று
பித்து பிடித்து அலையும்
கூட்டம் மறுபுறம்....

ounamiana varigal shruthi
Title: Re: இன்றைய சமுதாயம்....
Post by: Global Angel on November 16, 2011, 04:18:14 PM
nice kavithai  ;)
Title: Re: இன்றைய சமுதாயம்....
Post by: ஸ்ருதி on November 16, 2011, 08:15:10 PM
thanks micro and rose  ;)