FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 18, 2013, 09:35:58 AM
-
சேமியாவை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான எளிதாக சமைக்க கூடிய பிரியாணி.
தேவையான பொருட்கள்:
சேமியா – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
கேரட் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பட்டாணி – 25 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 1 பல்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2 தேக்கரண்டி
செய்முறை
சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு காரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு ,தண்ணீர் சேர்த்து
காய்களை முக்கால்வாசி வேகவிடவும்.
200 கிராம் சேமியாவுக்கு 400 கிராம் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி கிளறி இறக்கவும்.