FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on November 13, 2011, 12:29:38 AM

Title: கலப்படம்
Post by: RemO on November 13, 2011, 12:29:38 AM
உணவில் உருவாகி
நோய் தீர்க்கும் சேவையில்
வேரூன்றி
தான் நலம் வாழ
தன்னலம் போற்றும்
மாபெரும் மாந்தர்களால்
பேணப்பட்டு வளர்ந்த
கலப்படம்
இன்று நாம் பேசும்
தாய் மொழியில்.

பிழைக்க வழி தேடி
பிற இடம் சென்றும்
தாயை மறப்பதிலையே
தாய் மொழியை மட்டும் ஏன்??

அறிய சொற்கள் ஆயிரமாயிரம் இருந்தும்
அந்நிய மொழியை நாடுவதேனோ??

இன்பமான தருணத்தில்
ஈன்றவளை மறப்பது போல
இனிமையான தமிழை மறுப்பது ஏனோ??

துன்பம் நம்மை துளைதேடுக்கும் தருணத்தில்
அம்மா என்று அழைப்பதின் மர்மம் தான் என்ன??

அழகான கன்னிக்கு அரிதாரம் பூசி
அழகை குலைக்கும் அவசியம் ஏனோ?

தன் உயிரை
தாய் மொழிக்காய்
தானம் தந்தவர்கள்
இந்த அசிங்கமான
அரிதாரத்தை
காண நேர்ந்தால்
நெஞ்சுரம் மிக்க
அவர் இதயமும்
மலர்ந்த பூ தீக்கிரையாவதை போல்
கருகத்தான் செய்யும்

கலப்படமற்ற தாய்பால் போல்
கலப்பில்லாமல்
பருகுவோம்
தாய் மொழியை...
Title: Re: கலப்படம்
Post by: Global Angel on November 13, 2011, 06:17:34 AM
Quote
கலப்படமற்ற தாய்பால் போல்
கலப்பில்லாமல்
பருகுவோம்
தாய் மொழியை

yaarala mudium  ::)