FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 01, 2013, 11:44:01 PM
-
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு மஞ்சள் தூள், உப்பு மற்றும் தக்காளி சேர்த்து, தீயை குறைவில் வைத்து, தக்காளி நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசிந்ததும், பன்னீரைப் போட்டு நன்கு கிளறி, 4-5 நிமிடம் வேக வைத்து, இறக்கினால், பன்னீர் தோசைக்கான பன்னீர் மசாலா ரெடி!!! இதனை தோசை சுடும் போது, தோசையின் மேல் பன்னீர் கலவையை பரப்பி, எண்ணெய் ஊற்றி வேக வைத்து, பின் மடித்து, அதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.