FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 26, 2013, 11:34:44 PM
-
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல், கேரட் துருவல், ஆய்ந்து நறுக்கிய கீரை – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு புட்டு மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். புட்டுக்குழாயில் பிசறிய அரிசி மாவை முதலில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவலை வைக்கவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவுடன் கேரட்டை சேர்த்துக் கலந்து வைக்கவும். அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவில் போட்டுப் பிசறிய கீரையை வைக்கவும். அதன்மேல் கொஞ்சம் தேங்காய்த் துருவலை தூவவும். இதனை ஆவியில் வேக வைத்து, வெந்ததும் கம்பியால் புட்டை வெளியே எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: கார்போஹைட்ரேட், விட்டமின், தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய, எண்ணெய் கலக்காத உணவு இது. எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.