FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 26, 2013, 11:33:35 PM
-
தேவையானவை: நன்கு கழுவி, நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், மைதா, கோதுமை மாவு – தலா கால் கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், மைதா, கோது மாவை அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறி கலந்த மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே, மீன் வடிவத்தில் உருட்டவும். இதனை, தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன் மூலம் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும்.