FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 25, 2013, 10:54:39 AM

Title: ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி
Post by: kanmani on September 25, 2013, 10:54:39 AM
தேவையானவை :

சிக்கன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
தக்காளி -500 கிராம்
தயிர் – 1கப்
சிகப்பு மிளகாய் தூள் – 1 1/2 தேக்க ரண்டி
மஞ்சள் போடி – 1/2 தேக்கரண்டி
நெய் – 150 கிராம்
இஞ்சி – 1 1/2 ஸ்பூன்
பூண்டு – 1 1/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா – 1 1/2 கப்
ப. மிள்காய் – 5
பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் – 500 கிராம்
தணியா பொடி-1 தேக்கரண்டி
கலர் பொடி – 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் – 1
நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பெரிய கடாயில் எண்ணையுடன் நெய் ஊற்றி பாதி வெங்காயம் நறுக்கிப் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும் பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் .ஆகியவற்றை போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கிய தும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.

2. பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி மீதி கொத்த மல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும். சிக்கன் நன்றாக வெந்த்தும் எண்ணைய் மேல் வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்

3. தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும். அரிசி யை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து நன்றாக வடிகட்டவும். அரிசியை போட்டு நன்றாக கிளரவும். அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்க வேண்டும்.

4. முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை குறைக்கவும் பாதி எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும். சட்டி்யை சுற்றிலும் துணி கட்டி தம்மில் போடவும் 10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.