FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on September 21, 2013, 12:36:37 PM

Title: பார்வையில் கரைகின்றேனடி..
Post by: PiNkY on September 21, 2013, 12:36:37 PM

பனி துளியாய் கரைகின்றேனடி..
உன்னை பார்க்கும் நொடிகளில்..!!
கம்பனுக்கும் கவிதை மறக்கும்..
உன் பார்வையை சந்தித்தால்.!!
உனக்காக உருகும் என் உயிர்..
உன் விழி அசைவில் உயிர் பெரும்..!!
யுகங்கள் கடந்தாலும் ..
உன் காதலை அடைவேன் ..
உன் ஒரே ஒரு பார்வையில் உயிர் பெற்று..!!

உன் பார்வையின் தீர்க்கத்தை உணர்ந்தவன் நான் ..!!
என்னை உன் பார்வையால் வதைப்பதேனோ ..??
எனக்கு உயிர் அளிப்பதும் உன் பார்வையே.!!
என் உயிரை பறிப்பதும் உன் பார்வையே..!!
இருந்தும் உணர்கிறேன் சுகமான வேதைனையை..!!
உன் சிறு பார்வையில்..!!


Title: Re: பார்வையில் கரைகின்றேனடி..
Post by: micro diary on September 23, 2013, 01:26:51 PM
எனக்கு உயிர் அளிப்பதும் உன் பார்வையே.!!
என் உயிரை பறிப்பதும் உன் பார்வையே..!!
இருந்தும் உணர்கிறேன் சுகமான வேதைனையை..!!
உன் சிறு பார்வையில்..!!


romba arumaiyana varigal chlzz otrai parvaiku than ethanai valimai nice
Title: Re: பார்வையில் கரைகின்றேனடி..
Post by: gab on November 08, 2013, 10:52:13 PM
நல்ல கவிதை முயற்சி தொடரட்டும் பிங்கி உங்கள் கவி பயணம்