FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 25, 2013, 03:39:24 PM

Title: உளுத்தம் பருப்பு பூரி
Post by: kanmani on August 25, 2013, 03:39:24 PM

உளுத்தம் பருப்பு - கால் கப்,
மெல்லிய ரவை - அரை கப்,
மைதா - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு.



உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். நான்
ஸ்டிக் கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, இந்தக் கலவையை வதக்கவும். ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து,
சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போலப் பிசையவும்.

இந்தமாவை அரை மணி நேரம் ஊற விடவும். சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் சிறிது குழித்து, நடுவில் பூரணம்
வைத்து மூட வேண்டும். பின்பு சிறு பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.