FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 21, 2013, 02:53:18 PM
-
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் நறுக்கிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, தனியாக 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பாகற்காயைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளியை சேர்த்து, 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
இறுதியில் வறுத்து வைத்துள்ள பாகற்காய், கரம் மசாலா, துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி விட வேண்டும்