FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Sprite on October 31, 2011, 10:16:43 PM

Title: பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Post by: Sprite on October 31, 2011, 10:16:43 PM
கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாம்.

அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சிலந்தி வலைகளும், கோழிக்கால்களும் தோன்றத் தொடங்கும். இவ்வாறு தோன்றும் கோடுகளும் கருவளையங்களும் கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சத்துமிக்க, ஆரோக்கியமான உணவு, போதிய உடற்பயிற்சி, மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.

இதோடு மட்டுமின்றி, வாரம் ஒரு முறை கண்களுக்கான மாஸ்க்கினைக் கொண்டு சுமார் 15 நிமிடங்கள் கண்களில் வைத்துப் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வரப் புத்துணர்வைப் பெற்றிடலாம். கண்களை மூடி மூச்சை நன்றாக ஐந்தாறு முறை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். நெற்றி, கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும், பாதுகாப்பினையும் தர வேண்டும்.

கருவளையங்களை தவிர்க்கும் வழி:

கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் - A (Retin - A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது.

தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண்களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிகமானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது. கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.

கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment):

சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு. இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது.

இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடிக்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.

வேதிச் சிகிச்சை:

வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெல்லிய கோடுகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்புறங்களில் ரெட்டினாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகின்றன. அப்பகுதியை நன்று ஆறியவுடன் பார்த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

வெயிலிலிருந்து பாதுகாப்பு:

சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலெட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்குதலுக்கு ஆட்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம், சூரிய ஒளியினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றினைக் (Skin Cancer)கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண்களின் கீழேயுள்ள தசைகளில் இறுக்கத்தையும் கருமையையும் படரச் செய்கிறது.

இம்மாதிரியான பின் விளைவுகளையும், காட்ராக்ட், கருவளையம் போன்ற சீர் கேடுகளையும் தவிர்த்து விட, நல்ல தரமான குளுமைக்கண்ணாடி (Cooling Glasses)களை அணிந்து கொள்ளலாம். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்கக் கூடிய வகையில் குடை மற்றும் கிரிக்கெட் குல்லா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

தொங்கு சதைக்கு அறுவை சிகிச்சை:

கண்களுக்குக் கீழே உள்ள பகுதி மிக மிருதுவாகவும் லேசாகவும் இருப்பதால் வெகு விரைவில் அழற்சிக்கு ஆட்பட்டு விடுகின்றது. சத்தற்ற உணவும், வேலைப்பளு மற்றும் மன இறுக்கம் போன்றவை இவ்வழற்சியை மேலும் தீவிரமாக்குகிறது. சில பெண்களுக்கு மரபியல் தன்மை காரணமாகவும் இந்நிலை ஏற்படச் சாத்தியமுள்ளது. வயதாகும் பொழுது, இத்தகைய தொங்கு தசைகள் முகத்தில் பெருங் குறையை உண்டாக்கி, தோற்றத்தையே சிதைத்து விடுகின்றன.

இவ்வாறாக ஏற்படும் கொழுப்பு சதையை பிளிபிரோம் பிளாஸ்டி (Blepheroplasty) எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்து சீர் செய்து விடலாம். ப்ரோ லிப்ட் (Brow Lift) என்னும் முறைப்படி ஒழுங்கற்று இருக்கும் புருவங்களை அழகாகத் தீட்டி கண்களை இளமையோடும் புதுப் பொலிவுடனும் இருக்கச் செய்யலாம். பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய்து வரும் மருத்துவர்களின் உதவியால் இக் குறைபாட்டை அகற்றிடலாம்.
Title: Re: பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Post by: Global Angel on October 31, 2011, 11:40:41 PM
nalla thagaval nam chat friendsku use aagum :)
Title: Re: பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Post by: Sprite on October 31, 2011, 11:48:11 PM
yan global chat il ituka figure ikku kannu sari ellaia ;)
Title: Re: பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Post by: Global Angel on November 01, 2011, 02:54:52 PM
Quote
yan global chat il ituka figure ikku kannu sari ellaia




sprite nenga otta posta padingoo muthala.. ;D
Title: Re: பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Post by: RemO on November 01, 2011, 08:09:03 PM
Quote
yan global chat il ituka figure ikku kannu sari ellaia


sprite nenga otta posta padingoo muthala.. ;D

Apple copy panurapa maranthutar pola iruku
:D
Title: Re: பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Post by: RemO on November 01, 2011, 08:17:50 PM
Machi nee ponugaluku use akura news matum than poduviya :(
Title: Re: பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Post by: ஸ்ருதி on November 09, 2011, 08:29:26 PM
oh Eye seee :D:D