FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 19, 2013, 11:21:26 AM

Title: செட்டிநாட்டு வேங்கரிசி மாவு
Post by: kanmani on July 19, 2013, 11:21:26 AM
வேங்கை நெல்லைத் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் கொட்டி, ஒரு கொதி கொதித்த பிறகு இறக்கி, மறுநாள் காலையில் கூடையில் கொட்டி, தண்ணீர் நன்கு வடிந்த பிறகு, ஒரு ஆழாக்கு (200 கிராம்) நெல்லை வட்டச் சட்டியில் (மண் இருப்புச்சட்டி) வறுக்கவும்.

ஒன்றிரண்டாகப் பொரிந்ததும் இறக்கிக் கொட்டி, வெயிலில் 3 நாட்களுக்கு காயப் போட்டு பிறகு நெல்லைக் குத்த (உரலில் போட்டு) வேண்டும்.

குத்திய அரிசியை நன்றாக முறத்தில் புடைத்த பின் ஒவ்வொரு பிடி அரிசியாக வட்டச் சட்டியில் போட்டு பொரித்தெடுத்து, பின்னர் வேங்கரிசி மாவாக மாவு மிஷினில் திரித்துக் கொள்ளவும்.

1. இந்த மாவை சர்க்கரை + தண்ணீர் கலந்து கெட்டியாக பிசைந்து சாப்பிட்டால் ருசியோ ருசி.

2. தண்ணீருக்குப் பதில் நெய் & 2 ஸ்பூன், சர்க்கரை & 8 ஸ்பூன், மாவு & 100 கிராம் கலந்தும் உண்ணலாம்.
மல்லித்தழை வாங்கியதும் சுத்தம் செய்து, தழை தனியாகவும், காம்பு தனியாகவும் டப்பாவில் மூடி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும். தழையை சமையலுக்கும், காம்பு சட்னிக்கும் உபயோகப்படுத்தலாம்.