FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Sprite on October 31, 2011, 10:07:57 PM
-
மௌனம் உடையா பொழுதொன்று நிலவும்
முகமெல்லாம் ஒரு சோகம் படரும்
நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும்
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்
உடைகூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்
உறக்கமது உச்சி வானம் தேடும்
உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்
பகலெல்லாம் பொழுது கணக்கும்
சட்டைப்பை சில்லறைத் தடவும்
முந்தானை ஓரத்தில் ஒரு கல்லேனும் முடியும்
படுக்க அன்றாடம் சுடுகாடே தேடும்
காதில் தனது பிள்ளை பேசினால் இனிக்கும்
வார்த்தை தடுமாறி பேரனின் ஒன்றோயிரண்டோ கேட்கும்
போகும்வரும் வாசலில் கண்கள் யாருக்கோ காத்திருக்கும்
போகாத உயிரை விட்டுவிட்டுப் பிடித்து வைக்கும்
வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்
வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்
வந்த துணையின் பிரிவதை யெண்ணி -
பழுத்த மனசது பாவம் கண்ணீராய் கரையும்
காலத்தை மனதால் கணமும் நொந்தே; நொந்தே; சாகும்!!
-
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்
உடைகூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்
nice ;)
-
super ah iruku machi
-
வயோதிகர்களின் உணர்வை சித்தரிக்கும் அருமையான கவிதை. எனது வாழ்த்துக்கள் sprite.
-
Nalla kavithai!