Title: Re: கவிதைகள் - மாறன்
Post by: Maran on July 18, 2013, 12:45:24 AM
மற்றவரின்
ஏழைப்பார்வையை தடுக்க போலி உடைகளையும் ....
ஏளனப்பார்வையை தடுக்க போலி புன்னகையும் ...
ஏமாற்றுப்பார்வையை தடுக்க போலி வாழ்கையையும் ...
வாழும் இன்றைய போலி மனிதனாகும் நான்...
நிம்மதியை மட்டும் நிஜமாய் தேடுவதெப்படி .!..!!
- Maran
Title: Re: கவிதைகள் - மாறன்
Post by: Maran on July 19, 2013, 07:56:45 PM
முரன்...
ஓயாமல் அலைகள் உழைக்கிறது ஓய்வு எடுப்பதோ கரையோரம் மனிதன் .
Title: Re: கவிதைகள் - மாறன்
Post by: Maran on July 28, 2013, 10:11:18 AM
முரண்பாடு
பஸ்ஸில் பார்ததும் பெரியப்பா கேட்டார் பார்த்து எவ்வளவு நாளாச்சு துரும்பா எளச்சிட்டியே? இறங்கி வருகையில் எதிரே இருந்தவரை மிதித்து விட்டேன் மிளா மாதிரி இருக்கியே பார்த்து வரக் கூடாதா? பதில் என்ன சொல்ல பத்து நிமிடத்தில் ஏற்படும் இந்த மாற்றத்திற்கு .....
Title: Re: கவிதைகள் - மாறன்
Post by: பவித்ரா on August 02, 2013, 08:45:00 PM
மனிதனும் ஒழைத்து களைத்து தான் எப்பவாவது கரையோரம் இளைபாரறான் மாறா நல்லா இருக்கு கவிதை
Title: Re: கவிதைகள் - மாறன்
Post by: Maran on August 04, 2013, 05:50:53 PM
ஏரியில் ஒருவன் !
உட்காரப்
புல்வெளி.
எதிரே
நீர்வெளி.
நீர்மேல் எண்ணெயாய்
சூரியன் .
பால் சொட்டுகளாய்
பறவைகள் .
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று .
தூரத் தூர ரயிலோசைக்கும்
செவிக் கூசும் நிசப்தம் .
.......................................
..........................
எல்லாம் தவிர்த்து
கவனமாய் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன் .
தொண்டையை கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு
மீனைக் காணும் ஆவலுடன் .
Title: Re: கவிதைகள் - மாறன்
Post by: Maran on August 24, 2013, 09:42:56 PM