பெயரில் என்ன இருக்கிறது ?
பொய்சாட்சி சொல்வதே
தொழிலாகக் கொண்டிருந்தார் அரிச்சந்திரன் ;
சொந்த ஊருக்கு மாற்றல் கோரியபோது
பத்தாயிரம் லஞ்சம் கேட்டார் காந்தி ;
அடுத்தவன் நிலத்தில் இரண்டடி ஆக்ரமித்து
வீடுகட்டியிருந்தார் கௌதமன் ;
தன் வீட்டு வெளிச்சம்
பக்கத்துக்கு வீட்டில் விழுவதைத் தடுக்க
சீக்கிரமே விளக்கை அணைப்பார் பாரி ;
ஊருக்கென்றால் உபதேசித்து
தனக்கென்று வந்தபோது கழுத்தறுப்பார் கண்ணன் ;
பெயரில் என்ன இருக்கிறது இப்போது
அழைக்கவும் அடையாளத்திற்கும் தவிர.
- Maran
வாழ்க்கைல பேருக்கும் ஆளுக்கும் சமந்தமே இல்ல தம்பி அத அழகா சொல்லிருக்க தொடர்ந்து எழுதுங்க அருமையாக உள்ளது