FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 29, 2011, 06:32:44 PM

Title: மகனே!!! வா!!
Post by: ஸ்ருதி on October 29, 2011, 06:32:44 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi25.photobucket.com%2Falbums%2Fc70%2Fdonachona%2Flady_crying_unframed.jpg%3Ft%3D1239210132&hash=cbbb3082e8fe00ac85a5a3577eed9c9e0ba235bf)

என் மகனே!!!
உன்னை பிடிக்குமடா
எனக்கு...
உன்னை பிரியமனம்
இல்லை எனக்கு...

உன் பள்ளிபருவத்தில்
நீ எனக்கு கொடுத்த
முதல் அன்பளிப்பு
புடவை!!
மறக்க முடியவில்லை.....

அம்மா "நீ மகாராணி"
உன்னை கண் கலங்காமல்
பார்ப்பேன் என்று
நீ சொல்லும் போது
உண்மையாய் நான்
மகாராணியானேன்!!!!

உன் ஒவ்வொர் முன்னேற்றத்திலும்
என்னை வந்து கட்டிப்பிடித்து
ஆசி கேட்கும் உன்னை
தழுவி முத்தம் தரும்
அந்த நிமிடங்கள்
இனி கிடைக்கபோவது
இல்லையாடா

ஆசையாசையாய்
பெண் பார்த்து திருமணம்
முடித்து பிரம்மித்தேன்
என் மகனே!!

நீ இவ்வளவு பெரியவன் ஆனது
கூட இந்தபாவிக்கு
தெரியவில்லை...
இன்னும் என்கண்ணில்
குழந்தையாகவே நீ!!!!

வாமகளே!!!! என்றேன்.....
அவளோ மாமி"யார்"
என்றாள்.....
நொடிந்து போனேன்...
அப்போதே உணர்ந்தேன்...

மகனே!!! வா!!
நாம் தனிக்குடித்தனம்
போகலாம்.. என்றேன்...
சென்றோம் இருவரும்....

நீ உன் மனைவியுடனும்
நான் முதியோர் இல்லததிலும்
தனித்தனியே
தனிக்குடித்தனம்....

மகனே!!!
எங்கு இருந்தாலும்
மறக்காமல் வந்துவிடு
நீ வராமல் என் உயிர்
பிரியாது...
Title: Re: மகனே!!! வா!!
Post by: RemO on October 29, 2011, 07:26:32 PM
//
நீ உன் மனைவியுடனும்
நான் முதியோர் இல்லததிலும்
தனித்தனியே
தனிக்குடித்தனம்....//

very nice

enaku rompa pidichurukudi
Title: Re: மகனே!!! வா!!
Post by: Global Angel on October 31, 2011, 04:51:28 AM
Quote
மகனே!!!
எங்கு இருந்தாலும்
மறக்காமல் வந்துவிடு
நீ வராமல் என் உயிர்
பிரியாது...

ovoru thaayin nilamayum ithuthaan :)
Title: Re: மகனே!!! வா!!
Post by: ஸ்ருதி on October 31, 2011, 09:35:42 PM
Quote
மகனே!!!
எங்கு இருந்தாலும்
மறக்காமல் வந்துவிடு
நீ வராமல் என் உயிர்
பிரியாது...

ovoru thaayin nilamayum ithuthaan :)
//
நீ உன் மனைவியுடனும்
நான் முதியோர் இல்லததிலும்
தனித்தனியே
தனிக்குடித்தனம்....//

very nice

enaku rompa pidichurukudi


Pirkalathil Namma nilai ennanu yaruku therium :D