FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on June 19, 2013, 10:54:38 PM
-
என்னென்ன தேவை?
வெள்ளைப் பூசணிச்சாறு (அரைத்து வடிகட்டியது) - 200 மி.லி.,
முந்திரிப்பருப்பு - 50 கிராம்,
வெள்ளரி விதை - 50 கிராம்,
பூசணி விதை - 50 கிராம், ஏலக்காய் - 10,
பனங்கல்கண்டு - தேவைக்கேற்ப,
நெய் - 1 டீஸ்பூன்,
தேன் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முந்திரி, வெள்ளரி விதை, பூசணி விதை, ஏலக்காயை தனித்தனியே வறுத்துப் பொடித்து வைக்கவும். பூசணிச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். பாதியாகச் சுண்டியதும், அதில் பொடித்து வைத்துள்ளதைச் சேர்த்து, நெய் விட்டு, பனங்கல்கண்டு சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்துக்கு நன்கு சுருண்டு வந்ததும், தேன் கலந்து பரிமாறவும். * கோடைக்கேற்ற இனிப்பு இது. உஷ்ணம் தணிக்கும். வியர்வை கட்டுப்படும். வாய்ப்புண் வராது. பெண்கள் வாரம் இரண்டு முறை இதை எடுத்துக் கொண்டால், வெள்ளைப்போக்கு நிற்கும்.