FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 27, 2011, 12:59:54 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi51.photobucket.com%2Falbums%2Ff372%2FLeslie639%2Fcry.jpg&hash=f999ee7e2273e194e17d679416dda9bff1dbc90e)
உன்னில் மாற்றம்
என்னுள் ஏமாற்றம்
இன்றும் ஒரே மனநிலையில் நான்
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய்???
பாசத்திற்கு அளவில்லை
அன்று...
பாசமே இல்லாததை போல
உணர்கிறேன் இன்று..
தனிமையில் தவிப்பதாய்
ஒரு கலக்கம்..
தினமும் தூங்க வைப்பாய்..
துயில் எழுப்ப மறப்பதும் இல்லை...
இன்று உனக்கு நேரம் இல்லையோ
என்னை நினைக்க கூட??
தினமும் எழும்புகிறேன்
ஏமாற்றத்தோடு...
அமைதியாய் இருந்தேன்
என்னுள் அமைதி இல்லை..
பேசுவதை கூட குறைத்து
மீண்டும் பாசத்தை தேடி
உள்ளம் பரித்தவிக்குது
உன்னால்...
எனக்கே எனக்கு என்று உன்னை
நினைத்தது தான் என் பிழையோ???
யாரிடமும் விட்டு கொடுக்க மனம் இல்லை..
என்னை மட்டும் ஏன் விட்டாய் நீ???
பிரிவு எல்லோருக்கும் வரும்...
பின்னாளில் பிரியப் போவதற்கு
இந்நாளில் ஒத்திகை ஏன்???
-
//
தினமும் தூங்க வைப்பாய்..
துயில் எழுப்ப மறப்பதும் இல்லை...
//
nice
-
அமைதியாய் இருந்தேன்
என்னுள் அமைதி இல்லை..
பேசுவதை கூட குறைத்து
மீண்டும் பாசத்தை தேடி
உள்ளம் பரித்தவிக்குது
உன்னால்...
nice ;)
-
thankss remo and rose