FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sameera on June 08, 2013, 09:00:12 PM

Title: நட்பு
Post by: sameera on June 08, 2013, 09:00:12 PM
கடவுள்
எல்லா இடமும் இருக்க முடியாது என்பதால்
அன்னையைப் படைத்தான்
முதல் அறிவைக் கொடுக்க தந்தையும்
தொடரும் அறிவைக் கொடுக்க குருவையும் கொடுத்தான்
இவர்கள் அனைவரும்
எப்போதும் என்னுடன் இருக்க முடியாது என்பதால்
உனது நட்பை படைத்தான்
இறைவன் ...

இதயத்தில்
இடம்
கொடுப்பவர்கள்
காதலர்கள் …

இதயத்தையே
இடமாக
கொடுப்பவர்கள்
நண்பர்கள் …
Title: Re: நட்பு
Post by: Global Angel on June 26, 2013, 01:49:11 AM
உங்கள் நட்பு உண்மையாய் இருக்க ஆண்டவன்  புரியட்டும் அழகான  கவிதை