FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 31, 2013, 10:54:56 PM

Title: ~ ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு !!! ~
Post by: MysteRy on May 31, 2013, 10:54:56 PM
ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு !!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fm.ak.fbcdn.net%2Fsphotos-d.ak%2Fhphotos-ak-ash3%2F529420_569527973081865_1172445318_n.jpg&hash=25ea509a624e6a1cb7626b0bed39062f1a700fae)


எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு - ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் - மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும்.

எண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, இலை சிவந்து வரும் பொது இறக்கி வைத்து ஆரவிடவேண்டும். பிறகு வடிகட்டி வைத்து கொண்டு , தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எண்ணையை தலை உச்சியில் வைத்து தேய்த்து, அரைமணி நேரம் ஊரியபின் - சியக்காய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளிக்கவேண்டும். தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு குளிக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது