FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on May 03, 2013, 10:57:50 PM
-
தேவையான பொருட்கள்:
உலர் சோயா பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 2
கிராம்பு - 4
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சோயா பீன்ஸை இரவில் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் 1 பட்டை, 2 கிராம்பு, பச்சை மிளகாய், சோம்பு, துருவிய தேங்காய் போட்டு நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயமானது பொன்னிறமானதும், தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் வேக வைத்துள்ள சோயா பீன்ஸ் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சோயா பீன்ஸ் குருமா ரெடி!!!