FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on October 22, 2011, 10:02:54 AM
-
தனிமை
20 வருடம் அறியாத ஒன்று
எனக்கு கற்றுக்கொடுக்க
மறந்தனர் என் தோழர்கள்
என்னவள் வந்த பிறகு
அவசியமானது,
அவளுடன்
என் காதலை வளர்க்க
அவசியம் என்பதால் விலை கொடுத்து
வாங்கினேன்
விலையாய் நட்பு!!!!
அவளுடன் நாங்களாய்
இருந்த பொது
தித்திக்க இனித்தது
அளவுக்கு மீறிய அமுதம் கூட
நஞ்சன்றோ
தித்திக்க இனித்த தனிமை
என்னவள் என நான் எண்ணியவள்
என்னை எண்ண மறந்த போது
எட்டிக்காயாய் கசந்தது
தனிமையில் இனிமை மட்டும் கண்டுணர்ந்த
எனக்கு தனிமையின் வெறுமை
என்னை வெறுமையாக்கிற்று
உறவில் என் வறுமையை உணர்த்திற்று
மதிப்பற்ற நட்பை விலைகொடுத்து
வாங்கிய தனிமை
வீணாகவில்லை
இன்று எனக்கு நல்ல ஆசானாய்
-
தனிமையில் இனிமை மட்டும் கண்டுணர்ந்த
எனக்கு தனிமையின் வெறுமை
என்னை வெறுமையாக்கிற்று
உறவில் என் வறுமையை உணர்த்திற்று
மதிப்பற்ற நட்பை விலைகொடுத்து
வாங்கிய தனிமை
வீணாகவில்லை
இன்று எனக்கு நல்ல ஆசானாய்
nadpu thavarinaalum kidaithu vidum kaathal thavarinal kidaipathilai... :)
-
en kidaikathu:D atha vida super fig kidaikum
-
அளவுக்கு மீறிய அமுதம் கூட
நஞ்சன்றோ
தித்திக்க இனித்த தனிமை
superrrrrrrrrr
-
Thanks