FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 21, 2011, 07:27:46 PM
-
மனித நேயம்
மண்ணுக்குள் புதைந்து
மாண்டு போயின
மக்களின் வாழ்வு..
மனிதனை மனிதனே
கொன்று
ஈழத்தில் மருண்ட மானாய்
மக்கள் உயிர்காத்துக்கொள்ள
அங்கும் இங்கும்
ஓடி திரிய
அணு ஏவுகணை வீசி
சில்லறை காசக
சிதறி போனது
எம் மக்களின்
பொன்னுடல்
அரசியல் வாதிகளின்
சுயநலமும்
பதவி ஆசையிலும்
பாழாய் போக
பார்த்துக் கொண்டு
நாவடக்கி
பேச்சுரிமையை பேணிகாத்து வரும்
இளைய சமுதாயம்....
கோடி கோடியாய்
ஊழல்...
தெரு கோடியில்
இன்னும் மாறாத
குடிசைகள்....
வளர்ந்த நாடு
இன்னும் வறுமையில்...
என்று மாறும் இந்நிலை
ஏக்கத்தில் மக்கள்
மனிதநேயம்
அழிக்க விடுமோ
இனி வரும் காலங்களில்
-
மனித நேயம் இன்னும் இருக்குன்னு எனக்கு தோணல
-
நல்ல கவிதை ஸ்ருதி...!!!
நன்றி...!!!
-
manitha neyam engadi ipo ellam vaaluthu h,,,,,,,,,,,,,,,,,,,,,m