FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 23, 2013, 11:05:14 PM

Title: காதல்
Post by: Jawa on April 23, 2013, 11:05:14 PM
உன் பாத சுவடு ஒற்றி
நடக்கிறேன்,சிறு குழந்தை போலவே.

உன் பாத மண்துகள்களை
சேமிக்கிறேன்.

நடந்து பழகும் சிறு
குழந்தையின் லாவகத்தோடு
உன் பாத தடங்களில்
என் பாதங்களை பதிக்கிறேன்.

காற்று கொண்டு வந்த
மண்ணின் துகள்கள்
என் விழி நிறைத்தாலும் ,
கண்ணீர் வரவில்லை

உன் பாத சுவடின்
மண்துகள்கள் என்பதால்
Title: Re: காதல்
Post by: Global Angel on June 26, 2013, 01:55:41 AM
கண்ணீர் எல்லா சந்தர்பத்திலும் வருவதில்லை என்பதற்கு ஒரு நல்ல கவிதை ஜாவா நன்று