FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 21, 2011, 08:10:40 AM

Title: பள்ளிப்பருவம்!!!
Post by: Yousuf on October 21, 2011, 08:10:40 AM
காலையில் எழுந்ததும் ஒரு நடிப்பு
அம்மா எனக்கு வாயிற்று வலி...
இந்த நடிப்பு பள்ளி செல்லாமல் இருப்பதற்கு
இன்னும் ஒரு சில நாட்களில்
காரணம் சொல்ல தெரியாமல்
நான் பள்ளி செல்ல மாட்டேன் என்ற அடம்பிடிப்பு...
அதையும் மீறி ரிக்சா வண்டியில் ஏற்றிவிடும் அம்மா

பள்ளிக்கு சென்றவுடன் சக மாணவர்களை பார்த்து...
இவர்களும் நம்மை போல் தான் என்ற சந்தோசம்
ஆசிரியர்களின் அரவணைப்பு ஒரு சின்ன சந்தோசம்
பள்ளி முடியும் நேரம் வந்தால் அதில் ஒரு சந்தோசம்...
பள்ளிக்கு விடுமுறை விட்டால் அளவிலா சந்தோசம்
எந்த கவலையும் இல்லாமல் தொடங்கிய வாழ்க்கை...

புத்தம் புது நட்புகள் துளிர் விட்ட காலம்
நண்பனோடு புளிப்பு மிட்டாய் சாப்பிட்ட காலம்
வீட்டுப்பாடம் செய்வதற்கு பிடிக்காத காலம்...
எதையும் விளையாட்டுத் தனமாக பார்கின்ற காலம்
நல்லது எது கேட்டது எது தெரியாத காலம்
சின்ன சின்ன ஆசைகள் உருவான காலம்
கவலைகளே இல்லாமல் வாழ்ந்தோம் நாளும்...!

மேல் வகுப்பு செல்ல செல்ல அதிகமான பொறுப்புகள்
தேர்வுகள் வந்துவிட்டால் அதிகமாகும் கசப்புகள்...
தேர்வுகள் முடிந்துவிட்டால் விடுமுறை கொண்டாட்டங்கள்
தேர்வுமுடிவு வருகையிலே மனதில் சில பதட்டங்கள்
தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்றால் மறுபடியும் கொண்டாட்டங்கள்...
இப்படித்தான் சென்றது மேல்நிலைக் கல்வி வரை வாழ்க்கை!

மேல்நிலை கல்வியிலே வாழ்கையில் சில மாற்றங்கள்
அரும்புமீசை துளிர்விட்ட காலம் அது...
நண்பர்கள் வட்டமோ அதிகமான காலம் அது...
பள்ளியின் இறுதி ஆண்டும் வந்தது
நட்பின் பிரிவை அப்பொழுது உணர்ந்தோம்
மீண்டும் எப்பொழுது நண்பர்களை பார்ப்போம் என்று நொந்தோம்...
மறுபடியும் குழந்தையாய் மாற ஆசைப்பட்டோம்
கவலைகள் இல்லாத பள்ளி பருவத்தை நாங்கள் இழக்க விரும்ப வில்லை என்றோம்!

சிறுவயதில் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு கரணங்கள் தேடினோம்
ஆனால் இப்பொழுது பள்ளியை விட்டு செல்லாமல் இருப்பதற்கு காரணங்கள் தேடுகிறோம்...
அப்போதும் எங்களால் தடுக்க இயல வில்லை
இப்போதும் எங்களால் தடுக்க இயல வில்லை...
இதுதான் இறைவனின் நீதி என்றால் கவலைகள் இல்லாத
பள்ளி பருவத்தை தந்த
இறைவனுக்கே எல்லா புகழும்!!!
Title: Re: பள்ளிப்பருவம்!!!
Post by: ஸ்ருதி on October 21, 2011, 03:21:42 PM

யூசப்..
ரொம்ப நல்லா இருக்கு.
எனக்கு ரொம்ப சந்தோசம்.
நான் சொன்ன தலைப்புக்கு நீங்க முயற்சி எடுத்து
கவிதை எழுதும் போது அதை படிக்கவே ஆர்வமா இருக்கு...
சந்தோசம் யூசப் ...உங்கள் முயற்சி தொடரட்டும்
இன்னும் நல்ல கவிதைகள் வர வாழ்த்துகிறேன்.
Title: Re: பள்ளிப்பருவம்!!!
Post by: Global Angel on October 22, 2011, 07:39:51 PM
jaaviyamaaaaaaaaaa oviymaaaaaaaaaaaaaaaaa kathai nalla irukku...
ops kavithai nalla irukku jusuf ....

lavithai concept ok .. kavithaikana santham koduthingana,.,, mega supera irukum.. ;)
Title: Re: பள்ளிப்பருவம்!!!
Post by: Yousuf on October 22, 2011, 10:02:34 PM
Aama santham na Yenna???? ::)
Title: Re: பள்ளிப்பருவம்!!!
Post by: RemO on October 23, 2011, 09:36:41 AM
Good try yousuf
nala eluthuringa(F)
Title: Re: பள்ளிப்பருவம்!!!
Post by: Yousuf on October 23, 2011, 02:25:48 PM
நன்றி ரெமோ மச்சி...!!!
Title: Re: பள்ளிப்பருவம்!!!
Post by: Global Angel on October 23, 2011, 08:20:37 PM
santhm enrathu kavithay naama padikum pothu oru thodarbu oli vnthutu irilkkum... katha solra pola ilamma antha olithan kavithai enra feel kodukum  
Title: Re: பள்ளிப்பருவம்!!!
Post by: Yousuf on October 23, 2011, 09:17:28 PM
Un mandaila kalla thooki pota kooda oru oli kekum antha oli pothuma...!!! :( :D