FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 20, 2013, 06:56:26 PM

Title: ~ உடற்பயிற்சி செய்யாவிட்டால் மரணங்கள் நிகழும், ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது:- ~
Post by: MysteRy on April 20, 2013, 06:56:26 PM
உடற்பயிற்சி செய்யாவிட்டால் மரணங்கள் நிகழும், ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது:-

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/17784_356803957753116_182288370_n.jpg) (http://www.friendstamilchat.com)


இன்று நமக்கு ஏற்படும் பெரும்பாலும் நோய்களுக்கு மிக முக்கிமான காரணம் உடற்பயிற்சியின்மையே.

நாம் உடற்பயிற்சி Regularஆக செய்தாலே நமது பல நோய்கள் காணாமல் போய்விடும்

உடற்பயிற்சி என்றால்

Cycling
Swimming
House Work / House Garden Work
Jacking / Running
Body Working
Excercise

மற்றும்

நமது உணவு முறையில் மாற்றம் வேண்டும்

கீரைகள்,
காய்கறிகள்,
பழங்கள்,
பயிறு, தானியங்கள் தினமும் அதிகம் சாப்பிட வேண்டும்

மற்றும்

Healar Baskar (ஹீளர் பாஸ்கர்) முறையில் சாப்பிட வேண்டும்
சாப்பிடும் போது
கைகால் கழுவி,
இறைவனை பிராத்தனை செய்து,
தரையில் உட்கார்ந்து,
முதலில் இனிப்பை சாப்பிட்ட பிறகு,
கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக, வாயை மூடி, நன்றாக மாவுபோல் மென்று திண்ண வேண்டும்
அறுசுவை உணவோடு, சாப்பிடும் போது, சாப்பிடும் முன்(30 min), சாப்பிடும் பின்(30 min) தண்ணிர் குடிக்க கூடாது
ஏப்பம் வந்த பிறகு சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்
சாப்பிடும் போது பேசக் கூடாது / போன் பேசக் கூடாது / டிவி பார்க்கக்க் கூடாது

மற்றும்

தரையில் அதிகமாக உட்கார்ந்து பழக வேண்டும்

Chair / Sofa (சோபா) – வில் உட்கார்ந்து இருப்பதை அதிகம் தவிர்க்க வேண்டும்
லண்டன்:உடற்பயிற்சி இன்மையும் புகைப்பிடித்தல் போலவே உயிருக்கு அச்சுறுத்தல் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமனால் ஏற்படும் மரணங்களுக்கு சமமாக உடற்பயிற்சி குறைவும் உலகெங்கும் மக்களை கொல்வதாக மருத்துவ இதழான ‘த லான்செட்டில்’ வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது.

வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கேன்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 33 ஆராய்ச்சியாளர்கள் இணைந்த குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சியின்மை தற்பொழுது மிகப்பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அரசுகள் அவசரமாக இவ்விவகாரத்தில் ஏதேனும் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற உள்ள சூழலில் மக்களிடம் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.