FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 06, 2013, 11:47:07 AM
-
என்னென்ன தேவை?
மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
கேரட், குடமிளகாய்,
காளான் - 2 கப்,
பொடியாக நறுக்கிய பாலக் - 1 கப்,
பொடியாக நறுக்கிய பனீர் - 1 கப்,
வெந்த ராஜ்மா - அரை கப்,
தயிர் - 1 கப், உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்,
தனியாதூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கப்,
தக்காளி விழுது - அரை கப்,
இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மஞ்சள்தூள் முதலிய எல்லா மசாலா தூள்களையும் போட்டு வதக்கியபின், கேரட், குடமிளகாய், காளான் சேர்த்து வதக்கவும். பிறகு வெந்த ராஜ்மாவும் போட்டு வதக்கவும். அடுத்தபடியாக தக்காளி விழுது போட்டுக் கொதித்தபின் தயிர், பனீர், நறுக்கிய பாலக் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு சூடாகப் பரிமாறவும்.