FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 14, 2011, 12:43:08 AM

Title: இது தான் இல‌ங்கை ச‌ட்ட‌ம்
Post by: thamilan on October 14, 2011, 12:43:08 AM
ம‌க்க‌ளின் தூக்க‌த்தில்
ந‌ம்பிக்கை வைத்து
க‌ன்ன‌மிட்ட‌ன‌ர் க‌ள்வ‌ர்க‌ள்

விழித்திருந்த‌ நாய்க‌ள்
க‌ல‌வெடுக்க‌ வ‌ந்த‌ நாய்க‌ளை
துர‌த்திக் க‌டித்த‌ன‌

க‌டித்த‌ நாய்க‌ள்
சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌
ச‌ட்ட‌ம் சொன்ன‌து
க‌டிப்ப‌து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்

ர‌க‌சிய‌மாக‌ கூடிப் பேசிய‌
ச‌திகார‌ர்க‌ளின் முக‌ங்க‌ளை
வெளிச்ச‌ம் போட்டுக் காட்டின‌
விள‌க்குக‌ள்

அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌ விள‌க்குக‌ள்
அடித்து நொருக்க‌ப்ப‌ட்ட‌ன‌
ச‌ட்ட‌ம் சொன்ன‌து
ர‌க‌சிய‌ங்க‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த‌லாம்

பூப்பூவாக‌ தேடித்தேடி
தேனை சேக‌ரித்த‌ன‌ தேனீக்க்க‌ள்
அதை எடுக்க‌ வ‌ந்த‌
குற‌வ‌ர்க‌ளை கொட்டு விர‌ட்டின‌
தேனீக்க‌ள்

கொட்டுய‌ தேனீக்க‌ள்
கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌
ச‌ட்ட‌ம் சொன்ன‌து
கொட்டுவ‌து வ‌ன்முறையாம்
 
Title: Re: இது தான் இல‌ங்கை ச‌ட்ட‌ம்
Post by: Yousuf on October 14, 2011, 05:41:20 AM
Miga nalla kavithai aniyaayaththai yethirthaal athu bayangaravathamaaga karuthappadukirathu ithu ilangayil mattum illai thamilan machi ulagam muluvathum ithey nilai thaan...!!!
Title: Re: இது தான் இல‌ங்கை ச‌ட்ட‌ம்
Post by: Global Angel on October 18, 2011, 06:08:08 PM
sarvathikarathin munnaal sagalamum ipdithaan  :(


nalla kavithai thamilan :)