FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on March 31, 2013, 09:14:02 PM

Title: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on March 31, 2013, 09:14:02 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/558634_441762975874037_1310876781_n.jpg)


மழையை ரசித்தபொழுதொன்றில்
பறந்து வந்து என்னோடு
ஒதுங்கிக்கொண்டது சருகொன்று,
முழுதாய் நனைந்துவிடப் பயம் போலும்
எனைப்போலவே...
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on March 31, 2013, 09:15:28 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/253076_442496032467398_708817301_n.jpg)


ஒரு கூடை மழை
ஒரு கடல் போல
என் மீது காதலை
தூவி விட்டு சென்றிருக்கிறது.
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on March 31, 2013, 09:16:51 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/523260_443675415682793_129926522_n.jpg)


ஓய்ந்த மழைக்குப் பின்
நனைந்த இலைகளின் நுனியில்
சொட்டிக் கொண்டிருக்கின்றது
மழையென்ற பெயரையிழந்த
நீர்த்துளி
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on March 31, 2013, 09:19:42 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/533606_446349228748745_1290995846_n.jpg) (http://www.friendstamilchat.com)


சர சர வென சத்தம்-
சலங்கையும் தோற்றதடா!
பட பட வென விழுதே-
என் வீட்டுத் தகரம் மெத்தளமோ!

தள தள வென வளர்ந்தது-
தோட்டத்துப் பயிர்களுமே!

சிலு சிலு வென என் தேகம்-
நான் நனைகயிலே!
அனுதினமும் நான் எதிர்பார்க்கிறேன்-
அந்தக் கிராமத்து மழையை!

நித்தம் பார்க்கையில் வெறுக்கிறேன்-
இந்த நகரத்து மழையை!
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on March 31, 2013, 09:27:35 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/12697_459438524106482_105066696_n.jpg) (http://www.friendstamilchat.com)


சாயங்காலம்
வானத்திலிருந்து வந்தது முதல்
ஒரே பேச்சுதான்...
இந்தப் பூஞ்செடியும் மழையும்
என்னதான் பேசுகிறார்களோ
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on March 31, 2013, 09:32:01 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/156439_464741373576197_1456067919_n.jpg)


மழைக்காலங்களில்
உன் குடையாக
மாறவே
ஏங்குகிறது...
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:12:42 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/490_532999403417060_1229115749_n.jpg)


- மழைக் காளான்கள் -

விடியும் வரை ஓயவில்லை
தகரக் கூரையுடனான
மழையின் பேச்சு

தூங்கியவன் மனத்தையும்
கழுவிப் போயிருக்கிறது
இரவில் பெய்த மழை

வான்தூறும் சொட்டு மழை
அடர்பாசி வாய் பிரித்துக்
குடிக்கிறது குளம்

முன்னெப்போதும் போலவே
புதிதாய்ப் பெய்கிறது
அதே பழைய மழை
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:14:51 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/484069_537708809612786_389163158_n.jpg)


வெகுநாட்களுக்குப் பின்
மீண்டும் அதே மழை...
அதே ஈரம்..
அதே இதம்...
மௌனமெனும்
ஆடை களைந்து
தூரக் காற்றில்
தூக்கிவீசிப்
பறக்கவிட்டு
நனைந்து நனைந்து
நனைந்து தீர்க்கிறது
நம் காதல்
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:16:09 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/3547_546478918735775_811742397_n.jpg)


குடை பிடிக்கும் அம்மாவின்
விரல் பற்றி நனைந்த புத்தகமூட்டையுடன்
உணவுக்கூடை சகிதமாய்
மழைக்கான விடுமுறை கனவோடு
வந்தடைவேன் பேருந்து நிறுத்தத்திற்கு..

வராததாய் நினைத்து மகிழ்ந்து காத்திருக்கும் சமயத்தில்
தாமதித்து வந்த பேருந்தில் ஏற மனமில்லாமல் ஏறி
பள்ளியிலும் காத்திருப்பைத் தொடர்திருப்பேன்
கவலையோடு கடைசி மணியின் சத்தத்திற்கு..

மழை விட்ட தூவானத்தில் மாலையில் வீடு திரும்பி
அம்மா செய்த சூடான பஜ்ஜியையும் பிடிக்காத காபியையும்
தூறலில் விளையாடிக் கழித்திடுவேன் காய்ச்சல்
வந்தேனும் விடுமுறைக் கொடுக்காதா என்று..

மழை ரசித்து, மழைக்கு பயந்து, மழைக்கு ஒதுங்கி,
மழையால் மகிழ்ந்து, மழையால் நொடிந்து
வாழ்ந்த அந்த அழகிய மழைக்காலங்கள்
இன்று வெறும் கனாக்காலங்கள் ஆகிப்போகிறது
மழைக்கான ஸ்டேட்டஸ்களோடும் !!
பழைய நாட்களின் ஏக்கங்களோடும் !!
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:17:15 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/601700_565784693471864_1420165724_n.jpg)


கவிதை படைத்து காத்திருக்கிறேன்
ஒரு பெருமழைக்காக..!
அம்மழையோ தரைவீழ்ந்து தவம் கிடக்கிறது
மழலையின் கப்பலுக்காக..!!
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:18:28 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/5898_571744036209263_326351529_n.jpg)


மண் வாசனை"

வானம்
நில பெண்ணிற்கு விடும்
காதல் தூது..
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:19:27 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/1005048_573969582653375_2086062874_n.jpg)


கை நீட்டி மழை பிடித்து அன்னையின் முகத்தில் விசிறிச் சிரிக்கும் இடுப்புக் குழந்தை ..
குடைக்குள்ளே இருந்தாலும் எட்டி எட்டி நனைக்கிறதே மழை ...
என்று அலுத்துக் கொள்ளும் தாய் ...
சலனமின்றிப் பெய்து கொண்டிருக்கும் மழை
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:22:49 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/392031_444126458971022_1558298058_n.jpg)


அவசரமாக ஓடி வந்து
ஜன்னல் கதவின்
கொக்கிகளை எடுத்துச்
சாத்துகையில் முகத்தில்
செல்லமாக தெறிக்கிறது
சாரல் வீட்டிற்குள்
வீட்டுக்கு வெளியே பெய்கிறது
மழை..
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:24:52 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/76232_450138225036512_301536939_n.jpg)


உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
மழைதான்
குறைக்கிறது
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:25:55 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/548771_457790714271263_1043506540_n.jpg)


குட்டித் தங்கையின் மழை

மழையின் ஒவ்வொரு துளியும்
அதனை முழுமையாக ரசிப்பதற்கு
இடம் தருவதேயில்லை.

ஒரு துளியின் பிரமாண்டம் அதை
விட்டும் பார்வையை
அகலச் செய்வதேயில்லை.

மழை
ரசனையின் பாடல்.

ஒவ்வொருவரும் அதனை
ஒவ்வொரு வயதில்தான்
புரிந்து கொள்கிறார்கள்.

குட்டித் தங்கை
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ பாடலை
எழுதி மனனமிட்டுக் கொண்டு
அடுத்த மழைக்காகக் காத்திருக்கிறாள்.
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:27:09 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/267645_458692847514383_469162189_n.jpg)


நனைத்தாலும் மழை நண்பன் தான்.

மாலை நேரம்.
திடீர் மழை.

வருவோர் போவோர்
சாலையோர நிழற்குடையில்
ஒதுங்கினர்..

சாலையும் மழையும்
கலவிக் கொண்டிருந்தன.

நனைந்து போன
படுக்கையையும் தலையணையும்
பத்திரப்படுத்தினார்
சாலைவாசித் தந்தை.

மகள் மட்டும்
கட்டுப்பாடுகளை மீறி ...

தன் இருப்பிடத்தை
நனைத்து விட்ட
மழையின் மேல்
எந்த கோபமும் இல்லாமல்
துள்ளி விளையாடினாள் .

நனைத்தாலும் மழை
நண்பன் தான்.
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:28:08 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/208088_459024847481183_1769706830_n.jpg)


எல்லா
மழையும்
உன் உதட்டில்
பட்டு
இன்னும்
கொஞ்சம்
சில்லிட்டுச்
சிரிக்கிறது
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:29:10 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/581452_459935500723451_1683565400_n.jpg)


மேகம் பெற்றெடுத்த
மழைக் குழந்தையை
மடியிலிட்டுக் கொஞ்சுகிறாள்
பூமிப் பாட்டி...
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:30:26 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/319057_463818960335105_1980052175_n.jpg)


மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
என் வீட்டுத் தேநீர்க்கோப்பையின்
சுவை கூட்டிப் போகிறது

மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
வண்டி கழுவும்
என் சோம்பேறித்தனங்களுக்கு
வடிகாலாகின்றது

மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
அடுக்குமாடிக் குடியிருப்பின்
அண்டை வீட்டார்களை
அறிமுகப்படுத்துகின்றது

மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
என் பேனாவில்
கொஞ்சம் மையூட்டுகிறது
நான் அதில்
கொஞ்சம் பொய்யூட்டுகிறேன்

மழை
ஒவ்வொருமுறையும்
எதிர்பாராத தருணங்களில்
எதிர்பட்டு
எனை நனைத்துச் செல்கிறது
அவளைப் போலவே !
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:32:07 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/297179_464679983582336_420682714_n.jpg)


மழை அதிகம் பெய்வதை கண்டு
மலைத்து போய் விடமாட்டோம் .
முடங்கி போய் விட, கோழையல்ல.
முத்திரை பதிக்கும் சித்திரம் நாங்கள் ...
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:33:22 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/46214_468351229881878_968152986_n.jpg)


இலைத் துளி நீராய்
நீ
பிரியத்தான் போகிறாய்
தெரிகிறது
இன்னும் சில நொடிகளாவது
உன்னைத் தாங்கி கொள்ளமாட்டேனா?
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:35:09 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/941883_548895228494144_259176651_n.jpg) (http://www.friendstamilchat.com)


தூறலின் பின்...
****************
தூறலின் பின் மென் அமைதி...
தூய்மைச் சிலிர்ப்பில்
மலர்களும் மரங்களும்...
நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட
தலைக் குளித்த தேவதைகளாய்...
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:36:35 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/942923_565153440201656_1559439020_n.jpg)


முதுவேனிற்காலத்தின் பிற்பகல்..

உலைநீரின் வெம்மையை விஞ்சியபடியே
தடவிச்செல்கிறது கனற்காற்று..

காற்றினுங்கடுகிப்பறந்தபடியே
அலுவலகம்நோக்கிய பயணம்..

மேலே பறந்துசென்ற பறவையின் நிழலும்
சூடாய் தரையில் விழுகிறது..

திடுமென சூரைக்காற்று..!

சூரியனின் கண்ணைக்கட்டிய
கார்மேகக்கூட்டங்கள்
கைகொட்டியபடியே
காற்றுடன் விளையாடியதால்
ஆனந்தக்கண்ணீரை சொரிகின்றன..

ஒருதுளி இருதுளியாகி
வானிலிருந்து தரைநோக்கிய வெள்ளமாய்
ஆனந்தமழை..

மழை எவ்வளவு அழகோ
அதைவிட அழகு
மழையில் நனைபவர்கள்..

சுடிதார்ப்பூக்கள்
சேலைச்சிற்பங்கள் அழகோ அழகு..!

அவர்களின் இமையிடுக்கில்
வைரத்துளியாய் மழைத்துளிகள்
அதனினும் அழகு..!

மழைத்துளி முத்தமிட்டவாறே வீழ்கிறது..
பறவைகளை..
புகைகக்கும் ஊர்திகளை..
நெடிய கட்டிடத்தை..
குதித்தோடும் விலங்குகளை..
கையசைக்கும் சாலையோர செடிகளை..
கருஞ்சாலையை..

விழும்போதே சிரித்துக்கொண்டே விழும்
மழைத்துளிகள்
மறவாமல் வரிசையில் செல்கின்றன
நீர்க்குமிழிகளாய்...


நனைந்த யாருமே
மழையை திட்டவில்லையெனில்
நாளையும் வருவாள்
நம்மை நனைக்க..!
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:38:09 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/992885_579166692133664_1800372523_n.jpg)


நினைவுக்கொம்பு நீட்டி
காதல் நத்தை ஒன்று
உள்ளூர ஊர்ந்து கொண்டுதான்
இருக்கிறது மழைக்காலமெங்கும்.
Title: Re: ~ "மழைக் கவிதைகள்" ~
Post by: MysteRy on September 20, 2013, 08:39:16 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/1235454_611972928853040_537237553_n.jpg)


வானில் கலவரம் இடியுடன் மின்னல்...

மேகத்தின் ஊடல் அழகிய மழை...

மழைத்துளியின் கூடல் மண்ணின் ஈரம்...

காற்றின் புனிதம் இதமான தென்றல்...

மழையால் உயிர்த்தெழுந்தது மண்புழு எனும் ஜீவன்...

மழைத்துளி மண்ணோடு மீட்டிய இசை...

குளிர்ந்த மழை நீரில் கால்பதித்து நனைய வந்தேன் குழந்தைபோல.