FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on March 27, 2013, 09:07:40 PM
-
பூத்திருக்கும் ரோஜாவைக்கூட பறிக்க
மனமில்லை, பிரிவின் வலி எனக்கு
தெரியும் பெண்ணே!!!
-
நீ நிலவு போன்றவள்தான் ஏற்றுக்
கொள்கிறேன், அதற்காக என்னைப்
பார்த்து மறைந்து விடாதே... நான்
நான் மேகமல்ல!!!
-
உனக்கென்ன வயலை பார்த்துவிட்டு
திரும்பிவிட்டாய்....வரப்பிடம் சண்டை
போடுகிறது வாய்க்கால் உன் பாதம் பட்டதால்!!!
-
உன் விரல்களுக்கு வலிக்குமென்று
மிதிப்பதில்லை நான்...நீ வரைந்த
கோலத்தைக் கூட!!!
-
பூமிக்கு இனிக்கிறதாம் நீ நட்டு வைத்த
மரங்களின் நிழல் விழும்போதெல்லாம்!!!
-
உன் வீட்டு மாங்காய்க்கு மட்டும் எப்படி
இவ்வளவு இனிப்பென்றேன்,....ச்சீ
கண்ணு வைக்காதடா என்று மரத்திற்கு
முத்தம் கொடுத்தாய்.... இப்பொழுது
புரிந்தது ரகசியம் எனக்கு!!!
-
மண்ணில் மறைவதைக் கூட
மகிழ்ச்சியாய் ஏற்ப்பேன்...நீ
மண்ணைப் பார்த்து நடக்கையில்!!!