FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: User on March 26, 2013, 10:11:48 PM
-
சங்க இலக்கியங்கள் புரட்டி எடுத்து
காதல் காவியங்கள் திரட்டி தொடுத்து
மூன்றாம் பாலை கரைத்து குடித்து
மேவாய் வருடி ,வானம் பார்த்து
அமர்ந்து விட்டேன் உனக்கு கவிதை எழுத
எழுதி எறிந்த காகித குன்றுகளின் நடுவில் நான்
எப்படியோ எழுதி முடித்துவிட்டேன்
இப்படியோர் கவிதை இனியும் இல்லை
இதனினும் சிறந்த இனிப்பும் இல்லை..
படித்துவிட்டுச் சொல் பிடித்தது என்று
உன்னிடம் தர நான் எழுதிய ஓரெழுத்து கவிதை
" நீ "
-
அடேங்கப்பா... என்னமா எழுதி இருக்கீங்க... இப்படியெல்லாம் கவிதை எழுத தெரிஞ்சு இருந்தா ஒரு எழெட்டு காதலில் தோற்று இருக்க மாட்டேனே.. பயனரே, நிச்சயமாய் சொல்லுங்க நீங்க இன்னும் காதல் வயப்படவில்லை???
-
அருமையான படைப்பு
வாழ்த்துகள்
-
எடுத்துக்கொண்ட சிரத்தைக்கான
சரியான பலன் !!
தித்திக்கும் கவிதை !!
வாழ்த்துக்கள் !!
-
மேவாய் வருடி ,வானம் பார்த்து
அமர்ந்து விட்டேன் உனக்கு கவிதை எழுத
அது என்ன கற்பனை என்றவுடன் இதே அமர்வுகள் தவிர்கமுடியாததாகின்றது .......
அருமையான ஒரு கவிதை அந்த நீ என்பதை விட அதை சொல்வதற்காய் நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் இனிமை நன்று தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்
-
ennadhu sasi எழெட்டு=56?? unga area la ponnunga irukka veedu postbox fullaa love letter xerox panni poduveenga polaiye?neenga love pannuradhu pathaadhu nu thunaikku aalu sekkureengalaa..no no..nan varalai..nantri reply ku..thx for ur comments ammu n thala..angel enna panna,apdi ellaarum mari ukkaandhu paathaavadhu kavithai varumaanu oru nappaasai thaan..thx for ur comment.
-
user nalla eruku ungal kavithai enum ethir pakren
-
மிகவும் அருமையான கவிதை user ..
-
nantri varun & pinky
-
வார்த்தையாடல்கள் சுவையாகவே இருக்கிறது
கருவை புதுமையானதாய் ஆக்கலாமே !!!!!
வாழ்த்துக்கள், தொடர்க நடை