FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Aswin on March 24, 2013, 11:11:02 AM
-
காதல் கவிதை ஓன்று எழுதவென
கற்பனைத்தெரு சென்றிருந்தேன்
வழியெங்கும் பெண்கள் முகம்
வழிந்தபடி ஆண்கள் அகம்
என்ன இது காதல் என்று
திகைச்சு போச்சு மனசு
ஏதோ பாதை மாறி
வந்தேன் என்று பதறி
போச்சு மனசு!
கண்டதும் காதல்
கை பட்டா காதல்
கண்களாலே காதல்
கனவினுள்ளும் காதல்
கழுத்துக்கு கீழே காதல்
கணுக்காலுக்கு மேலே காதல்
கட்டி பிடித்து முத்தமிட்டு
கண் கூச வைக்கும்
கலியுக காதல்!
அடியே புடியே
வாடா போடா
பண்பில்லா பேச்சில்
பரிதவிக்கும் காதல்!
அடிக்கடி ஆளை
மாத்தும் அற்ப காதல்
வெலிக்கட துன்பம்
தாண்டும் வெறுப்பு
காதல்!
காதல் என்றால் என்னமோ
ஏதோ என்று நினைச்சு
ஆர்வமா நான் போனேன்
இந்த கருமம் தான்
காதல் என்றால்
கவிதை எழுத மாட்டேன்
நான் காதல் கவிதை
எழுத மாட்டேன்.
-
aswin.. unga kavidai nalaruku.. unmayanathum koda.. ithu pola thaan nerya kaadhalargal irukanga.. unmayana kaadhal migavum kammi than nanbaa.. adhu kammiyaaga irundhalum , adhu migavum arputhamaanathu, nanbaa adhyaum thaangal purindhu kolla vendum..