FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on March 07, 2013, 05:03:18 PM

Title: தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச்
Post by: kanmani on March 07, 2013, 05:03:18 PM
சாண்ட்விச் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் போன்றும், காலை உணவாகவும் இருக்கும். மேலும் சாண்ட்விச்சில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். அதிலும் சாண்ட்விச் பொதுவாக விருப்பத்திற்கேற்றாற் போல் இருப்பதால், விருப்பமான முறையில் பிடித்த காய்கறிகள் அல்லது பழங்களை வைத்து பலவாறு செய்யலாம்.

சரி, இப்போது அவற்றில் தக்காளி மற்றும் பன்னீரை வைத்து எப்படி சாண்ட்விச் செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

ப்ரெஞ்ச் பிரட் - 6 துண்டுகள்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
பன்னீர் - 1/2 கப் (நறுக்கியது)
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் பிரட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

 பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.

 பின்பு அந்த தக்காளி கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.

இப்போது சூப்பரான தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!