FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: PiNkY on March 03, 2013, 09:19:06 PM

Title: என் அன்புக்கு நீ அடிமையடி..! (A special love story)
Post by: PiNkY on March 03, 2013, 09:19:06 PM


                                         1.   
சென்னையில்.,
  மணி, அரட்டையடித்தது போதும் பா.,வேலையை ஆரம்பிக்கலாம், அலுவலகத்திற்கு நம் எம்.டி கௌதமன், எப்பவும் 9.00து மணிக்கு வந்துருவாருனு தெரிஞ்சும் அரட்டையடிகிறத விடமாட்டியா..?
   சரி, சரி, ரத்தினம் வேலையைத்  துடங்கலாம்..!
கௌதமன் அனைவரிடமும் மிகவும் அன்பாய் பழகுபவன், வேலையாட்களிடமும் சரிசமமாய் எந்தவித வேறுபாடுமின்றி பழகுவான்; அவன் கோடீஸ்வரனாய் இருந்தும் யார் மனதும் புண்படும்படி ஒரு வார்த்தைக்  கூட சொல்லமாட்டான்; ஏழை , அனாதைகளுக்கு காப்பகங்கள் கட்டி அவர்களை ஆதரிக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவன்..
கௌதமன் அலுவலகத்திற்குள் வரும் சப்தம் கேட்டு, மணி, ரத்தினம் உட்பட மற்ற அலுவலர்களும் எழுந்து நின்று "குட் மார்னிங், சார்", என்று வணக்கம் வைத்தனர், பதிலுக்கு கெளதம் தலையை அசைத்து விட்டு அவனுடைய  அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான்..
சிறிது நேரத்திற்கு பிறகு, அவனுடைய உதவியாளர் கீதா அவன் அறைக்குள் வந்தாள்.,  "மே ஐ கம் இன் சார் " என்று கூறிவிட்டு  அவனுடைய அனுமதிக்காக காத்திருந்தாள்., "யெஸ். கீதா கம் இன்  " .. சார் நேத்தைக்கு நீங்க "சாந்தி கார்மெண்ட்ஸ்க்கு  " அனுப்ப சொன்ன designs எல்லாம் அனுப்பியாச்சு".. "ஓ., ஓகே  கீதா நீங்கள் மற்ற வேலைகளை பாருங்க வேற ஏதும் வொர்க் இருந்தா கூப்பிடறேன்".. "ஓகே சார்", என்றவள் அவன் அறையைவிட்டு வெளியேறினாள்..
கௌதமனின் கைபேசி ஒலித்தது.. அவன் கைபேசியை எடுத்து  அழைப்பை ஏற்றான்,"ஹலோ கௌதமன் ஹியர் ", என்று சொன்னதும் மறு முனையில், "சார் உங்க அம்மா மயங்கி விழுந்துட்டாங்க .! சீக்கிரம் வாங்க சார் " , என்று அவன் வீட்டு வேலையாள் பதிலளித்தான்.. இதைக் கேட்டதும் கௌதமின் முகம் வாடியது, அவன் முகத்தை கவலை தொற்றிக் கொண்டது..
"இதோ பத்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன் ", என்று படத்தத்துடன் போனை அணைத்தான்.. அவன் அலுவலக அறையை விட்டு வெளியே வந்தவன் கீதாவின் அறைக்கு சென்று, "கீதா , நான் வெளிய போறேன் எதாவது முக்கியமான விஷயம்னா நீங்களே பாத்துகோங்க.!," என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.. தன் காரில் ஏறினவன் மின்னல்வேகத்தில் காரை ரோட்டில் செலுத்தினான், சிறிது நேரத்தில் அவனது பங்களாவிற்குள் அவன் கார் நுழைந்தது .. காரை நிறித்துவிட்டு வீட்டினுள் நுழைந்தவன், அவன் தாயின் அறைக்கு வேகமாய்ச் சென்றான்..
"அம்மா.! உங்களுக்கு என்ன மா ஆச்சு.? ஏன் இப்படி அடிக்கடி மயங்கி விழுறீங்க.?" என்று கவலையுடன் கேட்டபடி தாயின் கையில் தலை புதைத்தான்.. 
அவனுடய தாய் 'சிவகாமி'., "ஒன்னும் இல்ல பா வயசாயுடுச்சுல, அதுவும் இல்லாம டென்ஷன் அதனால தான் பா, எல்லாம் சரி ஆகிவிடும் பா.. நீ கவலைப்படாதே ராஜா.", என்று அவன் கன்னத்தை தட்டினாள்..
"அம்மா., ஏன், நீங்க இன்னும் நடந்ததையே நினைச்சு கவலை படுறீங்க.? அப்பா நீங்களாச்சும் அம்மாக்கு சொல்லகூடாதா .?" என்று நாத்தழுதழுக்க கேட்டான்..
"கெளதம் உன் வாழ்கை இப்படி ஆயிடுச்சேன்னு பெத்தவங்க எங்களுக்கு கவலை இருக்காதா.?" என்று அவன் தந்தை பதிலளித்தார்..
"அப்பா, அதற்காக நடந்ததை நெனச்சுட்டே  இருந்தா எல்லாம் சரி ஆயிடுமா.? அப்படி கவலைப்படுறதால நம்ம உடம்புக்கு தான் கேடு.! விதியை யாரால் மாற்ற முடியும்.! "  என்று விரக்தியாய் கூறினான்..
"அதற்காக எங்க மகன் வாழ்கை நரகமாகிறத பார்த்துகிட்டு எங்களால இருக்க முடியாது பா., நான் ஒன்னு சொன்னா நீ கேட்பீயா பா .?" , என்று கேட்டுவிட்டு அவன் முகத்தை ஏக்கமாய் பார்த்தார் அவன் தந்தை..
"அப்பா ஏன் இப்படி கேக்குறீங்க நீங்க சொல்லி நான் கேக்காம இருந்துருக்கேனா .? சொல்லுங்கப்பா என்ன செய்யணும்.?" என்று கெளதம் கேட்டான், அவனுக்கு அவர் என்ன கேட்பார் என்று தெரிந்தும் கேட்டான்..
"கெளதம் நீ  பெங்களூர் போய் மித்.. மித்.. மித்ராவை கூட்டிட்டு வரணும்.. செய்வியா பா.? ", என்று தயங்கித் தயங்கி கேட்டார்.. கெளதம் சற்று யோசித்தவனாய்,  "சரி பா நான் போய் கூப்பிட்டு வரேன்..", என்றான்..
"ரொம்ப சந்தோஷம் பா, இத்தனை நாளும் தயங்கினோம் உங்கிட்ட இந்த விசயத்தை கேட்க.. எப்படி இருந்தாலும் இதை அப்படியே விடுவித் முடியாது., அதன் கேட்டுவிட்டேன்.. ஆனால்., நீ சரி என்று சொல்வாய் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை..  சரி நான் டிக்கெட் புக் பண்றேன் இன்னைக்கு நைட் ப்ளைட்ல  உனக்கு ஓகே தானா.?", என்று கேட்டார் ..
"ஹ்ம்ம் சரி பா.. நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா.? உங்களுக்காக இதை கூட செய்யமாட்டேனா.? நான் போய் என் திங்க்ஸ் எல்லாம் pack பண்ணி, குளிச்சுட்டு வரேன்.. அம்மா நான் ரெடி ஆய்ட்டு வரேன் மா ", என்று கூறிவிட்டு மாடிப்படியில் ஏறி தன் அறைக்கு சென்றவன் , அறைக் கதவை தாழிட்டு கொண்டான்.. அவனுடைய துணிகளை pack செய்தபடியே யோசனையில் மூழ்கினான்..

'என்ன பாவம் செய்தேன் என்று என் வாழ்கை இப்படி நரகமாகி போனது.? நான் அழகாய் இல்லையா.? படித்தவன் இல்லையா.? மோசமானவனா.? இல்லை வசதி, அன்பு எதுமே இல்லாதவனா.?  எல்லாம் இருந்தும் ஏன் இப்படி என் வாழ்வில் சந்தோஷம் தொலைந்து போனது.. என்னை மட்டும் இல்லாமல் என் பெற்றோரையும் அல்லவா என் வாழ்க்கையில் நடந்த எல்லாம் பாதிக்கிறது.? என்னவானாலும் சரி என் பெற்றோருக்காக நான் மித்ராவை அழைத்து வரத்தான் போகிறேன்..'.. என்று யோசித்தபடியே pack  செய்து முடித்தவன் குளிப்பதற்காக குளியல் அறையுள் புகுந்தான்..குளித்து முடித்து உடை மாற்றி தன் பெட்டியை கையில் எடுத்து கொண்டு கீழே இறங்கி , அவன் பெற்றோரின் அறைக்குச் சென்றான்..

அவன் தந்தை அதற்குள் flight டிக்கெட்டை புக் செய்து வாங்கி வைத்திருந்தார்.. அதை கெளதமிடம் கொடுத்தவர்,  "கெளதம்.. பத்திரமா போயிட்டு வா பா.. உன் நல்ல மனசுக்கு இனிமேல் எல்லாம் நல்லதாவே நடக்கும்...." என்று சொன்னார்..
 "சரி அப்பா நீங்கள் கவலைப்படாதீங்க நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வேன்.. "  என்று கனிவாய் சொன்னான்..
"ஓகே கெளதம்"..
"அம்மா உடம்பை பாத்துகோங்க.. நான் வரேன்.. அப்பா ஆபீஸ்ல இருக்க வொர்க் கொஞ்சம் பாத்துகோங்க.. ", என்று இருவரிடமும் விடைபெற்று கொண்டு தன் காரில் ஏறி அமர்ந்தான்., ஓட்டுனரை காரை எடுக்க சொன்னவன், கண்கள் மூடி அமர்ந்து கொண்டான்.. சற்று நேரத்தில் கார் ஏர்போர்ட்ஐ வந்தடைந்தது.. காரை விட்டு இறங்கி ஏர்போர்ட்டினுள்  நுழைந்து, தான் பயணிக்க வேண்டிய ப்ளைட்டில் அமர்ந்துக் கொண்டான் ..
2.   
மனதை பாரம் அழுத்த., கண்கள் மூடி இறந்தக்கால நிகழ்வுகளை மனதில் ஓட்டினான்..1வருடதிருக்கு முன்..                     "அவனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த நேரம் அது, போட்டோவில் மித்ராவை  பார்த்ததும் பிடித்து போனது கௌதமிற்கு.. நிச்சயம் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் மாலையில் தான் நடந்தது, அப்போதுதான் மித்ராவை அவன் முதல் முதலாய் நேரில் பார்கிறான்.. மித்ரா , மா நிறம் தான், லட்சணமாய் இருப்பாள், அவள் கண்கள் கொஞ்சம் பெரியதாய் அழகா இருக்கும், அந்த கண்களில் தான் கெளதம் மயங்கி போனான், அவளும் அவனை  நிச்சயத்தில் தான் முதல் முறை பார்த்தாள், அவள் அவனை பார்த்த விதம் கௌதமை சுண்டி இழுத்தது.. கெளதம் அவள் பார்வையில் சொர்கத்தையே கண்டது போல மயங்கிப் போனான்..
 நிச்சயம் முடிந்ததும் , அன்று இரவு முழுக்க அவளை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.. ஒரு நாளும் எந்தப் பெண்ணையும் அவன் மனது நினைத்து பார்த்தது இல்லை.. ஆனால் அன்று அவளை பார்த்தபின் அவளையே அவன் மனம் சுற்றிவந்தது..
மறுநாள் கல்யாணத்தில் அவள் லைட் ப்ளுவில் பட்டு சாரீ உடுத்தி இருந்தாள்.. அவளை சாரீயில்ப் பார்த்ததும் அவன் இன்னும் மயங்கினான்.. தேவதையே இறங்கி வந்தது போல் இருக்கிறாளே என்று கூட நினைத்தான்.. தாலி கட்டும் நேரம் வந்தது, மேளதாளங்களுடன் கல்யாணமும் இனிதே நிறைவேறியது, கெளதம் மித்ராவை தன் மனைவியாக்கி கொண்டதில் மகிழ்ந்திருந்தான்.. தான் வாழ்வில் கண்ட பல வெற்றிகளைவிட அவளை மணந்துக் கொண்டதுதான் அவனுக்கு கிடைத்த பெரிய வெற்றியென்று எண்ணி மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தான் .. அந்த மனக்கோட்டை சற்று நேரத்தில் உடைந்து சில்லு சில்லாய் சிதறப் போவதை உணராமல்..
தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மித்ரா கௌதமை சந்தித்து பேசினாள்.. அவள் பேசியது வார்த்தைகள் அல்ல, அவன் வாழ்வை சூனியமாக்கிய மந்திரங்கள்..
அவன் அவள் பேச போவதை கேட்க ஆவலாய் அவள் முகத்தை பார்த்தான்.. "எல்லா பெண்களும் முதல் முதல் தன் கணவனிடம்  பேச தயங்குவார்கள் ஆனால்., நீ பரவாயில்லையே தைரியமாய் பேச என்முன்னால் வந்து நிற்கிறாய்.. இ லைக் இட் "., என்றான் கண்களை சிமிட்டி..
"அது கணவனிடம் பேசத்தான் எல்லா பெண்களும் தயங்குவார்கள் உங்களிடம் நான் ஏன் தயங்க வேண்டும்.. " என்றாள் கேலியாய்..
“ மித்ரா.?? என்ன சொல்கிறாய் ..? நான் உன் கணவன் இல்லை என்று சொல்கிறாயா.?” அவன் பதறிப் போய் கேட்டான்..
 " நான் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை.. மிஸ்டர்.கெளதம், நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நிச்சயத்தில் இருந்து துடிக்கிறேன். ஆனால், எல்லோரும் என்னை சுற்றி இருந்ததால் சொல்ல முடியவில்லை. நான் சொல்ல போகும் விஷயம் நிச்சயம் உங்களுக்கு கவலையை தரும். ஆனால் எனக்கு வேறு வழியில்லை.. என்னால் கல்யாணத்திற்கு முன் சொல்ல முடியவில்லை முடிந்திருந்தால் சொல்லியிருப்பேன்.. இப்போது தான் சொல்ல நேரம் கிடைத்தது., சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம்.. என்னை புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன், என்று ஆரம்பித்தாள் ..
கௌதமிற்கு ஏதோ பெரிய கவலையை தரப் போகிற விஷத்தைத்தான் சொல்ல போகிறாள் என்று புரிந்துக் கொள்ள முடிந்தது..
 "நான் ரஞ்சித் என்னும் என்னுடன் பணிபுரியும் ஒருவனை மனமார நேசித்தேன் , ஆனால், என் அம்மாவுக்கு நான் ரஞ்சித்துடன் வாழ்ந்தது தெரியாது, தெரிந்திருந்தால் இந்த கல்யாண ஏற்பாடு செய்திருக்க மாட்டார்கள்.. எனக்கு என் அம்மாவிடம் இதை சொல்லும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.. அவர்களிடம் நான் ரஞ்சித்தை பற்றி சொல்லும் போது கல்யாண ஏற்பாடுகள் நடந்துவிட்டது.. எனவே கல்யாணத்தை நிறுத்த அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் என்னை வற்புறுத்தி உங்களுடன் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்..
நம் கல்யாண ஏற்பாடு ஒரே மாதத்தில் நடந்துவிட்டது எனக்கு இங்கே வந்த பிறகுதான் உங்களுடன் கல்யாணம் நடக்க போவது தெரியும்.. இதை உங்களிடம் கல்யாணத்திற்கு முன்பே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்.. ஆனால், என் அம்மா என்னை விட்டு ஒரு நிமிடம் கூட நகராமல் என்னையே கண்காணித்து கொண்டிருந்தார்கள் அதனால் தான் நான் சொல்ல நினைத்தும் சொல்ல முடியவில்லை..
இப்போது தான் அவர்கள் எனக்கு கல்யாணம் முடிந்துவிட்டது என்ற நிம்மதியில் என்னை கண்காணிப்பதை விட்டு அந்தப் பக்கம் சென்றதும், நான் உங்களிடம் பேசியே ஆக வேண்டும் என்று இப்போது சொல்கிறேன்.. என்னை மன்னிச்சுடுங்க கெளதம், ரஞ்சித்துடன் நான் காதலியாக மட்டும் இல்லாமல் மனைவியாகவும் வாழ்ந்து விட்டேன்.. நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன்.. வேறு ஒருவனுக்கு கல்யாணம் ஆகாமலே மனைவியாக வாழ்ந்துவிட்டு  உங்களுடன் எப்படி என்னால் வாழ முடியும் சொல்லுங்கள்.? என்று கதறினாள்..
கெளதம் சிலையாய் நின்று விட்டான்.. சிறிது நிமிடங்களில் நிலைமையை உணர்ந்தவன்.,  அவள் தோள்களை பிடித்து உலுக்கி, கேள்விக் கணைகளை வீசினான்.. "என்ன சொல்கிறாய்.? உன்னை எவ்வளவு கனவுகளுடன் கல்யாணம் செய்திருப்பேன் என்பது உனக்கு தெரியுமா.? இதை கல்யாணத்திற்கு முனமே நீ சொல்லியிருந்திருக்க வேண்டும்.. இப்போது இப்படி சொன்னால் நான் என்ன செய்வது.? உன்னை நான் காதலிக்கிறேன் டீ., என்னால் நீ இல்லாமல் வாழ முடியாது..” என்று கத்தினான்..
மித்ரா ஷாக் அடித்தது போல் சட்டேன்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. என்ன சொல்கிறார் இவர் என்னை காதலிக்கிறாராம்.? ஐயோ இது என்ன புது சோதனை காதலிக்கும் இவரால் என்னை எப்படி மறக்க முடியும்.? இருந்தும் என்ன செய்யிய முடியும் அவருடன் என்னால் எப்படி வாழ முடியும்.? என்று மனதினுள் கதறினாள்..
 பின் அவனிடம் .. " இத்தனை வருடங்கள் என்னமோ என்னுடன் வாழ்ந்தது போல் சொல்கிறீர்கள்.. ஒரு மாதமாக தான் என்னை உங்களுக்கு தெரியும் அது மட்டும் அல்லாது இப்பொது தான் என்னிடம் நீங்கள் பேசுகிறீர்கள் அப்படி இருக்க என்னை மறப்பது உங்களுக்கு ஒன்றும் பெரிய விசயமாக இராது.. இதுவும் கடந்து போகும் என்பது போல் என் நினைவுகள் உங்களைவிட்டு கடந்து போகும்.." என்றாள்..
அவன் அவளை கோபமாய் பார்த்தான்., "என்னடி சொன்ன.? காதலுக்கு வருடங்கள் தேவையில்லை மனது போதும்.. மனம் ஒருவரை ஒரு முறை நினைத்துவிட்டால் மறக்காது.. மற்றவர்கள் எப்படியோ என்னால் மறக்க முடியாது. எத்தனையோ பெண்களை நான் பார்த்து பழகி இருக்கிறேன் ஆனால் என்னவோ உன்னை பார்த்ததும் மனதை பறிக்கொடுத்துவிட்டேன்.. நீ தன் என் மனைவி.. புரிந்துக்கொள்..”
"நடந்ததை விட்டுரு நம் கலாச்சாரப்படி தாலி கட்டியவனுடன் தான் வாழ வேண்டும், நான் உன் பழைய விஷயங்களை மறந்து உன்னை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.! என்ன  சொல்கிறாய் இதற்கு .? " என்று மனம் வலிக்க கேட்டான்..
யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள் தான், ஆனால் கெளதம் அவளை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தான் அவள் மேல் கொண்ட அன்பினாலும், தாலியின் மேல் உள்ள மதிப்பினாலும்..
அவள் இதை அவனிடம் எதிர்பார்க்கவில்லை.. இவ்வளவு ஆழமாய் என்னை காதலிக்கிறாரா.? எவ்வளவு நல்லவராக இருந்தால் இப்படி என்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வார்.. அவர் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் நான் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்தே ஆக வேண்டும்.. என்று மனதினுள் சொல்லிக் கொண்டவள் அவனிடம்
   "ஹா ஹா.. கெளதம் என்னால் ரஞ்சித்துடன் வாழ்ந்த வாழ்வை மறக்க முடியாதே இதற்கு என்ன செய்ய.? என்னை விட்டுருங்க உங்களுக்கு வேற வாழ்க்கைய அமைத்துக் கொள்ளுங்கள்.. என்று கூறி விட்டு ., அவளுடைய அம்மாக்கு தெரியாமல்  பெங்களூர் கிளம்பி விட்டாள்..
 கௌதமால் தெரிந்தும் தடுக்க முடியவில்லை போகிறவளை தடுக்கவா முடியும்.?  என்று விட்டுவிட்டான்.! அவளுடைய தந்தை அவள் பத்தாவது படிக்கும் போதே குடித்து குடித்து நோய்வாய்பட்டு இறந்துவிட்டார்.. அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியது அவளது அம்மாதான்.. அவளும் அம்மாவுக்கு பாரம் கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் சிறு வயதிலேயே வேலைக்கு சென்று வீட்டை பார்த்துக் கொண்டே படித்தாள்.. அம்மா என்றாள் அவளுக்கு உயிர் அப்படிப்பட்ட அம்மா, இவள் கல்யாணம் முடிந்து ஓடினது தெரிந்தவுடன் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கில் உயிரை விட்டுவிட்டாள்..
பெங்களூர் சென்று விட்டதால் அவள் அம்மா இறந்தது அவளுக்கே தெரியாது.. அதன் பிறகு கௌதமின் குடும்பம்  கவலையில் மூழ்க தொடங்கியது.. அவள் கல்யாண மண்டபத்தை விட்டு பெங்களூர் சென்றதும் ரஞ்சித்துடன் வாழவில்லை.. ஏனென்றால், அவளுக்கு தாலியின் மீது உள்ள பற்று அவளை அவனுடன் வாழ அனுமதிக்கவில்லை..
இப்போது அவளுக்கு, கௌதமிற்கு மறுமணம் செய்து அவன் வாழ்வை சந்தோஷமாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் இருக்கிறது.. இது எல்லாம் கௌதமிற்கு தெரியும்.. அவள் மண்டபத்தை விட்டு வெளியேறியதும் அவளை கண்காணிக்க தொடங்கிவிட்டான், கெளதம்.. அவன் கண்பார்வையிலேயே அவள் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.. இதுதான் காதல் போலும்.. "  , யோசித்து கொண்டிருக்கையில் அப்படியே களைப்பில் உறங்கிபோனான் கெளதம்..
3.   
 மறு நாள் அதிகாலையில் flight பெங்களூரில்  தரை இறங்கியது , ஏர்போர்டை விட்டு வெளியே வந்த கெளதம் அங்கு அவனுக்காக காத்திருந்த காரில் ஏறி அமர்ந்ததும் ஓட்டுனரை நோக்கி,
 "காரை “செவென் ஸ்டார்” ஹோடேலுக்கு விடுங்க என்று கூறியபடி சீட்டின் மேல் கை போட்டு தலையை சாய்த்து அமர்ந்தான்.. "கெளதம் சார் என்ன பெங்களூர் பக்கம் ரொம்ப நாள் ஆள காணோம்.?" என்று ஓட்டுனர் வினவினான்..
அவன் பெங்களூர்கு அடிக்கடி வருபவன் தான் ஆனால் கல்யாணம் ஆனதில் இருந்து மித்ராவை பார்க்க கூடாதென்று தான் பெங்களூர் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை..
 "அது ஒன்னும் இல்ல தங்கையா சென்னைல வேலை அதிகம் அதான் வர முடியல.." என்று பதில் அளித்தான்..
“ஒஹ் சரி சார்.. நீங்க எப்படி இருக்கீங்க.? ஊருல எல்லாம் எப்படி இருக்காங்க.? " என்று அன்பாய் வினவினான்..
அந்த விசாரிப்பில் கொஞ்சம் கவலை மறந்தவனாய் ., "எல்லோரும் நல்ல இருக்கோம் தங்கையா.. உன் வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க.? "என்றான்..
"எல்லாரும் நல்ல இருக்காங்க சார்.. " ஹோட்டல் வந்ததும் கெளதம் காரைவிட்டு இறங்கி ஓட்டுனரை நோக்கி..   'தங்கையா, நீ இங்கே இதே இடத்துக்கு இரண்டு மணி மேரம் கழித்து வா எனக்கு வெளிய போகணும்.. லேட் பண்ணாம வரணும் ஓகே வா.?'' என்று கேள்வியாய் ஓட்டுனரை பார்த்தான்..
"சரி சார் நான் வந்துறேன்.." என்று பதில் அளித்துவிட்டு காரை கிளப்பினான்..
கெளதம் பெங்களூர் வந்தால் எப்போதும் தங்கும் ஹோட்டல் இது.. அவன் அப்பா இவன் அங்கே இருந்து கிளம்பும் போதே ரூம் புக் செய்துவிட்டதால் ரூம் கீயை மட்டும் பெற்றுக் கொண்டு தன் அறைக்கு சென்று அறைக் கதவை  தாளிட்டு கொண்டான் .. சாப்பாடிற்கு ஆர்டர் கொடுத்து விட்டு குளிப்பதற்காக சென்றான், அவன் குளித்து முடித்து வந்த சில நிமிடங்களில் சாப்பாடு வந்து விட்டது, சாப்பிட்டு முடித்தவன்.. சற்று நேரம் டிவியை  ஆன் செய்து சேனல்களை மாற்றிக் கொண்டிருக்க அவனுக்கு பிடித்த ஆல்பம் பாடல் வரவும் அதை பார்க்க ஆரம்பித்தான் .
 " கண்கள் அழுகிறதே உன் நினைவில் உன் நினைவில்..
   கண்ணீர் சுமக்கிறதே என் உயிரில் என்  உயிரில்.."
அதில் வரும் ஒவ்வொரு வரிகளும் அவன் நெஞ்சை உருக்கின..  தொடர்ந்து பாடலை கேட்க ஆரம்பித்தான்..
  "காதல் சுகம் தானா தனிமையிலே தவிக்கையில் சுகம் தானா .?" என்ற வரிகளில் அவன் மனம் கேள்வி கேட்டது மித்ரா நீ இல்லாமல் நான் வாழும் இந்த தனிமையான வாழ்க்கை எனக்கு சுகம் இல்லையே என்று ..
 " பெண்ணாய் நீயுமேன் பிறந்ததேனோ பிறந்ததேனோ.? விழிகளில் தரிசணம் தந்ததேனோ தந்ததேனோ .?
   உன் கண்களில் நானும் பிறந்திருந்தால் கண்ணீராய் நானும் கலந்திருப்பேன் வழிந்திருப்பேன்.."
  என்ன உருக்கமான வரிகள் என்று அவன் மனம் கதறிக் கொண்டிருந்த போது அறையின் தொலைபேசி அடிக்கவும் எழுந்து சென்று எடுத்தான் ..
  "சார் உங்களை பிக் பண்ண உங்க டிரைவர் வந்துருக்கார்.. " என்று மறுமுனையில் வரவேற்பாளர் சொல்லவும் ..
 "யா கமிங்.. தேங்க்ஸ்.." என்று இணைப்பை துண்டித்துவிட்டு முகத்தை கழுவிக்கொண்டு அறையை பூட்டிவிட்டு கீழிறங்கினான்.. காரில் ஏறி அமர்ந்தவன் சாப்ட்வேர் சொல்யுசன்ஸ்கு போங்க என்று கூறிவிட்டு மௌனமானான்..
4.   
 சற்று நேரத்தில் கெளதம் கூறிய  சாப்ட்வேர் சொல்யுசன்ஸ் கம்பனிக்கு கார் வந்தடைந்தது .. அவன் தங்கையாவை வரும் வரைக்கும் வெயிட் பண்ண சொல்லிவிட்டு கம்பெனிக்குள் நகர்ந்தான்.. அந்த கம்பனியின் வரவேற்பாளரிடம்..
  "ஹலோ.. நான் உங்க ஆபீஸ் செக்ரட்டரி Mrs .மித்ராவை  மீட் பண்ணும்.." என்று கெளதம்  கேட்க..
 அவள் "ஓ ஸூர் sir.. அவங்ககிட்ட கேட்கிறேன் இருங்க .. உங்க name .?என்று அவனை கேட்டாள்.. "      "ராஜீவ்னு சொல்லுங்க.. " என்றான்.. எங்கே அவன் தான் வந்திருப்பது என்று தெரிந்தால் பார்க்க வரமாட்டாள் என்று நினைத்து பெயரை மாற்றிச் சொன்னான்..
"ஓ ஓகே சார்.. ப்ளீஸ் பீ சீடெட் " என்றாள் பணிவாய்.
மித்ராவை லைனில் கொண்டு வந்தாள், “ மித்ரா ஹாய் .. உங்களை பார்க்க ராஜீவ்னு யாரோ வந்துருக்காங்க..”
 "ஓகே நான் ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் "என்று அவளுக்கு பதில் அளித்து விட்டு , வந்திருப்பது யாராக இருக்கும் என்று யோசித்தபடியே, தன் இருக்கையை விட்டு  எழுந்து வரவேற்பறையை நோக்கி நடந்தாள் மித்ரா ., வரவேற்பறையை அடைந்ததும் சோபாவில்  அமர்ந்திருந்த கெளதம் அவள் கண்ணில் பட்டான்.. அவனை கண்டதும் அதிர்ந்து சிலையாய் நின்றுவிட்டாள்..
பின் சமாளித்துக் கொண்டு அவனை நோக்கி  ,"கௌ.. கௌ.. கெளதம்.. நீங்களா.??" என்று  அதிர்ச்சி விலகாமல் கேட்டாள் .. "ஏன் என்னை எதிர்பார்க்கவில்லையா.?", என்று கண்களில் கோபக்கனல் நிரம்ப கேட்டான்..
"கெளதம் இங்கே ஏதும் பேச வேண்டாம் இருங்க ஒரு நிமிடம்,", என்று கூறிவிட்டு ஆபீசில் லீவ் சொல்லிவிட்டு தான் கைப்பையை எடுத்து கொண்டு அவனிடம் வந்தாள்..
 "வெளிய போய் பேசலாம் ", என்று அவனை அழைத்தாள்..
 "ஹ்ம்ம் ஓகே ", என்றபடி வெளியேரினான்.. அவனை பின்தொடர்ந்து அவளும் சென்றாள்..
"எங்கே போகலாம்.?" என்று அவளை கேட்க, அவள் பதிலுக்கு "என் வீட்டிற்கே போகலாம் என்றாள்"..
 "தட் இஸ் பெஸ்ட் . ஏனென்றால் ,கொஞ்சம் பர்சனல்லா பேசணும்  ", என்று அவளிடம் திரும்பி அவள் முகத்தை பார்த்து சொன்னான்.. அவள் சந்தன நிறத்தில் சல்வார் கமீஸ் அணிந்து இருந்தாள்., அதில் தங்க நிற கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.. இவள் மட்டும் ஏன் என் கண்களுக்கு அழகாக தெரிந்து தொலைக்கிறாலோ.? ஹ்ம்ம் என்ற பெருமூச்சோடு தான் வந்திருந்த காரின் அருகில் வந்து நின்றான்.. மித்ராவும் அவன் எதற்கு வந்திருபானோ என்ற பதற்றத்தோடு அவனை தொடர்ந்து வந்து நின்றாள்..
"ஏறு உள்ள" , என்று காரின் பின் பக்க கதவை திறந்தான்., அவளும் ஏறிக்கொண்டாள்... அவளை தொடர்ந்து அவனும் காரில் ஏறி அவள் அருகில் அமர்ந்தான் ".. தங்கையா காரை இவங்க வீட்டுக்கு விடுங்க என்று அட்ரெஸ் சொன்னான்.. மித்ராவுக்கு புரிந்தது அவன் அவள் செய்கையை கல்யாணத்திற்கு பிறகு கண்காணித்து இருக்கிறான் என்பது.. என்மேல் நம்பிக்கை இல்லாமல் இத்தனை நாளும் என்னைக் கண்காணித்து வந்திருக்கிறார், என்று நினைத்தாள், நினைத்ததை வாய் தவறி உளறியும்விட்டாள்..
கெளதம் அவளை முறைத்தவாரே., "ஆமாம் நீ என்ன செய்கிறாய் என்று எனக்கு தெரிய வேண்டாமா.?" என்று கோபமாய் கேட்டான்.. "ஏன் உங்களுக்கு தெரியனும்.? என் சொந்த விஷயத்தில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை புரிகிறதா.?".. என்று அவளும் கோபமாய் சொன்னாள்..
"உன் கணவனுக்கு உரிமை இல்லையா .?", என்றான் கேலியாய் புருவம் உயர்த்தி..
"இதோ பாருங்க இப்படிலாம் பேசாதீங்க", என்று முகத்தை திருப்பி கொண்டாள்..
 "ஹ்ம்ம் உண்மை என்றும் மாறாது",என்று கூறிவிட்டு அவனும் திரும்பி கொண்டான்..
 அவள் வீடு  வந்ததும், காரை வெயிட் பண்ண சொல்லிவிட்டு அவன் அவளை பின் தொடர்ந்து வீட்டினுள் சென்றான்..

"உக்காருங்க Mr .கெளதம் ", என்றபடி காப்பி போடுவதற்காக சமையல் கட்டினுள் புகுந்தாள்.. அவன் அங்கே போடப்பட்டிருந்த குஷன் ஒன்றில் அமர்ந்து கொண்டான்.. வீட்டை சுற்றி பார்வையை சுழலவிட்டான்.. 'வீட்டை சுத்தமா வைச்சு இருக்காளே, வேலைக்கு போயும் இப்படி சுத்தமா வைச்சுக்க டைம் இருக்குமா.? ஹ்ம்ம்..' என்று மனதினுள் நினைத்து கொண்டு இருக்க அவள் காபியுடன் அங்கே வந்தாள்..
"எடுத்துகோங்க .." என்று காப்பி ட்ரேயை அவன் முன்னால் நீட்டினாள் .. அவன் அதை எடுத்து கொண்டு ,"நன்றி ", என்றான்..
அவளும் காபியுடன் அவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள் ,"சொல்லுங்க திடிரென்று வந்துருக்கீங்க, எதுக்கு வந்துருபீங்கனு  என்னால புரிஞ்சுக்க முடியுது .. விவாகரத்துக்கு தானே.? எனக்கு சம்மதம் எங்கே கையெழுத்து போடணும்னு சொல்லுங்க போடறேன்.. ", என்றாள் இயல்பாக , ஆனால் அவள் மனது  தாலிகட்டியதில் இருந்து  இதுவரை  அவனை கணவனாகத்தான்  நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தது தாலியின் மேல் உள்ள மதிப்பால் தானே அவள் ரஞ்சித்துடன் வாழாமல் தனியாக வாழுகிறாள், இனியும் அவள் மனது கௌதமை தவிர வேறு ஒருவனை கணவனாக ஏற்காது.. இருந்தும் கௌதமிற்கு வேறு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி நடிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு..
அவள் கூறியதை கேட்ட கெளதமிற்கு கோபம் தலைக்கு ஏறியது .. சட்டென்று இருக்கையைவிட்டு எழுந்தவன் அவள் மீது கோபமான பார்வையை மட்டும் அல்லாது வார்த்தைகளையும் வீசினான்..
 "என்னடி சொன்ன .? விவாகரத்தா உன்னை கொன்று விடுவேன் இங்கே பாரு என்னுடன் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் நீதான் என் மனைவி .. இன்னொரு முறை இப்படி சொன்னாயானால் என்னுடைய மறு முகத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும் ஜாக்கிரதை.. விவகரத்தாம் .. ச்சே வெக்கமா இல்லையா உனக்கு இப்படி சொல்ல ", என்று பொறிந்து தள்ளினான்..
மித்ரா இந்த கோபத்திற்கெல்லாம் பயப்படும் ஆள் இல்லை ஏனெனில், அவளுக்கு தைரியம் அதிகம் ஆண்களுக்கு சரி சமமாய் நிற்ப்பாள்..
"ஹா ஹா உங்கள் மறு முகத்தை கண்டு பயந்து விடுவேன் என்று நினைத்தீர்களா.? உங்க அளவுக்கு வசதி இல்லாமல் இருக்கலாம் நீங்க பணத்தை வெச்சு என்ன வேண்டும் என்றாலும்  செய்யலாம் அதற்காக நான் பயப்பட மாட்டேன், நீங்க என்னைக் கொலையே பண்ணினாலும் போராடித்தான் தோற்பேன் நான் தைரியத்தில் ஒன்றும் உங்களுக்கு குறைச்சல் இல்லை ..  நான் எதற்கும் பயப்படாதவள்..  " என்றாள் ஏளனமாக   , தைரியமாக.. அவன் அவ்வளவு கோபத்திலும் அவள் தைரியத்தில் ஈர்க்கப்பட்டான், அவளை ஒரு நொடி ரசித்தவன் மறு கணம் அவள் செய்ததை நினைத்து கோபத்துடன்
  "இங்கே பாரு டீ நான் உன்னை கொல்வதென்றால் எப்போதோ செய்து இருப்பேன் .. என்னுடன் நீ இப்போது சென்னைக்கு வர வேண்டும்.. உன்னை கூட்டிபோக தான் வந்தேன் விவாகரத்து வாங்க அல்ல.. அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் மறந்துவிடு கனவிலும் அது நடக்காது..  " என்று கோபத்தில் கர்ஜித்தான்..
"நான் யாருடனும் வர தயாராக இல்லை.. விவாகரத்திற்கு தான் தயாராக இருக்கிறேன்.. "
"என்னடி ரொம்ப பேசிட்டே போறே.. உன் கழுத்தில் தாலி கட்டிய பாவத்திற்காக நான் படும் வேதனை போதாதா.? என் பெற்றோர்களும் சேர்ந்து கஷ்டப்பட வேண்டுமா.? என் நிலைமையை பார்த்து அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டே இருகிறார்கள் .. மரியாதையாக என்னுடன் கிளம்பி வந்துவிடு.. "என்றான் கண்கள் சிவக்க..
"என் அம்மாவிடம் பேசி ஒரு வருடம் ஆகுது அவர்களுக்காக வராத நான் உங்க அம்மா, அப்பாவிற்காக ஏன் வரணும் ", என்றாள் அலட்சியமாக தோள்களை குலுக்கி கைகளை கட்டிக்கொண்டு..
"உன் அம்மா இறந்தது உனக்கு தெரியாதா.? ", என்றான் ஆச்சரியமாக ..!
"என்ன என்ன சொல்லுறீங்க என் அம்மா உயிருடன் இல்லையா .?", என்று பதற்றத்தில் கத்தினாள்..
"இது உனக்கு தெரியாதா நீ கல்யாணத்தில் இருந்து வெளியே வந்த இரண்டு நாளிலேயே உன் அம்மா இறந்துட்டாங்க ஹார்ட் அட்டாக்ல "
   மித்ரா தன் காதுகளையே நம்ப முடியாமல் கண்களை நீர் நிறைக்க அப்படியே நின்றுவிட்டாள்.. கெளதம் தான் நிலைமையை சரி செய்ய விரும்பி அவளை பிடித்து உலுக்கின்னான்..
அவள் நிலைமையை உணர்ந்து கதற ஆரம்பித்தாள்.. "ஐயோ கடவுளே இது என்ன சோதனை .? நான் செய்த தவறுக்கு என் அம்மாவின் உயிரை ஏன் எடுத்துக் கொண்டாய் என் உயிரை எடுத்துக் கொண்டிருக்கலாமே.? நான் பாவி அம்மா.. என்னை மன்னித்துவிடு நான் தான் உன் சாவிற்கு காரணம்.. என்னால் தாங்க முடியவில்லையே..!" அவள் துடித்து போனாள்..
கௌதமிற்கு அவள் அழுவதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியவில்லை .. அவன் அவள் அருகில் சென்று  அவளை உட்காரவைத்துவிட்டு தானும் அமர்ந்தான் , "மித்ரா இங்கே பாரு நடந்தது நடந்துருச்சு இப்போ அழுது என்ன பயன்.. நான் இதற்காகத்தான் அன்றே சொன்னேன் நம் வாழ்க்கையை தொடங்கலாம் நான் உன்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று.. சரிவிடு டா நடந்தது நடந்துவிட்டது இனியாவது நடப்பது நல்லதாக இருக்கட்டும்.. உனக்கு நான் இருக்கிறேன் .. " என்றான் அவள் தோள் பற்றி ஆதரவாக ..
வேதனை தாங்காமல் அவள் அவன் தோள் மீது சாய்ந்து கதறினாள்.. அவனுக்கு அவள் அவ்வளவு உரிமையாய் சாய்ந்தது இனித்தது , இது வரை உணராத புது மகிழ்ச்சியை மனதில் உணர்ந்தான்.. அவள் அழுது முடிந்ததும் அவள் அவன் தோளில் இருப்பதை உணர்ந்தாள்.. டக்கென்று எழுந்து கொண்டாள் , அவனுக்கு அவள் இப்படி செய்தது மனதில் வலித்தது ..
 "சரி விடுங்க என்னால் உங்களுடன் வாழமுடியாது அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிப்போம் ". என்றாள்.. அவ்வளவு வேதனையிலும் அவன் வாழ்கையை மனதில் கொண்டு.. தனக்கென்று ஆதரவில்லாமல் போனாலும் பரவாயில்லை., அவனுக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் அவளுக்கு..
" அவனுக்கு இந்த வேதனையிலும் தான் பிடித்தது பிடித்ததுதான் என்று நிற்கிறாளே என்று கோபம் தான் வந்தது .. தான் நிலை மறந்து கத்தினான் .. " உன்னக்கு என்ன சொன்னாலும் புரியாதா..? உன் அம்மாவின் நிலைமை என் பெற்றோருக்கும் வர வேண்டும் என்று நினைகிறாயா.? இவர்களையாவது நிம்மதியாய் வாழவிடு..  " என்று கத்தினான்..
அவளுக்கும் அவன் சொன்னது சரியாக பட்டது ஆனால் அவன் வாழ்க்கை என்ன ஆகும் இவளால் அவனுடன் வாழ முடியாதே என்று நினைத்தவளாய் அவனிடம்..
   "நான் வரேன்.. என்னால் உங்களுடன் ரொம்ப நாட்கள் இருக்க முடியாது.. அவங்க மனசு வலிக்காம பக்குவமா நம்ம வாழமுடியாதுன்னு சொல்லி நீங்க வேற கல்யாணம் பணிக் கோங்க ", என்றாள்
"இதோ பாருடி நீதான் என் மனைவி இந்த ஜென்மம் மட்டும் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் , என்னுடன் நீ வாழ்ந்துதான் ஆகணும் ஒழுங்கா என்னுடன் வாழுற வழிய பாரு ", என்றான் ஆவேசமாய்
"என்னால் உங்களுடன் வாழ முடியாது என்னால் ரஞ்சித்துடன் வாழ்ந்த வாழ்கையை மறக்க முடியாது ..என்றாள் "
"அப்படியா அப்படியானால் ஏன் அவனுக்கு நீ வேற கல்யாணம் செஞ்சு வைச்ச", என்றான் கேள்வியாய்
"உங்களுக்கு எப்படி  அவனுக்கு கல்யாணம் ஆனது தெரியும் ", என்று அதிர்ச்சியாய் அவனை பார்த்தபடியே கேட்டாள் ..
அவன் "இந்த கௌதமிற்கு எல்லாம் தெரியும் ரஞ்சித்திற்கு கல்யாணம் செய்து வைத்தது நீதான் , என்பதும் எனக்கு தெரியும்.. ",
"ஆமாம் ஆனால் .. "
ஆனால் எல்லாம் ஒன்னும் இல்ல இப்போ நீ என்னுடன் வா .. என் பெற்றோரின் மீதி வாழ்கையை ஆகிலும் நிம்மதியாய் வாழவை.. என்று உத்தரவிடும் தோரணையில் கூறினான் ..
" எல்லாம் என் தலை விதி உங்களிடம் மாட்டிக்கொண்டு இது என்ன வாழ்க்கை ச்சை.. என்றாள் சலிப்பாக..”
"ஆமாம் என்னுடன் வாழ்வது உனக்கு சலிப்பாகத்தான் இருக்கும்.. சொன்னதை செய் அதுதான் நமக்கு நல்லது..  "
"எல்லாம் என் நேரம்.. கிளம்பி வருகிறேன் மிஸ்டர்.கெளதம் பொம்மையை போல நீங்க சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்ட வேண்டிய நிலைமை " என்று தலையில் அடித்துக்கொண்டு அவளது அறைக்கு சென்றாள்.. துணிகளை pack செய்துக் கொண்டே எப்படி அவனைவிட்டு திரும்பி வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டிர்ந்தாள்.. சற்று நேரத்தில் முகம் கழுவி உடை மாற்றிவிட்டு , பெட்டியுடன் வெளியே வந்தாள் ..
வந்தவளை திரும்பி பார்த்தான் கெளதம் , பேபி பிங்க் நிற சேலையில் இருந்தாள் சேலையை  நன்றாக கட்டதெரிந்தவர்கள் போல உடுத்தி  இருந்தாள்.. அதற்க்கு மேட்ச் ஆக கல் பதித்த செயின், கம்மல், வளையல்கள் என்று சிம்பிள் ஆக இருந்தாள் , அவள் கண்ணனுக்கு மை தீட்டி இருந்தாள் , அது அவள் அழகான கண்ணை மேலும் அழகாக்கியது.. அவன் அவளை ரசித்த படியே நின்றுவிட்டான் ..அவன் எண்ணம் புரிந்தவளாய் ,அவனை திசை திருப்ப
"கெளதம் .. என்ன அப்படி  பாக்குறீங்க " என்று கேட்டாள் ..
"உன் அழகை இவ்வளவு நாள் ரசிக்காததால் இப்போ ரசிச்சு  பாக்குறேன் ", என்று கண் அடித்தான்
"கெளதம் நீங்கள் ஏன் என்னை பார்க்கணும் , நான் ஒன்னும் அவ்வளவு அழகோ., நிறமோ இல்லையே, உங்களுக்கு இனி வரபோகும் மனைவி நல்ல நிறமுள்ள., குணமுள்ள பெண்ணாகப்  பார்த்து கல்யாணம் பண்ணிகோங்க  ",என்றாள் இயல்பாக..
 அவன் அவளை கோபமாய் பார்த்தபடி சொல்ல தொடங்கினான் ," எவ்வளவு எளிதாய் சொல்லிவிட்டாய், உன்னை தவிர வேறு ஒருத்தியை என் மனம் ஏற்குமா.? இல்லை என் கண்கள் உன்னை தவிர இன்னொரு பெண்ணை ஏறெடுத்து தான் பார்க்குமா.? நீ என்னை ஏற்காவிட்டாலும் என் இதயம் துடிப்பது உனக்காக தான் .. இன்னொரு முறை இப்படி சொல்லி என்னை காயப்படுத்தாதே " என்று மனம் வலிக்க கூறினான் ..
இதற்க்கு மேல் பேசி ஏதும் இவனை கஷ்டபடுத்த வேண்டாம் என்று நினைத்தவளாய் "சரி நான் ஏற்கனவே சமைத்து வைத்து  இருக்கிறேன் சாப்பிடலாமா.?என் கையால் செய்ததை சாப்பிடுவீங்களா.?"
"உன் கையால் சாப்பிடாமல் வேறு யாரு கையால் சாப்பிடுவேன் .?" என்று அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ..
 சமையல் அறைக்குள் நுழைந்து சாப்பாட்டை எடுத்து டைனிங் டேபிள் மீது வைத்தாள்.. கெளதம் உட்கார்ந்ததும் அவனுக்கு சாப்பாடு பரிமாறினாள்..
"நீயும் என்னுடன் உட்கார்ந்து சாப்பிடு ",என்று அவளை பார்த்தான் ..
அவள்  அவன் சொன்னதும்  அவனுக்கு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்..
"ஏன் தள்ளி உட்காருகிறாய் .? என்னுடன் சாப்பிட பிடிக்காவிட்டால் சரி அப்போ நான் போகிறேன் ", என்று எழுந்தான் .. "ஐயோ உட்காருங்கள் என்று பதறி அவன் அருகில் அமர்ந்தாள்"..
  சாப்பிட்டு முடிந்ததும் அவள் பாத்திரங்களை எடுத்து கொண்டு சமயல் அறைக்கு போனதும்.. அவன் கைகளை கழுவி விட்டு.,  அவள் அறைபக்கம் போனான் .. போனவனுக்கு அதிர்ச்சி , அந்த அறையில் அவனது புகைப்படங்கள் சுவர் அளவு உயரத்தில் வரையப் பட்டு இருந்தது.. ஓவியம் அவ்வளவு உண்மையாய் தெரிந்தது பார்ப்பதற்கு.. அவனுக்கு இன்பதர்ச்சி இதை அவன் எதிர்பார்க்கவில்லை ..
அவள் மனதில் சின்ன இடம் இருந்தால்கூட போதும் என்று நினைதிருந்தவனுக்கு அவள் அவனைப் பார்த்துக் கொண்டே தான் இத்தனை நாட்களும் வாழ்கிறாள் என்றால் அவனது மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.? " ஆனாலும் அவன் மனதில் அந்த சந்தேகம் எழாமல் இல்லை இவ்வளவுபாசம் வைத்து இருப்பவள் ஏன் மறைத்து என்னை வேறு மணம் புரிய சொல்கிறாள், என்று நினைத்தபடியே ஹாலிற்கு வந்தான்..  மித்ரா சிறிது நேரத்தில் சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு
“கிளம்பலாமா” என்றாள் ..
அவன் மலர்ச்சியாய்., "சரி .. " என்று தலையசைத்தான்.. இருவரும் வீட்டை பூட்டிவிட்டு .. பெட்டிகளை ஓட்டுனரிடம் கொடுத்து காரில் வைக்க சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தனர்..
ஓட்டுனரை நோக்கி காரை ஏர்போர்டுக்கு விடுங்க தங்கையா.. என்றவனை கேள்வியாய் பார்த்தாள்., " உங்களது பெட்டியை எடுத்துவரவில்லையா.? " என்றாள்..
 அவன் புன்னகையுடன் அவளிடம் ," நான் வரும்போதே எல்லாவற்றையும் ஹோட்டலை காலி செய்துவிட்டு கொண்டுவந்துவிட்டேன்.. இப்போ நேரா ஏர்போர்டுக்கு போகணும்..  " என்றான்.. சிறிது நேரத்தில் கார் ஏர்போர்ட்ஐ வந்தடைந்தது .. இருவரும் காரை விட்டு இறங்கினர்  ஓட்டுனரிடம் கெளதம் பணத்தை கொடுத்து விடை பெற்றுக்கொண்டான்.
இருவரும் ஏர்போர்ட்னுள்  நுழைந்து சென்னை ப்ளைட்டில் ஏறி அமர்ந்தனர் ..ப்ளைட் சென்னை ஏர்போர்ட்ஐ அடைந்த போது மாலை 6 ஆகிவிட்டது.. சென்னையில் ரொம்ப நாட்களுக்கு பிறகு காலடி எடுத்து வைத்தாள் மித்ரா.. அவளுக்காக அங்கே ஒரு வசந்த காலம் காத்திருகிறது.. அந்த காலம் அவளை கேலியாய் இந்த வசந்த காலத்திலிருந்து தப்பிக்க தானே நீ ஓடினாய் விதி உன்னை மீண்டும் இங்கே வரவழைத்துவிட்டது .. என்பது போல பார்த்தது..
கௌதமிற்காக ஆடி சார் ஒன்று வெளியே காத்திருந்தது.. மித்ரா ஆச்சரியமாய் பார்த்தாள்.. இந்த காரின் மதிப்பு எப்படியும் ஐம்பது லட்சத்திற்கு மேல்தான் இருக்கும் இவன் அவ்வளவு பெரிய ஆளோ..?
பாவம் அவளுக்கு என்ன தெரியும் அவனைபற்றி ஒரு நாள் கூட அவனுடன் வாழ்த்து இல்லையே.. அவள் வியந்தபடியே அவன் அருகில் காரில் ஏறி அமர்ந்தாள்..
 
ஒரு மணி நேரத்தில் ஒரு பெரிய கோட்டை போன்ற மதிலுக்குள் தெரிந்த பங்களாவினுள் நுழைந்தது அவனது கார்.. அதன் கதவு திறக்கப்பட்டதும் அதற்குள் இருந்த பங்களாவின் மேல் அவள் பார்வை பதிந்தது..
 "அப்பா.!! என்ன ஒரு அழகான அரண்மனை போன்ற பங்களா.. எவ்வளவு அழகிய பழங்காலத்து ராஜா அரண்மனை போன்ற வேலைபாடுகள்.. இப்படி ஒரு பழமை வாய்ந்த பிரம்மாண்டமான அரண்மனையை பார்ப்பேன் என்று என் கனவிலும் நினைக்கவில்லை..
 இவ்வளவு பெரிய அரண்மனைக்கு சொந்தகாரனா இவன்.? அவனைப் பார்க்கும் போது வியப்பு..! அவனை நமபமுடியாமல் மறுபடியும் பார்த்தாள் காதல் எந்த ஒரு மனிதனையும் எளிமையாக்கிவிடும் போல ச்ச நாலா ஒரு அந்தஸ்தில் இறக்கும்., குணம் உள்ள ஒரு நல்லவனின் வாழ்கையில் விளையாடிவிட்டோமே..  கண்டிப்பாக இங்கிருந்து போகும் முன்னால் இவனுக்கு ஒரு நல்ல வாழ்கையை ஒரு நல்ல பெண்ணுடன் அமைத்து தந்துவிட்டு தான் போக வேண்டும்.. " என்று வாய்த்த கண் வாங்காமல் அவனையே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாள்..
 அவன் அவள் யோசனையை கலைக்கும் விதமாக.. "மித்ரா என்னாச்சு உனக்கு என்ன யோசனை..? " என்றான் வசீகரிக்கும் கம்பீரமான குரலில்..
மித்ரா சமாளித்துக் கொண்டு ., "அது அது ஒன்றும் இல்லை கெளதம்.. எப்படி புது இடத்தில புது மனிதர்களுடன் இருபது என்று கொஞ்சம் யோசனையை இருக்கிறது .." என்றாள் சமாளிப்பதற்காக மட்டும் அல்ல உண்மையில் அவளுக்கு அந்த தயக்கம் இருந்தது.
அவன் ஆதரவாய் அவளை பார்த்தான் ., " ஏன் இந்த தயக்கம் மித்ரா.? நான் புது மனிதன் இல்லை என் வீட்டில் உள்ளவர்களும் புது மனிதர்கள் அல்ல.. நாங்கள் உனக்கு இருக்கும் சொந்தம்.. நான் உன் கணவன்.. " என்றான் தைரியம் தர அவள் கரங்களை அழுத்தி..
அவளுக்கு அந்த ஆதரவு பிடித்திருந்தது ஆனாலும் அதை மறுக்க., கைகளை உதறிக் கொண்டு .." இல்லை கெளதம் என்னக்கு நீங்கள் அன்னியராகத்தான் தெரிகிறீர்கள் .. மன்னித்துக் கொள்ளுங்கள்..  " என்றாள் தலையை குனிந்து கொண்டு..
 அவன் அவள் கண்களை பார்த்து., வலியோடு சொன்னான்., "ஏன் மித்ரா இப்படி வார்த்தையால் என்னை வதைக்கிறாய்.? இதற்கு என்னை கொன்றுவிடு மித்ரா.?" என்றான் கலங்கிய இதயத்துடன்..
 மித்ரா அவன் கலங்கியதைப் பார்த்து துடித்துப் போனாள்., "ஐயோ என்ன கெளதம் இது நான் நினைத்ததை சொன்னேன்.. இனி இப்படி சொல்லவில்லை .." என்றாள்..
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கார் அந்த பங்களாவின் வாசலின் முன்னால் நின்றது..  காரைவிட்டு இருவரும் இறங்கி வாசல் கதவருகே சென்றனர்.. அங்கே கௌதமின் தாயார் ஆரத்தி தட்டுடன் நின்றுக் கொண்டிருந்தார்.. அவர் ஆரத்தி எடுத்து முடிந்ததும் ..மித்ரா அவரை பார்த்தது .,
 "மன்னித்துவிடுங்கள் அம்மா.. " என்று கால்களில் விழப்போனாள் அவர் தடுத்து ., "என்னமா இது சிறுபிள்ளை தனமாய் உன்னை மன்னிக்காமல் யாரை மன்னிப்பேன். என் மகனின் உயிர் அல்லவா நீ.? நீ இல்லாமல் அவன் இவ்வளவு நாட்களும் எப்படி துடித்தான் என்று உனக்கு தெரியாது.. சரி அதை விடு இருவரும் முதலில் உள்ளே வாருங்கள்.. " என்று உள்ளே அழைத்து சென்றாள்..
கௌதமின் தந்தை ஆனந்தத்தோடு அவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் அங்கே.. மித்ரா அவர் கால்களிலும் விழப்போனாள்., அவரும் அவளை பாசமாய் அதட்டினார்..
"அட என்ன மித்ரா இது நீயும் என் மகள் மாறித்தானே அம்மா.. இனிமேலாவது இருவரும் நல்லபடியாக வாழுங்கள் .. சரி நீங்க களைப்பா இருப்பீங்க போய் refresh ஆகிவிட்டு வாங்க சேர்ந்து சாப்பிடலாம்.." என்றார் அந்த வயதிலும் கம்பீரம் குறையாத குரலில்..
மித்ராவும்., கௌதமும் தலையசைத்துவிட்டு அவன் அறைக்கு சென்றனர்.. அவள் சோர்வாய் அங்கிருந்த வரவேற்பறையில் போடபட்டிருந்த சோபாவில் சரிந்தாள்.. தானாக கண்கள் அவன் அறையை சுற்றி சுற்றிப்பார்த்து.. அவன்  பெட்ரூமே  வீடு அளவுக்கு இருந்தது , அதில் லைப்ரரி ஒன்று இருந்தது , பெட் ரூமிலேயே  குளியல் அறை அமைக்க பட்டிருந்தது .. ரூமில் துணிகள் அடுக்குவதற்காகவே சுவருடன் சேர்த்து செய்யபட்டிருந்த அலமாரிகள் நான்கு ஐந்து இருந்தது ,,.. அதில் அவள் துணியை அடுக்க சொல்லி விட்டு குளிக்க சென்றுவிட்டான்.. அப்படியே செய்தாள்..
 அதற்குள் கெளதம் குளித்து உடை மாற்றி வந்திருந்தான் , துணிகளை அடுக்கி விட்டு அவள் குளித்துவிட்டு வந்ததும் இருவரும் கீழே சென்றனர்..
 அவர்கள் ஜோடியாக வருவதை பார்த்த கௌதமின் பெற்றோருக்கு மனம் நிறைந்தது .. எல்லோரும் சாப்பிட்டதும் சிறிது நேரம் பேசி விட்டு உறங்க சென்றனர்..           
 கெளதம், மித்ராவிடம் " புது  இடம் என்று தயங்க வேண்டாம்.. உனக்கு என்ன வேண்டுமென்றாலும் தயங்காமல் என்னிடம் கேள்  " என்றான்
“ எனக்கு ஒன்றும் வேண்டாம் அப்படியே ஆனாலும் நானே வாங்கி கொள்வேன் அப்புறம் நாளைக்கு நான் வெளிய போகணும் கம்ப்யூட்டர் சென்டர்கு என்றாள்..
"அங்கே எதுக்கு "என்று கேட்டபடி புரியாமல் விழித்தான்
"நான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு 2மாதம் மெடிக்கல் லீவ் கேட்டு மெயில் பண்ணும் "என்றாள்
"மெயில் பண்ண ஏன் அங்கே போகணும் .? இங்கேயே கம்ப்யூட்டர் இருக்கே "என்றான்
"நான் யாருடைய பொருளையும் உபயோகிக்க மாட்டேன் "
" ஏய் என்ன இது சிறு பிள்ளை மாறி ஒழுங்கா இரு இல்லை என்றால் எனக்கு கோபம் வரும் "
"கோபம் வருமாமே சாருக்கு"என்று கிண்டலாய் கேட்டாள்
" இங்க பாரு ஒழுங்கா நான் சொல்றத கேளு  எங்களை இவ்வளவு நாட்களும் தவிக்கவிட்டுட்டு போனது போதும் இனி வேலைக்கு எல்லாம்  அங்கே போகவேண்டாம், வேண்டும் என்றால் நம் கம்பெனியிலேயே வந்து மகாராணி போல் மற்றவர்களை வேலை வாங்கு.. " என்றான்..
 அவள் அவனை ஏறயிறங்க பார்த்து., " அது நம் கம்பெனி அல்ல உங்களது எனக்கு என் உழைப்பில் கிடைப்பது போதும் வேறு ஒருவரது உழைப்பில் வருவது தேவை இல்லை.. உங்களைவிட அந்தஸ்தில் வேண்டுமானால் நான் குறைவாக இருக்கலாம் அனால் சுயகொவ்ரவதில் உங்களுக்கு நான் ஒன்றும் சளைத்தவள் இல்லை.. " என்றால் மூச்சுவிடாமல் படபடவென்று..
செய்த பாவத்திற்கு பரிகம் செய்யும் வழியை பாரு இல்லை என்றால் நீ மிகவும் வருத்தப்படும்படி ஆகிவிடும்., உன்மேல் இருக்கும் காதலால் தான் உன்னை காயப்படுத்த என் மனம் விரும்பவில்லை.. புரிந்துக் கொண்டால் உனக்கு நல்லது..  என்று கத்திவிட்டு படுத்துகொண்டான் ..  அவளும் அதற்கு மேல் அவனை மேலும் கஷ்டபடுத்த விரும்பாமல் தூங்கச்சென்றாள்..
5.   
" மறுநாள்  காலை ஆறுமணிக்கே எழுந்துவிட்டாள் மித்ரா .. எழுந்ததும் குளித்து முடித்து கீழே சென்று காபி போட்டு அத்தையின் அறைக்கு கொண்டு போனாள்
"அத்தை "என்று அறையின் காலிங்  பெல்லை அழுத்திக் கூப்பிட்டாள் .. அத்தை வெளியே வந்து
"அட என்னமா நீ காபி கொண்டு வந்துருக்க ",என்று கேட்க ..
"அத்தை இனி நான்தான் உங்களுக்கு எல்லாம் செய்வேன் என்று சொல்லி காபியை கையில் கொடுத்தாள்"
"சரிமா நீ போய் கௌதமிற்கு காபி கொடு "என்று கூறிவிட்டு கதவை சாத்தினாள் ..வேலையாள் மைதிலியை அழைத்து கௌதமிற்கு காபி கொண்டு போக சொல்லி சொன்னாள் .. அவள் அத்தை திட்டுவாங்க அம்மா நீங்களே கொண்டு போய் குடுங்க என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தாள்..
கௌதமிற்கு காபி போட்டு அவன் அறைக்கு எடுத்துச் சென்றாள்..
"கெளதம் கெளதம் எழுந்திருங்க  "..
"ம்ம்ம்.. " என்று முனங்கினான்..
" எழுந்திறீங்க கெளதம்.. "
"இப்பவே எழும்பனுமா சுஜி" ., என்று அவளை வெறுப்பேற்ற விளையாட்டிற்காக தூக்கத்தில் உளறுவதை போல் நடித்தான் ..
மித்ராவுக்கு மனது வலித்தது “என்ன இவன்.? நான் இங்கே இருக்கிறேன் வேறு எவளின் பெயரையோ உளறுகிறானே.. ? என்று அவனை நோக்கி ,"யாரு சுஜி ", என்று கோபமாய் கேட்டாள்
"சுஜி விளையாடாத டா , என்று அவள் கையை பிடித்து இழுத்தான் "அவள் தடுமாறி அவன் மீது விழுந்தாள்.. விழுந்தவள் எவளையோ கூபிடரானே என்று கோபத்தில் எழுந்து அவனை உலுக்கினாள் ..
அவன் எழுந்து உட்கார்ந்து எதுவுமே நடக்காதது போல் துக்கத்தில் இருந்து விளிதவனை போல பாவனையுடன் " என்ன.? " என்று கேட்டான்  ..
"யாரு அது சுஜி "என்றாள் கோபத்துடன்
அதை ரசித்தவாறே.. "சுஜி அது அது வந்து என் கேர்ள் பிரெண்ட் "என்றான் மனதில் சிரித்து கொண்டே
"கேர்ள் பிரெண்ட்டா? "என்று கோபமாய் வெளியே செல்ல திரும்பினாள்
"ஏய் எங்கே போறே காபியை குடுத்துட்டு போ "என்றான்
"முடியாது உங்க கேர்ள் பிரெண்ட் சுஜி தருவா போங்க "என்றாள்
"நீதானே மறுமணம் பண்ணிக்க சொன்ன அதான்"என்றான்
"ஓ ஆமா நான் போறேன் " என்று வெளியேறிவிட்டாள்.. அவள் மறுமணம் செய்யது கொள்ள சொல்லி வாயால்தான் சொன்னாள் ஆனால் அவளால் அதை ஏற்று கொள்ள முடியாது ..
அவள் செல்வதை பார்த்து சிரித்து கொண்டே குளிக்க சென்றுவிட்டான் குளித்து விட்டு கீழே இறங்கி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான் ..
மித்ரா சமைத்து முடித்து எல்லாவற்றையும் டேபிளில் வைத்து இருந்தாள் , கெளதம் வந்ததும் அவனுக்கு பரிமாறிவிட்டு சாப்பிடுங்க என்றாள் “நீ சாப்பிடலையா.?” என்று கேட்டான் ..
"நான் அப்புறமா சாப்பிடுவேன் "என்றாள்
"ஓ ஏன் "
"உங்களுடன் சாப்பிடத்தான் சுஜி இருக்காளே "என்றாள் கோபமாக.. அவன் அழகாய் சிரித்துக் கொண்டே.. " நீயும் அதைத்தானே எதிர்பார்க்கிறாய்.? " என்று வெறுப்பேற்றினான்..
அவள் முறைத்துக் கொண்டே "இப்போ சாப்பிட போறீங்களா இல்லை அத்தையை கூப்பிடட்டுமா.? " என்றதும் அவன் ., "போடி .." என்று சிரித்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான்..
உணவு முடிந்ததும் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான்.. அவன் சென்றதும் அவளின் அத்தையுடனும் ., மாமாவுடனும் பேசிகொண்டிருந்தாள்..
 " என்னமா ஒரு வருசமா நீ தனியா ரொம்ப கஷ்டபட்டுடியா.?" என்று ஆதரவாய் தலையை தடவிக் கேட்டாள் அவள் அத்தை..
அந்த அன்பில் நெகிழ்ந்துப் போனாள் ., எவ்வளவு அவமானம் தந்துவிட்டு போனேன் இவர்களுக்கு ஆனாலும் பாசத்தை தான் காட்டுகிறார்கள் கண்டிப்பாக நான் போவதற்குள் நல்லதை செய்துவிட்டு தான் போகவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்..
 " இல்லை அத்தை.. "
அப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை ,,
 " அத்தை நீங்க tablet போட்டிருகீங்க அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பேசிட்டே இருந்தா உங்க உடம்புக்கு முடியாம போய்டும்.. " என்றாள் அன்புடன்...
அத்தைக்கு மனம் நெகிழ்ந்தது ., "எவ்வளவு அக்கறை என்மீது சரிமா நான் தூங்கறேன்.." என்று கூறிவிட்டு படுத்துக் கொண்டாள்..  ரொம்ப போர் அடிக்கிறதே என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவளது வழக்கமான கதை புத்தகம் படிக்கும் பழக்கம் ஞாபகத்திற்கு வந்தது ., அவளது அறையில் இருந்த புத்தக அறைக்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருந்தாள்.. அவள் படித்துக் கொண்டிருந்தது அழகான காதல் கதை என்பதால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை..  மதியம் 1ரு மணிக்கு வாசலில்  கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு தான் நேரத்தை பார்த்தாள்.. ஐயோ இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா.?  என்று கீழே இறங்கிச் சென்று பார்த்தாள் கெளதம் தான் வந்திருந்தான் ..
"வாங்க "என்று அவன் பெட்டியை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்
அவனை சாப்பிட சொல்லி தட்டில் பரிமாறியபடி தானும் அமர்ந்தாள்,
"என்ன அதிசயம் என்னுடன் சாப்பிட அமர்ந்து இருக்கிறாய் "என்று கண்களில் காதல் மின்ன கேட்டான்
"சும்மா தான் "அதற்குள் அவன் அம்மா அங்கே வர கௌதமை பார்த்து..
"கெளதம் உனக்கு உன்மேல் ரொம்ப அன்புக்காட்டும் மனைவி தான் கிடைத்திருக்கிறாள் அடா..! என்றாள் "
கெளதம் புரியாமல் முழித்தான் ,"என்ன முழிக்குறே ? உன் மனைவி  காலையில் சாபிட்டாலான்னு கேட்டியா .?"என்றாள்
"ஏன் மித்ரா நீ சாப்டலையா ?"என்றான் கெளதம்
"இல்லையே நான் சாப்பிட்டேன் "என்று சொன்னாள்
"என்ன அம்மா அவள் சாப்பிட்டேன் என்கிறாளே "
"தட்டை கழுவாமலே சாபிடுரா , அது யாருடைய தட்டு என்று கேளு பா " என்றாள் அவன் அம்மா
கெளதம் அவளிடம் திரும்பி கேட்க அவள் முழித்தாள் அவனது அம்மாவே சொன்னாள் ,"உன்னுடைய தட்டில்  தான் கெளதம்.. கணவன் மீது அவளவு பாசம் மித்ராவுக்கு .. நீ கொடுத்து வைத்தவன் தான் கெளதம் " என்றாள் சிரித்து கொண்டே
கெளதம் வியந்தான் இவளா இவளா செய்தாள் இதை ..
"ஆமாம் அம்மா அவளுக்கு என்மீது பாசம் அதிகம் " என்று மித்ராவை பார்த்து கண் அடித்தான் ..
அத்தை சரி சரி இரண்டு பேரும்  சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து நகர்ந்தாள்.. கெளதம் அவளை காதலுடன் பார்த்தான். அவள் வெட்கம் கொண்டவளாய், அங்கே இருந்து கை கழுவ எழுந்து சென்றுவிட்டாள்.. கௌதமும் அவளைத் தொடர்ந்து சென்று கை கழுவிவிட்டு, அவன் அறைக்கு சென்றான்..
அவன் அறைக்கு சென்ற போது மித்ரா அவனது அறையில் இருந்த லைப்ரரியில் அவள் முதல் படித்துக் கொண்டிருந்த போது விட்ட பக்கத்தை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்..
கெளதம் அவளின் பின்னால் நின்று தொண்டையை கனைக்க அவள் ஒன்றும் புரியாமல் அவனை  பார்த்தாள்..
 " என்னங்க.? என்ன விஷயம்.? "
 அவளை தீர்க்கமாய் பார்த்து., " உன்னிடம் நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும்.." என்றான்
 "என்ன அது சொல்லுங்க.." என்று அவள் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து நின்றாள்..
 " அடா நீ உட்காரு.." என்றவன் அவளை உட்கார செய்துவிட்டு தானும் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்..
"உன்கிட்டே ஒன்னு சொல்லணும் மித்ரா..",என்றான்.. "சொல்லுங்க "..
"நான் நம் கல்யாணத்துக்கு 1வருடம் முன்னாடி 'லிசா'என்கின்ற பெண்ணை காதலிச்சேன் இல்லை காதலித்தேன் என்று சொல்ல முடியாது என் வீட்டில் முடிவு செய்த கல்யாணம் என்று சொனால் தான் பொருந்தும்.... அவள் என் அப்பாவின் நண்பனின் மகள்.. ஒரு நாள் குடும்பமாக நம் வீட்டிற்கு வந்து இருந்தார்கள் .. அப்போது அவளுக்கு வீட்டை சுற்றி காட்டச் சொல்லி என் அப்பா சொன்னார், அதனால் நானும் அவளுக்கு வீட்டை சுற்றி காட்ட கூட்டிட்டு போனேன்..
 அப்போ அவள் என்கிட்டே "கெளதம் நான் உங்களை காதலிக்கிறேன் கெளதம். உங்கள் போட்டோவை தான் என் வீடு முழுக்க வைத்திருக்கிறேன், நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று கதறினாள்", என் அப்பா சொன்னதால் நானும் அவளை மணக்க சமதிச்சேன்.. ஒரு நாள் அவளோட ஆபீஸ்க்கு போனேன் , அப்போ அவ அவளோட ஆபீஸ் ரூம்ல இருந்தா, அங்கே வேறு ஒருத்தன் தோள் மேலே சாஞ்சுகிட்டு பேசிட்டு இருந்தா எனக்கு கோபம் வந்துருச்சு.. அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போது அவன் ., " என்ன லிசா இது நீ என்னை விட்டுவிட்டு அந்த கௌதமை கல்யாணம் செய்துக் கொண்டால் நான் எப்படி உன்னை பார்ப்பது பேசுவது.? உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே டார்லிங்.." என்று கேட்டுக் கொண்டிருந்தான்.. அதற்கு லிசா , நோ நோ நான் கல்யாணம் பண்றது அவனை விரும்பி இல்ல அவன் சொத்த விரும்பித்தான், சொத்த வாங்கிட்டு அவனை கலட்டி விட்டிருவேன் என்று சொல்லி கொண்டிருந்தாள்.. எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது அதனால் அவளின் அறைக்குள் நுழைந்து அவளிடம், "நீயும் பெண்ணா.? பிறரை ஏமாற்றி பிழைப்பது பிழைப்பா.? இப்போதே கல்யாணத்தை நிறுத்துகிறேன்.! நீ இனி என் கண்ணில் படாதே உன்னை உயிரோடு விடுகிறேனே என்று சந்தோசப்பட்டுக்கொள் .. " என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன் அதன் பிறகு கல்யாணத்தையும் நிறுத்திவிட்டேன்.. என் அம்மா ரொம்ப கவலைப்பட்டதால் மறுபடியும் கல்யாண ஏற்பாடுகள் செய்ய ஒத்துகிட்டேன்.. உன்னை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனா நம் கல்யாணத்தில் பிரச்சனை நடந்த பிறகு இவ்வளவு நாட்கள் கழித்து இப்போது தான் என் வீட்டில் தொலைந்த சந்தோஷம் மீண்டு இருக்கிறது.. என்று ஆதங்கத்துடன் கூறினான்..   "
 மித்ரா அழ ஆரம்பித்துவிட்டாள் , கெளதம் பதறி போய் அவளிடம் " ஏன்டி அழுகுறே என்னாச்சு.? நான் ஏதும் தப்பா சொல்லிடனா.? அப்படி  ஏதும் சொல்லியிருந்தால் என்னை மன்னித்துவிடு மித்து ப்ளீஸ் டா அழாத..!  என்று என்று அவளை தேற்ற முற்ப்பட்டான்..                                                                                   "இல்லை கெளதம் நானும் அந்த லிசா மாறி  உங்களை ஏமாற்றிவிட்டேன் .. நான் பரிசுத்தம் இல்லாதவள் கெளதம் என்னை மனிச்சுடுங்க.."என்று அவளையும் மீறி அவன் தோள்களில் விழுந்தாள்..
  அவன் பூரித்து போனான்,,  "ஏய் என்ன இது எல்லாம் நீ ஒன்னும் அவளை மாறி என் சொத்துக்காக என்னை காதலிக்கவில்லை , என்னை மணக்கவில்லை.. என்னுடைய வாழ்கை நல்லா இருக்கனும் என்று தான் நீ நினைக்கிறாய், ரஞ்சித்துடன் நீ வாழ்ந்தது அவனை மணப்பாய் என்ற நம்பிக்கையில் , லிசாவை போல் நீ  ஒன்றும் வேறு ஒருவனை மணக்க போகிறோம் என்று தெரிந்தும் ரஞ்சித்துடன் வாழவில்லை .. நீ மனதால் உயர்ந்தவள் சுத்தமானவள் .. என் உயிர் அடி நீ .. "  என்று அவளை அணைத்துக்கொண்டான்..
அவள் அப்போதுதான் அவன் தோள்களில் அவள் இருப்பதை உணர்ந்தாள்., சட்டென்று அவனின் கையை உதறிவிட்டு எழுந்தாள்..
"ஏய் என்னடி .?"என்று அவன் அவளை ஏக்கத்துடன் முறைத்தான்..
"சாரி கெளதம் தெரியாமல் உங்கள் மீது சாய்ந்துவிட்டேன் .. என்றவள் லைப்ரரியைவிட்டு வெளியே நகர்ந்தாள்".. கௌதமுக்கு கோபம் வந்தது ,"என்னடி எவனோ ஒருவன் தோளில் சாய்ந்ததை போல் மன்னிப்பு கேட்கிறாய் "..
"கெளதம் நீங்கள் எவளோ ஒருத்திக்கு சீக்கிரம்  சொந்தமாக போகிறவர்தானே ", என்றாள் இயல்பாக. அவனுக்கு கண்கள் சிவந்ததது, "என்னடி சொல்லறே .? நான் உன் கணவன் வேறு ஒருத்தியின் கணவன் இல்லை "..
"இல்லை நீங்கள் மறுமணம் செய்துதான் ஆகவேண்டும் .. நம்மால் சேர்ந்து வாழ முடியாது.. "
“ஏன் முடியாது .? உனக்கு என்னை பிடிக்கவில்லையா .? என்று அவளை முறைத்தான்..
 “அத்தை தேடுவாங்க டைம் ஆச்சு நீங்க ஆபீஸ் போகணும்” என்று விறுவிறுவென்று அறைக்கதவை திறந்து கீழே இறங்கி வந்து சமையல் அறைக்கு சென்றாள்.. மனதினுள் அழுதாள்.. கெளதமுடன் வாழ நான் தகுதியானவள் இல்லை என்ன செய்ய முருகா.?/ என்று புலம்பினாள்.. அதே சமயம் , கெளதம் அவளின்  காதலை அவள் வாயாலேயே சொல்ல வைப்பதற்காக திட்டம் தீடிக்கொண்டிருந்தான்.. திட்டமும் கிடைத்தது அது என்னவென்றால், வேறு ஒருத்தியை  மித்ராவின் முன்னாலேயே கல்யாணம் செய்வதாக நடித்தால் அவள் உண்மை என்று நம்பி காதலை வெளிப்படுத்துவாள் என்பது தான் அவனது திட்டம்..
எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் வேறு ஒருத்தியை தன் கண் முன்னால் மணக்க போவதை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டாள் ..
அவன் ஆபீஸ்க்கு செல்வதற்காக முகம் கழுவிவிட்டு கீழே வந்தான் ,.. அம்மாவிடமும் , மித்ராவிடமும் சொல்லிவிட்டு தன் காரில் ஏறி கிளம்பிவிட்டான் .. மித்ரா அவன் போவதையே பார்த்து கொண்டு இருந்தாள்..
அவன் அவளை சமாதனம் செய்ய முயல்வதும் அவள் வெறுப்பை பொழிவதும் போல நடிப்பதுமாய், இப்படியே ஒரு மாதம் சென்றுவிட்டது.. இவளை இதற்கு மேலும் பேசி மாற்ற முடியாது என்று நினைத்தவனாய் கெளதம் அவனது  திட்டத்தை செயல் படுத்த நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்..
மித்ரா வழக்கம் போல் காலையில் எழுந்து அவளுடைய வேலைகளை முடித்துவிட்டு மதியம் படுத்துக் கொண்டிருந்தாள் அப்போது அவளது கைபேசி சிணுங்கியது., அவள் காலை அட்டெண்ட் செய்து "ஹலோ "என்றாள்
"ஹலோ டியர்.."என்று மறுமுனையில் குரல் கேட்டது.. மித்ராவுக்கு கோபம் வந்து விட்டது எவனோ ஒருவன் டியர் என்கிறானே என்று .,                                                                                                                          "ஹே யு இடியட் .. யாரு டா நீ .?"என்று கத்தினாள்..                                                                                "உன் லவர் தான் டார்லிங் "என்று பதில் வந்தது  மறுமுனையில் இருந்து..                                              "செருப்பால அடிப்பேன் ராஸ்கல் .."                                                                                                                   "ஏன் டார்லிங் உன் அன்பான வார்த்தைகளால் என்னை அடிக்கமாட்டாயா.?"...                                          "நீ யாரு டா நான் ஏன் உன்கிட்ட அன்பா பேசணும்  சென்ஸ் இல்ல .?"                                                     "என்னிடம் பேசாமல் வேறு யாருடன் பேசுவாய் .?"                                                                                  "ஹேய் .. இங்கே பாருடா உன்ன மாறி பொறுக்கிகிட்ட அன்பா பேச எனக்கு எந்த அவசியமும் இல்ல .. நான் அன்பா பேச எனக்கு என் கணவர் இருக்கார் நீ உன் வேலைய பாரு இல்லாவிட்டால், உன்னை eve - teasing  case -ல் உள்ள தள்ளிடுவேன் மரியாதையா நடந்துக்க.."                                                                                                                                       "ஹேய் ஹேய் .. ஏன் டீ இப்படி திட்டுற.?  ."                                                                                            "டீயா.? பல்லை உடைப்பேன் .. என் கெளதம்கிட்ட சொன்னேன்னா உன் எலும்ப எண்ணிடுவார் தெரியுமா..? "                                                                                                                                            "அப்போ சொல்லு என்கிட்டே.. என் பல்லை நானே எப்படி உடைக்கரதுன்னு நீயே அப்டியே கத்துக்குடு மித்து..  "..                                                                                                                                                  "நான் ஏன் உன்கிட்ட சொல்லணும் .?" என்றவள் அப்போதுதான் யோசித்தாள் மித்து என்று அவளை செல்லமாய் அழைப்பது அவளது ஆருயிர்க் கணவன் கெளதம் தான் ., சற்று யோசித்தாள்..                "நான்தானே உன் கெளதம் என்கிட்டே எதோ சொல்லனும்னு சொன்னல்ல சொல்லு ", என்றான் மறுமுனையில் கெளதம் மிக சந்தோசத்துடன் இருந்தான் அவள் அவனை என் கெளதம் என்று சொன்னதால்..
"கெளதம் நீங்களா? நான் யாரோன்னு நினைச்சு திட்டிவிட்டேன் சாரி ",என்றாள் வெட்கத்துடன்..
"ஹா ஹா ஹா . அதவிடு , ஆமாம் என் கௌதம்னு சொன்னியே.? நான் உன் கௌதமா.? ", காதலுடன் கேட்டான்..                                                                                                                                                  "இல்லை அது வந்து யாரோன்னு நினைச்சு பயபடுத்த சொன்னேன்.. "., என்றாள்..                                          "ஹோ .. அப்போ சரி நான் உன் கெளதம் இல்லையா.? "..                                                                                  நீங்கள் எனக்கு மட்டும் தான் கெளதம் ஆனால் நீங்கள் பரிசுத்தமானவர் ,அதனால் என்னால் உங்களுடன் வாழமுடியாது .. இதை மனதில் நினைத்தவளாய் ,  பதில் சொல்ல முடியாமல் கைபேசியை அணைத்துவிட்டாள்.. கௌதமுக்கு அவள் மனதில் என்ன நினைத்தாள் என்பது புரிந்தது.. சீக்கிரம் அவள் வாயால் என்னை காதலிப்பதை சொல்ல வைப்பேன் என்று மனதில் நினைத்தான்..
அன்று இரவு, அவன் அறைக்கு தூங்க சென்றான் , அப்போது மித்ராவிடம்..                                          "மித்ரா டியர் .. " என்றான் காதலுடன் .                                                                                                               "என்ன டியர் ஆ.? ".. "ஆமாம் நீ ஏன் டியர் இல்லையா.?"என்று ஏக்கமாய் பார்த்தான்..                                     "இல்ல ப்ளீஸ்.."என்றாள் 
"இல்லையா .? மித்ரா ப்ளீஸ் நீ நடிக்காதே என்னை காதலிக்கிறாய் என்று உண்மையை ஒத்துக்கொள்.. என்னால் நீ இல்லாமல் வாழமுடியவில்லை,.. உன் அருகில் இருந்தும் உன் காதலை என்னால் பெற முடியவில்லை.. என்னை கொல்லாதே டீ .. எனக்கு உன்னுடன் வாழனும் ப்ளீஸ்.. என்னுடன் நீ  வாழ வேண்டும் , என் மனைவியாக என்மேல் பாசம் காட்ட வேண்டும் .. உன் அன்பிற்காக ஏங்குகிறேன்.. என்னை புரிஞ்சுக்கோ..”
“மித்ராவின் கண்கள் கலங்கின அதை மறைத்துக்கொண்டு .. " இங்கே பாருங்கள் நான் உங்களோடு வாழ இங்கே வரவில்லை உங்கள் பெற்றோருக்காக வந்தேன்.. கொஞ்ச காலம் தான் நம் நடிப்பான வாழ்கையும் அதுவும் கூடிய சீக்கிரம் முடிந்துவிடும்.. "                                                                                                    "ஏன் மித்ரா என்னோடு வாழ உனக்கு விருப்பமில்லையா.? நான் உன்னுடன் வாழ தகுதியானவன் இல்லையா.? " என்று சோகத்தில் குரல் உடையக் கேட்டான்..                                                                    "ஐயோ.! கெளதம் நான் தான் உங்களுடன் வாழ தகுதியை இழந்துவிட்டேன்., என்னை விட்டுருங்க .. "என்று கதறினாள்..                                                                                                                                கெளதம் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டான்.."என்ன டீ பேசுறே நீ .! உனக்கு என்ன தகுதி இல்ல .? நீ என் மனைவி உனக்கு எல்லாத் தகுதியும் இருக்கு.,  "என்று மனம் வலிக்க கூறினான்..                                "கெளதம் நான் உங்க பெற்றோருக்காகத் தான் வந்தேன்., உங்களுக்காக இல்ல .. எனக்கு உங்களை பிடிக்கல "..                                                                                                                                                "என்னை உனக்கு உண்மையாவே பிடிக்கலையா.? சொல்லு டீ .. என்னால நீ இல்லாம வாழ முடியாது டீ .. "என்று அழுதான்..                                                                                                                                     மித்ராவிற்கு அவன் அழுவதைப் பார்த்ததும் மனம் கனத்தது ஆனால் , அதை மறைத்து ,"கெளதம் எனக்கு உங்கள பிடிக்கல இதுதான் உண்மை "..                                                                                                   "அப்படியா .? அப்போ ஏன் என்னுடைய போட்டோவை  உன் வீட்டின் சுவர் முழுக்க வைத்திருந்தாய்.? என் மீது பாசம் இல்லாமலா.?"என்று முகத்தை தன புறம் திருப்பி கண்களை பார்த்துக் கேட்டான்....
கெளதம் என்  வீட்டில் இருந்த அவருடைய போட்டோவை பார்த்திருக்கிறார் போல என்று நினைத்தவளாய் ,அவனை பார்த்து "கெளதம் அது மன்னிப்பு கேட்க தோனுச்சு அதான் போட்டோவை வெச்சிருந்தேன்.. தயவுசெய்து நீங்கள் வேறு கல்யாணம் பண்ணிகோங்க ".. என்று அழுதாள்..                                                                                          அவன் கண்கள் சிவந்தது அவளை பளார் என கன்னத்தில் அறைந்தான்.. அவள் வலியால் கன்னத்தை பிடித்துக்கொண்டு பெட்டில் விழுந்தாள்                                                                                                                     "கெளதம் என்னை அடிச்சுடீங்கள்ள.? நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன் இப்போவே கிளம்புறேன் என்று தன் பெட்டியை எடுக்க நகர்ந்தாள் அவன் ஆவேசமாய் அவளைப் பிடித்து நிறுத்தினான் ..                       "ஹேய் நீ என்னைவிட்டு போகக் கூடாதுன்னு தான்  உன்னை அடிச்சேன் நீ இப்படியே பேசி என்னைக் கொல்லாதே டீ .."                                                                                                                                 "கெளதம் என்னால் ரஞ்சித்துடன் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியாது "..                                             "ரஞ்சித் ரஞ்சித் .. அடடா எப்பவும் அவன் புராணம்தானா உனக்கு.? அவனைக் கொன்றுவிட்டால், நீ என்னுடன் வாழ்வாயில்லயா.?  "  "நிறுத்துங்க அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு.. நீங்களும் வேறு கல்யாணம் பண்ணிக்கோங்க ... என்னால் யாருடனும் வாழ முடியாது புரியுதா.?"என்றாள் ஆவேசமாய்..   "ஒ உனக்கு நான் வேறு கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷம் இல்லையா .? சரி நான் நாளைக்கே அதற்கு ஏற்பாடு  செய்றேன் "என்று கோபமாய் கூறிவிட்டு சென்று படுத்துக் கொண்டான்..
அவள் அங்கே இருந்த ஜன்னலின் அருகே சென்று, வானத்தை பார்த்து அழுதுக் கொண்டிருந்தாள்..
இரவு மூணு மணிக்கு கௌதமிற்கு புலம்பல் சப்தம் கேட்க அவன் திரும்பி பார்த்தான், மித்ரா இன்னும் அதே ஜன்னலின் அருகே நின்று அழுதுக் கொண்டுதான் இருந்தாள்.. கெளதம் திடுக்கிட்டான் , "இன்னுமா இவள் தூங்காமல் அழுதுக் கொண்டு இருக்கிறாள். சரி எதுவாய் இருந்தாலும் நாளைக்கு நான் போட்ட திட்டம் நிறைவேத்த போகிறேன் என்று மனதினுள் நினைத்தவனாய் கண்களை மட்டும் மூடிக் கொண்டான் தூக்கம் வராமல் யோசித்தபடியே படுத்திருந்தான் ..
6.   
 காலை சூரியன் தன் கதிர்களை வீசி எழ ஆரம்பித்தான்.. கௌதமிற்கு முழிப்பு வந்துவிட்டது.. எழுந்து பார்த்தால் அவள் ஜன்னலின் அருகேயே சுருண்டு படுத்திருந்தாள், அவனுக்கு நெஞ்சு வலித்தது , என்னுடன் சந்தோசமாய் வாழ முடியாமல் இப்படி தவிக்கிராளே, இதற்கு இன்றே முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தபடியே கைபேசியை எடுத்து சுஜி என்னும் அவனது தோழிக்கு கால் செய்தான்..
"ஹலோ குட் மார்னிங் சுஜி.."என்றான்..                                                                                            "சொல்லு கெளதம் என்ன காலையிலேயே போன் பண்ணிருக்க என்ன விஷயம் கெளதம்  "என்று கேட்டாள் சுஜி..                                                                                                                                                      "உனக்கு நான் அன்றே என்னுடைய திட்டத்தை பற்றி சொன்னேன்ல அதை இன்று காலை 11ரு மணிக்கே செய்து முடிக்கணும் .முருகன்  கோவிலுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு வந்துரு ஓகே வா.?"என்றான் .. "ஓகே கெளதம் நான் வந்துருவேன்.. பை "என்று போனை அணைத்தாள்,, ..
 கெளதம் மித்ராவிடம் சென்று அவளை எழுப்பினான் , அவள் எழுந்து நின்று என்ன என்பதுப் போல் பார்த்தாள்..  அவள் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தது.. அதை பார்த்து மனம் வலித்தவனாய் மனதில் நினைத்துக்கொண்டான்.. இன்னும் கொஞ்ச நேரம் தன கண்மணி நான் போடப்போகும் நாடகத்தில் நீ என்மீது இருக்கும் காதலை வெளிப்படுதுவாய்.. இன்றே நம் துயரங்களுக்கும்., உன் கண்ணீருக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன் ..
அவளை பார்த்து ,"நான் ஆபீஸ் போயிட்டு 10து மணிக்கே வந்துருவேன் வந்ததும் பதினொரு மணிக்கு நீ சொன்னதை போல் இன்று வேறு கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்.. நீ வந்தால் தான் நான் சுஜியை கல்யாணம் பண்ணிப்பேன்.. "என்று கூறிவிட்டு ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீஸ்க்கு சென்றுவிட்டான்,,
மித்ரா இயந்திரமாய் அவள் தினமும் செய்யும் வேலைகளை செய்துக் கொண்டு செயற்கையாய் புன்னகை முகத்தில் வைத்துக் கொண்டு அத்தை, மாமாவிடம் பேசினாள்.. பின் அவள் அறைக்கு சென்று துணியை மாற்றினாள்.. அழகான மஞ்சள் நிற வச்திரகலா பட்டு உடுத்தியிருந்தாள்  அவளுக்கு வச்திரகலா பட்டு என்றால் மிகவும் பிரியம்.. அவளது இடுப்பு வரை இருக்கும் கூந்தலை பின்னி பூ சூடினாள்..
அவளது suitcase -ல் திறந்து , அதில் வைத்திருந்த விஷத்தை எடுத்து பார்த்தாள்..  "கெளதம் என் வாழ்க்கை முடியபோகிறது .. நம் சாவை நாமே தேடிக் கொள்வது என்னை பொறுத்தவரையிலும் தவறுதான் ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை கெளதம்.. " என்று அழுதுக் கொண்டே குடித்துவிட்டாள்..
"கெளதம் என்னால் நீங்க இல்லாம வாழ முடியாது நீங்க வேறு ஒருத்தியுடன் வாழ்வதை பார்க்கும் சக்தியும் எனக்கு இல்லை மன்னிச்சுடுங்க உங்க கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச  நேரத்துல நான் இறந்துடுவேன் , என் வாழ்வின் கடைசி நிமிடங்களில் ஆவது உங்க மடியில் நான் சாகனும் கெளதம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் அறைக்கதவின் அழைப்பு மணி ஒலித்தது.. கெளதம் தான் வந்திருப்பான் என்று நினைத்து அவசரமாய் அந்த பாட்டிலை குப்பையில் போட்டுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு  ஒரு செயற்கை புன்னகையுடன் கதவை திறந்தாள்.. ஆனால் அங்கே ஒருப் பெண் நின்றிருந்தாள்..
நீங்க யாரு என்று மித்ரா கேட்க அந்தப் பெண் , "என் பெயர் லிசா.. நான் உங்ககிட்ட  தனியா பேசணும் என்றாள் "..
மித்ரா புதிராய் அவளைப் பார்த்தபடி "சரி உள்ள வாங்க "என்றாள்.. லிசா உள்ளே வந்ததும்.. "உட்காருங்க "என்றாள் மித்ரா எதிரியாய் இருந்தாலும் வந்தவர்களை உபசரிக்கணும் என்னும் கலாச்சாரத்தில் வளர்ந்தவள் என்பதால்..
லிசா மித்ராவிடம் "பரவயில்லே நான் சொல்ல வந்தத சொல்லிட்டு போறேன் "என்றாள்.. "ஓகே சீக்கிரம் சொல்லுங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு "..
லிசா அவளை நோக்கி ."கெளதம் உங்ககிட்ட என்னை பற்றி எல்லாம் சொல்லிருப்பான் என்று  நினைக்கிறேன் "என்றவள் மித்ராவின் முகத்தைப் பார்த்தாள்..                                                                 "லிசா உங்கள பத்தி சொல்லிருக்காரு.. ஆனால் அவரை நீங்க மரியாதை இல்லாமல் வா, போ என்று கூப்பிடுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றாள்.. "..                                                                             "ஒ ஓகே மித்ரா கெளதம் நான் பணத்துக்காக அவரிடம் பழகியதால் தான் என்னைவிட்டு விலகிவிட்டார் என்று சொல்லிருப்பார் இல்லையா .? அவர் சொன்னது தப்பு அவர் என்னிடம் கல்யாணத்திற்கு முன்பே நடந்துக் கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் நான் கல்யாணத்தை நிறுத்தினேன்.. அவர் ரொம்ப மோசமான ஆளு நீங்க உங்க வாழ்கையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்., உங்க status அவரைவிட கம்மி என்பதால் தான் நீங்கள் எதிர்த்துக் கேள்வி கேட்கமாட்டீர்கள் என்று நினைத்து உங்களை கல்யாணம் செய்தக் கொண்டார்.. அவரைவிட்டு போயிடுங்க.." என்று அவள் சொன்னதுதான் தாமதம் மித்ராவின் கை லிசாவின் கன்னத்தை பதம் பார்த்தது .. லிசா மிரண்டுப் போனாள்..
அடுத்த நொடியே சிறிதும் தாமதிக்காமல் மித்ரா அங்கே இருந்த பழங்கள் வெட்டும் கத்தியை எடுத்து லிசாவின் கழுத்தில் வைத்தாள், கெளதம் லிசா வந்த சிறிது நேரத்திலேயே மித்ராவை காலையில் சொன்னது போல் முருகன் கோவிலுக்கு அழைத்து செல்ல ஆபீசில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தவன் நேராக ரூமிற்கு தான்  வந்தான் அப்போது லிசாவும் மித்ராவும் பேசுவதை கேட்டு அங்கேயே நின்றுவிட்டான்..
,மித்ரா கத்தியை எடுத்து லிசாவின் கழுத்தில் வைத்ததும் பதறிப்போனான் .. மித்ராவின் அருகே சென்றவன் ."மித்ரா தெருவில் போகிற நாய் குரைக்கிறது என்றால் நாமும் சேர்ந்து குரைக்கவா முடியும் விட்டுரு மா என்றான்..
மித்ரா அவனை முறைத்துக் கொண்டே "கெளதம் உங்க வேலையே பாருங்க  "என்றாள்.. லிசாவிடம் திரும்பி "இதோ பாரு டீ என் கணவரைப் பற்றி எனக்கு தெரியும் உன் வேலையே நீ பாரு அவரைப் பற்றி தப்பா பேசின உன் நாக்கை மட்டும் அல்ல உன் கழுத்தையும் வெட்டிருவேன் என் கண் முன்னாள் நிக்காதே போடீ வெளியே என்று கத்தினாள்..
லிசா நடுங்கிவிட்டாள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து நகர்ந்தாள்..கெளதம் லிசாவை எரித்து விடுவதுப் போல் பார்த்தான்.. லிசா சென்றதும் மித்ராவிடம் திரும்பினான் அவனுக்கு அவளை நினைக்கையில் பெருமையாய் இருந்தது.. சிலிர்த்துபோனான்.. மித்ராவோ அவனை பார்த்து "உங்களுக்கு கல்யாணத்துக்கு நேரம் ஆகுது வாங்க போகலாம் mr .கெளதம் "என்றாள் ..
கௌதமிற்கு அவள் இதை மறக்க மாட்டாளா என் மீது இவ்வளவு அன்பு இருந்தும் பழைய விஷயங்களை நினைத்து இப்படி செய்கிறாளே .? நான் மறந்து மன்னித்தாலும் இவள் மறக்க மாட்டாளா.? என்று உள்ளுக்குள்ளே துடித்தான்..
"சரி போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்று பெற்றோரிடம் கோவிலுக்கு போயிட்டு வரோம் என்று விடைப் பெற்றுக்கொண்டனர் .."
"சரி பா இரண்டுபேரும் பத்திரமா போயிட்டு வாங்க ",என்று அவர்கள் சொல்ல இருவரும் காரில் ஏறி அமர்ந்தனர் . கெளதம் காரை ஸ்டார்ட் செய்தான் , ரோட்டில் மின்னல் வேகத்தில் காரை செலுத்தினான் .. பாவம் அவனுக்கு தெரியவில்லை அவனுக்காக பெரிய அதிர்சிக் கொண்டிருக்கிறது என்று..
7.   
சிறிது நேர மௌனத்திற்கு பின் மித்ராவிடம் திரும்பி "என்ன இன்னைக்கு பட்டு சேலை கட்டிருக்கே , உனக்கா கல்யாணம் "என்றான் கேலியாக.. மித்ரா அவனை முறைத்தாள், "எதுக்குன்னு உங்க கல்யாணம் முடிஞ்சதும் சொல்றேன் "என்றவள் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்..                           ஒன்றும் விளங்கதவனாய் தோளைக் உலுக்கிவிட்டு காரை ஓட்டினான்,, சற்று நேரத்தில் கோவில் வந்ததும் இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்..
கெளதம் சுஜியை பார்த்து கை அசைத்தான் சுசியும் பதிலுக்கு கை அசைத்தாள்.. கெளதம் அவளை நோக்கி  "சுஜி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டியா.?"என்றான் ..
"ஒ கெளதம்.. என்ன இப்படி கேட்டுவிட்டாய் என்  டார்லிங் நீ சொல்லி செய்யாமல் இருப்பேனா.?” என்று சிரித்தாள் .. ஓரக்கண்னால், கௌதமும் சுஜியும் மித்ராவை பார்த்தனர்  , ,மித்ரா சுஜியை முறைத்தாள் அது சுஜிக்கும் ,கௌதமிற்கும் தெரிந்தது அவர்கள் மனதில் இந்த கல்யாண நாடகம் வெற்றியில் முடியும் என்னும் எண்ணம் துளிர்விட்டது.. கோவிலுக்கு வரும் வரையிலும் கூட அவளுக்கு ஒன்றும் அப்படி கௌதமை இழந்துவிடுவோமோ என்று மனம் பதைக்கவில்லை ஆனால் இப்போது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனையைவிட கொடுமையாய் உணர்ந்தாள்..
 கெளதம் சுஜியுடன் மணமேடையில் அமர்ந்துக் கொண்டான்.. மாலை மாற்றிக் கொண்டனர் .. மித்ராவால் இதை பார்க்க முடியாமல் தவித்துப் போனாள்..
தாலியை எடுத்து கெளதம் சுஜியின் கழுத்தில் கட்ட கொண்டுப் போனான் அதைப் பார்த்த மித்ராவால் அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் , தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து கௌதமின் கையை தட்டிவிட்டாள், சுஜிக்கும் கௌதமிற்கும் வெற்றி சிரிப்பு முகத்தில் வந்தது.. கெளதம் இதை மறைத்துக் கொண்டு மித்ராவை பொய்யான கோபத்துடன் முறைத்தவாரே ,"மித்ரா ஏன் தாலியை தட்டிவிட்டாய் .? அறிவில்லை.. "என்றான் ..
"என்ன கெளதம் உங்களால் எப்படி இன்னொருத்திக்கு தாலி கட்ட முடியுது மனசாட்சியே இல்லையா உங்களுக்கு ",, என்று தன்னையும் மறந்து கத்தினாள்.. கௌதமை கோபத்தில் அடித்தாள்.. அவன் அசையாமல் நின்றான் அவள் தோய்ந்துபோய் விஷம் வேலை செய்ய ஆரம்பித்ததால் கீழே விழப்போனாள்.. கெளதம் அவளை தன் கரங்களில் தாங்கிக் கொண்டான்..
பதற்றத்தில் அவன் என்ன செய்வதென்று அறியாமல் கேட்டான்.. "மித்ரா உனக்கு என்ன ஆச்சு மா ஏன் இப்படி தள்ளாடுற.? உனக்கு என்ன செய்யுது டா சொல்லு என்னால் உனக்கு ஒன்னுனா தாங்கிக்க முடியாது டா "., என்று அழுதான்.. மித்ரா சிரித்தாள் , "கெளதம்   நீங்க நான் ஏன் பட்டு சேலை கட்டிருகேன்னு கேட்டிங்கல .?"
கெளதம் புரியாமல் முழித்தபடியே  "ஆமாம் "என்று சொன்னான் .
"கெளதம் நான் சாகப்போறேன் விஷம் குடிச்சுட்டேன். கடைசியா உங்க கூட வாழத்தான் முடியல நீங்க கொடுத்த இந்த மாங்கல்யதுக்காக மங்கலகரமா சாகனும்னுதான் சேலை கட்டினேன்  நீங்க இன்னொருத்தியுடன் வாழ்றத என்னால பார்க்க முடியாது நான் இவ்வளவு நாள் நீங்க என் வாயால கேட்க நினைச்சதும் , நான் என் மனசில் மறைச்சு வெச்சுஇருந்ததும் சாகுற நேரத்துல சொல்ல போறேன் கெளதம் .. ஐ லவ் யு கெளதம்.. அடுத்த ஜென்மத்திலாவது உங்களுடன் வாழும் பாக்கியம் எனக்கு வேண்டும் கெளதம்.. "என்றவள் மயங்கினாள்..
கெளதம் அழுது, பதறிக்கொண்டே மித்ராவை தூக்கிக் கொண்டு போய் காரில் ஏற்றியதும் சுஜி ஓடிவந்து காரை ஸ்டார்ட் செய்து மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து நிறுத்தினாள்..
கெளதம் மித்ராவை துக்கிக் கொண்டு உள்ளே ஓடினான் அவளை அட்மிட் செய்தான் , அங்கே இருந்த டாக்டர்கள் அவளை  ஐ.சீ.யூவிற்கு கொண்டு சென்று வைத்தியம் செய்தனர்.. ஒரு மணி நேரத்திற்கு பிறகு ,டாக்டர்கள் வெளி வந்து கௌதமை பார்த்தனர் , கெளதம் அவர்களிடம் "டாக்டர் அவளுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க சீக்கிரம் "என்று பதத்துடன் கேட்டான் ..
"கரெக்ட் டைம்க்கு கொண்டுவந்தீங்க இல்லாட்டி இறந்து இருப்பாங்க.. ஐஞ்சு நிமிஷம் லேட் ஆகி இருந்தாலும் அவங்க செத்துருப்பாங்க.. dont worry கெளதம் இதுக்கு எல்லாம் நீங்க feel  பண்ணலாமா எவ்வளவு பெரிய ஆள் நீங்க.. come  on ..   "
"ரொம்ப நன்றி டாக்டர் நான் அவளை பாக்கணும் " .. "ஓகே கெளதம் பட் அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணக்கூடாது.. "என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..
கெளதம் உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்து கொண்டான் .. அவள் கண் முழித்தாள்.. கெளதம் ஆவலாய் அவளை கலங்கிய கண்களுடன் பார்த்தான் .. அவள் அவனை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு.. "கெளதம் என்னை ஏன் காப்பாத்துனீங்க.?"என்றாள் மித்ரா ..
கெளதம் அழுதுக் கொண்டே.. "என்னை காதலிக்றேனு சொல்லிவிட்டு என்னைவிட்டு போக துடிக்கிறியே  டீ.. நீ இல்லாம நான் இல்ல டீ .. நான் கல்யாணம் பண்றேன்னு ட்ராமாத்தான் பண்ணேன் அப்பவாச்சும் நீ உன் காதலை சொல்லுவியா என்று பார்க்கத்தான் நீயும் சொல்லிட்ட, இனியாவது என்னுடன் வாழு டீ நீ இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன்.? "என்று கதறினான் .. அவளுக்கு மனம் வலித்தது கண் மூடிக் கொண்டாள் ..


8.   
 ஒரு வாரத்திற்கு பிறகு அவள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள்.. கெளதம் அவளை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தான்.. அவள் எழுந்து கொண்டாள்..
“ கெளதம்” என்று அவனை காதலுடன் பார்த்தாள்.. அவள் கண்களில் தெரிந்த காதலை கெளதம் கண்டுக் கொண்டான்.. கௌதமிற்கு சந்தோஷம் பொங்கியது.. "சொல்லு மித்ரா "என்றான்
"உங்கக்கூட நான் வாழ அனுமதி தருவீங்களா கெளதம் "..                                                                           "ஹேய் என்ன டீ பேசுறே நீதான் என்னுடன் வாழனும் வேற யாரு வாழுவா.. "என்று அவள் அருகில் சென்று நின்றான் ..
"மன்னிச்சுடுங்க "என்றவள் அவன் மீது சாய்ந்தாள். "எதுக்கு டியர் மன்னிப்பு "என்றான் கொஞ்சலாய் .. "நான் செஞ்ச தப்புக்கு எல்லாம் "என்று அவனை பார்த்து சிரித்தாள் ..   
"பரவாயில்ல விடு.. இப்போதாவது உன் காதலை ஒப்புக் கொண்டாயே.. இனி நம் வாழ்வில் வசந்தம் தான் மித்து.. இனி என்அன்புக்கு நீ அடிமையடி.,  என்னைவிட்டு உன்னால் எங்கும்  போக  முடியாது .. உன்னை போகவும் விடமாட்டேன் "என்றவன் அவள் தோள்மீது கை போட்டு ஜன்னலின் அருகில் சென்று ஆவலுடன் நின்றுக் கொண்டு வானில் தெரிந்த நிலவையும் இவளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே ஒரு பாடலை பாடினான் ..
     " வான் நிலா நிலா அல்ல .. உன் வாலிபம் நிலா..
       தேன் நிலா என்னும் நிலா என் தேவியின் நிலா..
       நீயிலாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா.. "
 அவள் அவனுக்கு எதிர் பாட்டுப் பாடினாள்..
     " யாரோ இவன் யாரோ இவன் ..?
       என் பூக்களின் வேறோ இவன்..
       என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் .."
என்று அவன் தோள்களில் சாய்ந்தாள்..
அவர்களுக்காக இனிமையான வாழ்க்கை ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.. வானில் இருக்கும் நிலவினை போல இருவரின் மனமும் ஒளிவீசியது..
         

                                                                         Written By.,
                                                                         PiNkY..
Title: Re: அன்புக்கு நீ அடிமை (A special love story)
Post by: kanmani on March 06, 2013, 12:21:38 PM
wow nice story pinky... ungalukulae ivalo talenta nu sandhosapaduren.. indha story la gowtham character romba pidichiruku .,, neenga inum  idhae pola neriya stories nama forumla podanumnu ketukaren..

Title: Re: அன்புக்கு நீ அடிமை (A special love story)
Post by: Varun on March 08, 2013, 01:33:19 PM
பின்கி உங்கள் கதை ரொம்ப அழகா இருக்கு இன்னும் உங்கள் கதைகளை இத்திரு பாக்றேன் உங்கள் பதிவுக்கு நன்றி
Title: Re: அன்புக்கு நீ அடிமை (A special love story)
Post by: PiNkY on March 08, 2013, 06:18:06 PM
 ;)Romba nandri varun.. unga commebts naala inum naan kadhaigal eludha urchaagamai iruken .. en nanbargalin anbukku nandrii..
Title: Re: என் அன்புக்கு நீ அடிமையடி..! (A special love story)
Post by: ராம் on September 21, 2013, 06:07:45 PM

pinky  தங்கச்சி மிக அருமையான ஸ்டோரி  மா.
இது போன்று இன்னும் எழுதனும் வாழ்த்துக்கள்!!!!!
Title: Re: என் அன்புக்கு நீ அடிமையடி..! (A special love story)
Post by: PiNkY on September 21, 2013, 07:01:08 PM
Thanks anna(F)