FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 27, 2013, 09:57:37 PM

Title: மௌனமாய் காத்திருக்கிறேன்.
Post by: Varun on February 27, 2013, 09:57:37 PM
என்னை நீ புரிந்து கொள்ள நான் என்ன தான் செய்வது..
என்ன செய்தாலும் புரியாமல் இருக்கிறாய் என்று நான் சொல்ல வில்லை.
உன் மௌனம் தான் சொல்கிறது..
உன் மௌனத்தை உடைத்து
உன் வார்த்தைகளுக்கு விடுதலை அளிக்க
மௌனமாய் காத்திருக்கிறேன்.

எத்தனை முறை பட்டாலும் திருந்தாமல்
இருக்கிறாயே உனக்கு என்ன ஆச்சு ......
காதலால் எத்தனை அடி வாங்கினாய்
இருந்தும் காதலிப்பது ஏன்..........
காதல் கற்றுக் கொடுத்ததை மறந்து விட்டாயா
இல்லை காதலியால் பட்ட துயரத்தை மறந்துவிட்டாயா.......
சரியாக புரிந்து கொள்ளாமல்
 சென்ற உன் காதலையும்
மறந்து விட்டாயா.........
இல்லை உனக்காக உன்னை   புரிந்த
காதலையும் மறந்து விட்டாயா.........
பிறகு ஏன் இந்த கவலை
எத்தனை முறை யோசித்தாலும் திரும்ப திரும்ப
ஏன் அங்கேயே போய் நிற்கிறாய்......
மனமே நீ படும் கஷ்டத்தை நீயே வைத்துகொள்
அதை ஏன் கண்களில்
வெளிபடுத்துகிறாய்.......