FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on February 24, 2013, 03:58:49 PM
-
நாமறியாவண்ணம் கன்னம் சிவக்க,
மகிழ்ச்சி மனதில் துளிர்விட, எதையுமே
நினையாமல் ஒன்றையே நினைத்து,
நினைவுகளில் நித்தம் நீங்காமல் அணைத்து,
கனவுகளில் நிழல்சுகமாய் உயிர்த்தெழுந்து,
யாரென தெரியாமல் எதுவுமே புரியாமல்,
அன்பை அளவில்லாமல் செலவிட்டு,
உணர்வுகளை உளமாற பகிர்ந்து,
உயிருக்குள் இதமாய் இதயமாய் நுழைந்து,
கனிகின்ற நெருப்பாய் புழைந்து, உயிரைக்
கொள்ளும் சுகமான உறவுதான் காதல்!!! :-* :-* :-*
-
விமல் உறவுகளை விட உள்ளங்களின் கூடல்தான்
உண்மையான காதல் அத புரிந்துகோ பக்கி
கவிதை சூப்பர்
-
பொம்மி நீ சொல்றது சரிதான் ஆனால் இப்ப எல்லாம் யாரும்(பலர்) உள்ளத்தை எதிர் பார்க்கவில்லை உடல் சுகத்தை மட்டும்தான்....ஆனால் நீ சொல்றது மாதிரி உள்ளங்களின் கூடல்தான் உண்மையான காதல்.... :)