FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 23, 2013, 08:28:59 PM

Title: நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
Post by: Varun on February 23, 2013, 08:28:59 PM
எங்கிருந்தோ வந்தாய்
எல்லாம் நீயானாய்
என்ன மாயம் செய்தாயோ
என் வசம் இருந்த என்னை
உன் வசப்படுத்தினாய்
இன்று எல்லாம் நீ
என்றான் பின்பு
வலிகளை மட்டும்
தந்து செல்கிறாய் .........

கேளடி இந்த கதையை ..!
நாம் பிரிந்து பலநாட்கள் ...!
கலண்டர் தான் சொல்லுகிறது ..!
உன் மனதில்
நான் இல்லையென
தெரிந்தும் சிறுபிள்ளைபோல்
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்
நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே
என் இதயம்.....

Title: Re: நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
Post by: Gotham on February 23, 2013, 08:30:29 PM
வசங்களில் வாசம் செய்ய
மனதும் இம்சை புரிகிறது
மனதின் இம்சை புரிகிறது

நல்ல கவிதை வருண் சார்..  8) 8)