FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 20, 2013, 04:53:58 PM
-
நினைவுகளின் உச்சபட்சத்தினில்
என் மனம் கவர்ந்து -
குழப்பத்தினை குடியமர்த்தி
விரக்தியின் விளிம்பில்
விரல்களுக்கு இடுக்கினில்
புகைப்பானை புகுத்திடும்
நினைவுகளை போலன்றி
கரிக்கோல் புகுத்தி
உனை, கவிதையில்
காதலிக்க சொல்லும்
நின் நினைவுகளுக்குத்தான்
எத்தனை வீரியமடி .........
-
நல அழகான வார்த்தைகளை கோர்த்து கவிதை மாலை செய்து இருக்குறீர்கள்
-
வெளிர் ரோசாவே !
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றிகள் !!!!