FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on February 19, 2013, 01:05:32 PM

Title: இருவரிக்கவிதைகள்
Post by: vimal on February 19, 2013, 01:05:32 PM
1) அமிர்தம் கொடுத்தாலும் அருந்தமாட்டேன்
    நீ உண்ணாவிரதம் இருந்தால்!!!

2) அம்மவாசையிலும் நிலவைப் பார்க்க ஆசை
    உன் முகம்!!!

3) பூக்களுக்குள் சண்டை, உன் தலையில் குடியேற
    சமாதான கொடியை காட்டியது மல்லிகை!!!

4) கோவில் குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டாய் அவையும்
    உண்டன காதல் பொறியில் விழப்போவதை அறியாமல்!!!

Title: Re: இருவரிக்கவிதைகள்
Post by: Varun on February 19, 2013, 07:44:52 PM
விமல் நண்பா உங்கள் கவிதைகள் அனைத்தும் மிக அருமை மேலும் உங்கள் கவிதைகளை தொடரங்கள்
Title: Re: இருவரிக்கவிதைகள்
Post by: Bommi on February 19, 2013, 10:05:54 PM
அமிர்தம் கொடுத்தாலும் அருந்தமாட்டேன்
 நீ உண்ணாவிரதம் இருந்தால்!!!

விமல் அமிர்ததுல விஷம் இருக்கும்னு
பயமா ஹிஹிஹி

நல்ல கவிதை'
Title: Re: இருவரிக்கவிதைகள்
Post by: vimal on February 20, 2013, 12:29:28 PM
பொம்மி & வரும் நன்றி....