அன்பே!
ஐந்து வயதில் என்னைவிட்டு
பிரிந்து வெளிநாடு சென்றவள்
நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு
கோடை கால விடுமுறைக்கு
குடும்பத்துடன் இல்லம் திரும்பினாய் !
ஒருவர் ஒருவர் முகம் பார்த்து
சிரித்த படியே உன் அருகில்
நான் வர என்னை யாரு என்று
அறியாத நீ ஒதுங்கி சென்றாய்
பார்த்ததும் தெரிந்து இருப்பாய் .....
பக்கத்தில் ஓடிவந்து பாசமாய்
ஆசை நான்கு வார்த்தை பேசுவாய்
நினைத்த என்மனம் என்னைக்கண்டதும்
உன் அம்மா பின் ஓடி நின்றாய்
தவித்து போனது என்மனது அந்த நிமிடம் ....
பெரியவர்கள் அறிமுகம் செய்ய
அதன் பின் அறிந்தாய் சின்னவயதில்
பார்த்த நாபகம் உன்னை உலுக்க
ஆசையாய் மாமா என்று கண்ணீர்
கலங்க உச்சரித்தாய் .........
அந்த நிமிடமே உன்மீது பாசம்
என்னை திணற செய்ய என்ன
செய்வது என்று புரியமால்
மனதில் பெரும் சந்தோஷத்தில்
துள்ளி குதித்தேன் ...............
நாட்கள் கடந்தது என்னை விட்டு
மீண்டும் பிரியும் நேரம் வந்தது
நீ பிரிந்து செல்லும் போது
மனதில் எதோ என் உயிரே
என்னை விட்டு பிரிந்தது போல .........
அன்று தெரியவில்லை அதற்க்கு
என்ன பெயர் என்று அதை
புரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள்
அன்றே முடிவு செய்தேன்
வாழ்கை துணைவி என்றால் அது நீமட்டுமே ................
வெகு நாள் காத்து இருந்தேன்
உந்தன் வருகையை எண்ணியே
தென்றலை போல தேடி வந்தாய்
ஒவ்வொரு நாளும் உன்னையே
எண்ணி வெக்கையை உமிழ்ந்தேன் .....
தென்றலாய் வந்து என்மனதை
பத படுத்தினாய் அன்பே !
ஒவ்வொரு நாளும் புது புது
நினைவுகள் வந்து சென்றது
உன் அன்பினால் வான் உச்சிக்கே சென்றேன் ....
அன்பு என்னும் சொல்லி என்னை
அன்னையை போல ஆட்சி செய்தாய் !
அறிவு என்னும் சொல்லில்
தந்தையை ஆட்கொண்டாய் !
மொத்தத்தில் வாழ்கை என்னும்
பாடத்தில் மனைவி ஆனாய் .....
அன்பை வெளிபடுத்தும் ஒரு நாள்
காதலர் தினம் அது காதலிப்பவர்க்கு மட்டுமே
வாழ்கை என்னும் அன்பில் இணைந்த
நாம் இருவர்க்கு மட்டும் -தினம் தோறும்
காதல் தினமே ..............
;D ;D (L)<3 <3 (L) ;D ;D (L) <3 <3 (L) ;D ;D (L) <3 <3 (L) ;D ;D
என் இதயத்தை நான் இரும்பாக வைத்து இருந்தேன் .
நினைக்கவில்லை நீ காந்தமாக இருப்பாய் என்று
யுகயுகமாய் உன்னை காதலித்தேனோ அதனால்
தான் உன்னை கண்டதும் நொடியில் யாரிவன் என்று
கேட்காமல் என்னவன் என்றது என் மனது .....
உன்னை முதல்முறை பார்த்ததும்
முடிவு செய்தேன் நீ தான் என் வாழ்க்கை என்று
உன் மீது நான் கொண்ட காதலை சொல்லாமல்
நான் மறைத்தும் . என் கண்கள்
காட்டி கொடுத்து விட்டது என் காதலை ....
காதல் ஒன்றும் கடவுள் அல்ல .ஆனால்
உன் மனதில் நான் இருப்பது தெரிந்தால்
உயிர் இல்லாமல் வாழும் என் தேகம் .
ஈசலின் ஒரு நாள் வாழ்கை கூட எனக்கு வேண்டாமடா
நீ உன் காதலை சொன்ன பிறகு ....
என் காதலின் இனி'மை'யோ
சொர்கத்தையும் விட மேலானது .
என் காதலின் தனி'மை'யோ
நரகத்தை விட கொடுமையானது .
என் காதலின் பொறு'மை'யோ
இந்த பூமிக்கு ஈடானது ...
நான் நானாக மட்டும் இருந்தபோது அர்த்தமில்லையே
நீ வந்து என்னோடு சேர்ந்தபோது நான் பாதி இல்லையே
என் அன்பை சொல்ல இந்த ஜென்மம் போதவில்லையே
பிரிந்து இருக்கும் நேரம் துன்பமாகவும்
சேர்ந்து இருக்கும் நேரம் சந்தோஷமாகவும்
துடிக்கின்றது என் இதயம் ...
இரவில் நான் உறங்கும் முன் உன் பெயரை
ஒரு முறை உச்சரித்து விட்டு தான் உறங்குகிறேன்
உறங்கியவள் அப்படியே உறங்கிவிட்டாள்
நான் கடைசியாக உச்சரித்தது
உன் பெயராய் இருக்கும் அல்லவா ...
நான் தூக்கத்தை கூட நேசிக்கிறேன்
கனவில் நீ வருவாய் என்று .
விடியலில் நான் கண் திறக்கவே மாட்டேன்
கனவு கலைந்து , என்னை விட்டு நீ பிரிந்து விடுவாய் என்று ...
மழைக்கு ஒரு முடிவு உண்டு மண்ணில் சேர்ந்து விட்டால்
நதிக்கு ஒரு முடிவு உண்டு கடலில் சேர்ந்து விட்டால்
ஆனால் காற்றுக்கு ?...முடிவு என்பதே இல்லை ..
என் காதல் போல ...!