FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 02, 2013, 10:21:16 PM

Title: வலியா சுகமா
Post by: Varun on February 02, 2013, 10:21:16 PM
காதலினால் ஏற்பட்ட காயங்கள்
காத்திருக்க வைக்கிறது காலம் எல்லாம்

வலியும் சுகமும் உணர்ந்தேன்
பிரிவின் முதல் நாள் சுகம்
இன்று வலி என்றும்

நீ சொன்ன பிரிவோம் என்ற சொல்
அன்று கவிதை ஆனது இன்று கசப்பாகிறது

விளையாட்ட செய்த தவறு இன்று வினையானதென வினையின் முடிவு
பிரிவுதான

உன்னை காணா ஒவ்வொரு
நொடியும் என்னை காணாமல் போகிறேன்

உன் குரல் இனிமை
அதிலும் அழகு அதை கேட்கும் தவிப்பில்
பசியின் குழந்தை ஆனேன்

உன் தவிப்பில் கிடைகின்றேன்
தண்ணிரில் முழ்கி நீச்சல் அறிந்தும்
திக்கு முக்காடுகின்றேன்

உளறிய என் வார்த்தைகள்
உரு மாறிய உன் முக பாவனை கோபம்
கலந்த பேச்சில் பிரிவு என்ற ஒரு சொல்

அறியாமல் கூறிய வார்த்தைகள் இன்று
அறிய வைத்து விட்டன

சுகமும் வலியும் அறிந்துவிட்டேன்
சுகம் என்றால் பிரிந்திருப்பேன்
வலி என்றதால் திரும்பி வந்து இருக்கின்றேன்

உனக்குள் வினவுகிறேன் வலியா சுகமா
Title: Re: வலியா சுகமா
Post by: suthar on February 03, 2013, 05:49:10 PM
காதல் வலியாய் உணர்கையில்
காதல் வலிதான்.
காதலின் வலியிலும் சுகம் தேடுவதே காதல்..!!
காதலுக்காய் காத்திருக்கையில்
காதலியின் ஒவ்வொரு வார்த்தையும்
கவிதையாய் உள்வாங்கிய
கவிதை கள்வனே அவளின் இதயத்தை
களவாடி கடிவாளமிடாமல் அவளின் 
காதலால் காயம் என்கிறாய்,
காத்திருப்பு கசப்பு என்கிறாய்....
கன்னி ஒருவளை
கண்டதும் மையல் கொண்ட
கந்தர்வனே இபொழுது உனக்குள்  வினவு
காதல் வலியா.....?,  சுகமா.....?
Title: Re: வலியா சுகமா
Post by: vimal on February 08, 2013, 01:44:23 PM
காதலின் வலியிலும் சுகம் தேடுவதே காதல்.....

வார்த்தையில் வேண்டுமானால் சொல்லலாம் அனுபவித்தால்தான் தெரியும் வலியின் கொடுமையை......

நல்ல கவிதை வருண் and சுதர் அண்ணா
Title: Re: வலியா சுகமா
Post by: PiNkY on April 07, 2013, 05:27:50 PM
miga arumai varun.. anna nenga eluthum kavidai sollava vendum.. 2nsu perum kavi puyal thann pongal..  ;D
Title: Re: வலியா சுகமா
Post by: Varun on April 08, 2013, 02:58:39 AM
பின்கி காதல் கவிதைகள் எழுதவும் பிடிக்கும் ரசிக்கவும் பிடிக்கும் எனக்கு அனல் இன்னும் என் வாழ்வில் காதல் வரவில்லை
Title: Re: வலியா சுகமா
Post by: PiNkY on April 08, 2013, 08:08:02 PM
இன்னும் உங்கள் வாழ்வில் காதல் வரவில்லை என்பது மட்டும் என்னால் நம்ப முடியவில்லை நண்பா.. என் என்றல் கவிதைகள் பேசுகிறது உங்கள் காதலை..