FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on September 27, 2011, 12:12:34 PM
-
யாருமற்ற தனிமையில்..
பூட்டப்பட்ட வீடுகள்
துயரத்தை வெளிப்படுத்த
துர்வாடை வீசுகின்றன..!
அறைகளின் சுவாசத்தை மறுத்து
அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள்
தூசிகளை சுவாசிக்கின்றன..!
தூசிகள்-
காற்றின் வருகையை
அறிவிக்கும்
நினைவுத்தடங்கள்..!
வசிப்பிடம் அற்றவர்களின்
பெருமூச்சு
அங்கே உறங்குகின்றன..!
சில நேரங்களில்
உறங்க மறுத்து
ஆவியைப் போல அலைகின்றன..!
குழந்தைகளின் சப்தம் கேட்டு
குதூகலிக்கும் சுவர்கள்
அவர்கள் வெளியூர் செல்ல
நேர்கிற போதேல்லாம்..
தன்னை
சமாதியாக உணருகின்றன..!
-
nalaruku mams:-*
ithelam padikurapa enakum kavithai eluthanum nu thonuthu
ana mudiyala
-
thayaga ninaivukala konduvarum ninaivugal.. :(
-
Nandrigal...!
-
nalla kavithai yousuf . Vazhthukkal.
-
Nandri gab machi...!