FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on September 27, 2011, 12:12:34 PM

Title: சமாதிகளாகும் வீடுகள்...!
Post by: Yousuf on September 27, 2011, 12:12:34 PM
யாருமற்ற தனிமையில்..
பூட்டப்பட்ட வீடுகள்
துயரத்தை வெளிப்படுத்த
துர்வாடை வீசுகின்றன..!

அறைகளின் சுவாசத்தை மறுத்து
அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள்
தூசிகளை சுவாசிக்கின்றன..!

தூசிகள்-
காற்றின் வருகையை
அறிவிக்கும்
நினைவுத்தடங்கள்..!

வசிப்பிடம் அற்றவர்களின்
பெருமூச்சு
அங்கே உறங்குகின்றன..!

சில நேரங்களில்
உறங்க மறுத்து
ஆவியைப் போல அலைகின்றன..!

குழந்தைகளின் சப்தம் கேட்டு
குதூகலிக்கும் சுவர்கள்

அவர்கள் வெளியூர் செல்ல
நேர்கிற போதேல்லாம்..
தன்னை
சமாதியாக உணருகின்றன..!
Title: Re: சமாதிகளாகும் வீடுகள்...!
Post by: Arya on September 27, 2011, 05:50:20 PM
nalaruku mams:-*
ithelam padikurapa enakum kavithai eluthanum nu thonuthu
ana mudiyala
Title: Re: சமாதிகளாகும் வீடுகள்...!
Post by: Global Angel on September 27, 2011, 06:52:48 PM
thayaga ninaivukala konduvarum ninaivugal.. :(

Title: Re: சமாதிகளாகும் வீடுகள்...!
Post by: Yousuf on September 27, 2011, 07:04:18 PM
Nandrigal...!
Title: Re: சமாதிகளாகும் வீடுகள்...!
Post by: gab on September 27, 2011, 07:38:56 PM
nalla kavithai yousuf . Vazhthukkal.
Title: Re: சமாதிகளாகும் வீடுகள்...!
Post by: Yousuf on September 27, 2011, 07:55:54 PM
Nandri gab machi...!