குறட்டைக்கு குட்பை(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F250487_457431867640481_621929117_n.jpg&hash=0b8da95338a44c3c78e5d4367ffcf18159e0bb9a)
சுவாசமானது காது மூக்கு தொண்டை மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இந்தப் பாதையில் எங்கேனும் அடைப்பு ஏற்படும்போது குறட்டைச் சத்தம் ஏற்படுகிறது. குழந்தையில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் குறட்டைப் பிரச்னை வரலாம்.
பெரியவர்களுக்கு வரும் குறட்டைக்கு முதல் காரணமாக இருப்பது உடல் பருமன் பிரச்னையே.
குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும். காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில் குறட்டை தொல்லையும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு டாக்டர்ரைச் சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டும். உணவில் காரத்துக்கு தடா சொல்ல வேண்டும்.