சக்கரம் போல் சுழலும் பூமாதேவியே
சூரியனை கடவுளாய் வணங்கி
தமிழ் மண்ணை காணிக்கையாய்
மனிதற்கு வழங்கினாய் !
மனிதன் உயிர் வாழ வாழ்வு ஆதாரமாய்
காற்றை கொடுத்து சுவாசிக்க செய்தாய்
ஆகாயம் உதவி நாடி நீ கொடுத்து
தாகத்தை போக்கி தாரணி செழிக்க ..
விதை கொடுத்து ஆடிமாதத்தில்
விதை விதைத்து கழனி நிறைத்து
பச்சை பயிரை கதிராய் மாற்றி
மார்கழி மாதத்தில் மாடத்தில்
சேமிக்க செய்த அன்னையே !
வாழ்வதற்கு ஆதாரம் கொடுத்த
கொடை வள்ளலே வருக வருக
நான் பெற்ற சந்தோஷத்தில்
உணக்க புது பானை புது அரிசியால் ....
பொங்கல் வைத்து சூரிய கடவுள்கு
பூசை படைக்கும் நான் இன்று
நல்ல நேரம் பார்த்து தீ மூட்டி
மண் வளம் கொடுத்த பூமித்தாய் ...
நினைவாக மன்பானையால்
பால் ஊற்றி கொதிக்க வைத்து
சூரிய கடவுள் தாரிசனம்
தரும் வேலையில் பால் பொங்க ...
பெரியவர்கள் அனைவரும் சூரிய
கடவுளை பார்த்து கோலாவை இட்டு
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் முழங்கி ....
புது அரிசியை பானையில் இட்டு
அதில் சுவை மிகுந்த பழங்கள்
இன்னிப்பு கலந்த பொங்கலை
சூரியனுக்கு படைக்கும் நாள்
பொங்கல் திரு நாள் !
பொங்கல்
*************
மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள
பந்தத்தை சொல்லும் திருநாள் ...
தனக்காக உழைக்க உதவிய அனைத்திற்கும்
நன்றி தெரிவிக்கும் திருநாள் ...
முதல் நாள் தன் வாழ்வு செழிக்க மண்ணில்
விளைந்த அரிசியில் பொங்கல் வைத்து
சுரியபகவானுக்கு படையலிட்டு
முதல் நன்றியை இறைவனுக்கு தெரிவித்தான் ...
இரண்டாம் நாள் தன் வாழ்வாதாரத்துக்கு
உதவிய கால்நடைகளுக்கு குளிப்பாட்டி
பொட்டிட்டு பூ சூட்டி பொங்கலிட்டு
உள்ளம் குளிர நன்றி தெரிவித்தான் ...
மூன்றாம் நாள் தன்னோடு தினம் உழைத்து
மேனி கருத்து களைத்து போன குடும்பத்துக்கு
புதுத்துணி எடுத்து கொடுத்து பெரியோரிடம்
ஆசிவாங்கி காணும் பொங்கலை கொண்டாடினான் ...
மனிதனின் அடிப்படை தேவையோடு வாழ்ந்த வரை
மனிதனின் மகிழ்ச்சி சாத்தியமே ஆனால் இன்று
கால நிலை மாற்றம் மனிதனின் வளர்ச்சி பேராசை
உழவனின் வாழ்வை பொரட்டி போட்டது ...
தேவைக்கு வராத மழையால் காய்ந்த ஆறு
மணல் குவாரியாக மாறி போச்சி
மேய்ச்சலுக்கும் உழவுக்கும் இருந்த
கால்நடைகள் உணவு இன்றி கறிகளாச்சி ...
மனிதனுக்கு மனிதன் இழைத்த கொடுமையால்
உழவனுக்கு கண்ணீரும் கடனுமே சொந்தமாச்சி
மண்ணுக்கும் மனிதனுக்கும் தொடர்பு உண்டு உணர்ந்து
வாழ்ந்தால் தலைமுறை தழைக்கும் அடுத்த பொங்கல் இனிக்கும் .....
மனிதா உணர்வாயா ....