FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on December 31, 2012, 11:25:51 AM
-
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு...
மைதா - கால் கிலோ,
கோதுமை மாவு - கால் கிலோ,
பேக்கிங் பவுடர் - 2 சிட்டிகை,
பால் - கால் கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
மசாலாவுக்கு...
பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு,
கேரட், பீன்ஸ், குடமிளகாய் கலவை - 2 கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பட்டாணி- கால் கப்,
இஞ்சி, பூண்டு - சிறிது,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
சோம்பு சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிக் கலவையை வதக்கி, வேக வைத்த பட்டாணி சேர்த்து, தக்காளியும் சேர்த்து வதக்கவும். அடுத்து இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து, பச்சை வாடை போக நன்கு வதக்கவும். பிறகு வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்... இதுதான் சப்பாத்திக்குள் வைக்கப் போகிற மசாலா.