FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 28, 2012, 11:48:15 AM
-
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 1 கப்,
வெல்லம் - முக்கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைக்கவும். கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கெட்டியாகும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி, அதையும், கலவையில் கொட்டி மறுபடி கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாறவும். முதல் நாள் இரவே கூட செய்து வைக்கலாம். கெட்டுப் போகாது.